என் மலர்
அமெரிக்கா
- இந்தச் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது.
- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்காதது ஏன்?
ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் ரஷிய அதிபர் புதின் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தார். இந்தச் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் முடிந்தது.
இந்நிலையில் புதின், தனது மூன்று ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப சுமார் 2.2 கோடி ரூபாயை ரொக்கமாக செலுத்த வேண்டியிருந்தது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
பேட்டி ஒன்றில் பேசிய அவர், ரஷியா மீது அமலில் இருக்கும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக அமெரிக்க வங்கிகளைப் பயன்படுத்த முடியாத காரணத்தினால், எரிபொருள் நிரப்புவதற்காக ரொக்கமாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது என தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த ரூபியோ, ரஷியா ஏற்கனவே கடுமையான தடைகளின் கீழ் உள்ளது என்றும், புதிய தடைகள் உடனடியாகப் பலன் தராது என்றும் கூறினார்.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் அதன் நிலப்பகுதியை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் ஜெலென்ஸ்கி உறுதியாக நிராகரித்துள்ளார்.
3 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் உக்ரைன் போரினால் ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த காலிறுதியில் இகா ஸ்வியாடெக், காஸ்பர் ரூட் ஜோடி வெற்றி பெற்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, அமெரிக்காவின் கேட்டி மெக்னல்லி-இத்தாலியின் லாரன்சோ முசெட்டி ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக்-காஸ்பர் ரூட் ஜோடி 4-1, 4-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்த ஜோடி நாளை நடைபெறும் அரையிறுதியில் ஜாக் டிராபர்-ஜெசிகா பெகுலா ஜோடியை எதிர்கொள்கிறது.
- ஐ.நா.சபையின் முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.
- இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:
போர் உள்ளிட்ட மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. இதில் இந்திய பிரதிநிதி எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலை போரின்போது லட்சக்கணக்கான பெண்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் செய்த மொத்த பாலியல் வன்முறையின் கொடூரமான குற்றங்கள் முற்றிலும் வெட்கக்கேடான பதிவு ஆகும். 1971-ம் ஆண்டு அட்டூழியங்கள் முதல் மோதல் சூழ்நிலைகளில் பாலியல் வன்முறையின் நீண்ட மற்றும் தொடர்ச்சியான வரலாற்றை பாகிஸ்தான் ராணுவம் கொண்டுள்ளது.
இந்த வருந்தத்தக்க முறை இன்று வரை குறையில்லாமல் தொடர்கிறது. பாகிஸ்தானில் சிறுபான்மைப் பெண்கள் கடத்தல், கட்டாய மதமாற்றங்கள், இளம் வயது திருமணங்கள் மற்றும் பிற துஷ்பிரயோகங்கள் போன்ற துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பாகிஸ்தானின் நீதித்துறை பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்களை அங்கீகரித்துள்ளது.
மோதல் தொடர்பான கொடூரமான பாலியல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மோதல் மண்டலங்களில் பாலியல் வன்முறை தனிப்பட்ட வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல் தலை முறை தலைமுறையாக சமூகங்களில் நீடித்த வடுக்களை விட்டுச்செல்கிறது.
பாலியல் வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா. பொதுச்செயலாளரின் அறக்கட்டளை நிதிக்கு பங்களித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐ.நா.சபையின் இந்த முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் பாலியல் வன்முறையை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு உள்ளன என தெரிவித்தார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த காலிறுதியில் மெத்வதேவ், ஆன்ட்ரிவா ஜோடி தோல்வி அடைந்தது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ்-மிர்ரா ஆண்ட்ரிவா ஜோடி, பிரிட்டனின் ஜாக் டிராபர்-அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய ஜாக் டிராபர்-ஜெசிகா பெகுலா ஜோடி 4-1, 4-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதனால் மெத்வதேவ்-மிர்ரா ஆண்ட்ரிவா ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர்-செக் குடியரசின் சினியாகோவாவுடன் களமிறங்குகிறார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.
இதில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர்- செக் குடியரசின் கேதரினா சினியாகோவாவுடன் களமிறங்குகிறார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ்- சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் களமிறங்குகிறார்.
ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ்-பிரிட்டனின் எம்மா ரானுகாடு உடன் களமிறங்குகிறார்.
போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் களமிறங்குகிறார்.
இதேபோல், கஜகஸ்தான் எலினா ரிபாகினா, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உள்பட பல முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் முன்னணி வீரரும், தரவரிசையில் 18வது இடம் பிடித்துள்ள பிரிட்டனின் டேன் ஈவன்ஸ், தென் ஆப்பிரிக்காவின் லாய்டு ஹாரிஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய லாய்டு ஹாரிஸ் முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடியாக டேன் ஈவன்ஸ் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லாய்டு ஹாரிஸ் 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான டேன் ஈவன்ஸ் அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து விலகினார்.
- சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை டிரம்ப் நாடு கடத்தி வருகிறார்.
- போராட்டம் நடத்திய சில மாணவர்களை குறிவைத்தும் ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை அதிபர் டிரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் போராட்டம் உள்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு மாணவர்களின் விசாவும் ரத்து செய்யப்படுகிறது.
இந்நிலையில் பயங்கரவாதத்தை ஆதரித்ததாக கூறி, 6,000+ வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை ரத்து செய்துள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், குற்றச்செயல்கள், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுதல் போன்ற சட்ட விதிமீறலுக்காகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய சில மாணவர்களை குறிவைத்தும் ட்ரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- சின்சினாட்டி ஓபன் அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது.
- இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், நம்பர் 1 வீரரான சின்னரை எதிர்கொண்டார்.
இறுதிப்போட்டியின் முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சின்னர் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து அல்காரஸ் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.
- ஒருவேளை இது எளிதான ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
- ஈரானின் எதிர்கால அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம்
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் 7 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போர் எப்போது முடிவடையும் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் போர் முடிவடையும். புதின் அதை முடிக்க விரும்புகிறார். முழு உலகமும் இதனால் சோர்வடைந்துவிட்டது.
நான் 6 போர்களை நிறுத்தியுள்ளேன். ஒருவேளை இது எளிதான ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இது எளிதான ஒன்றல்ல. இது இருப்பதிலேயே கடினமானது. இந்தியா-பாகிஸ்தான்-ஐ எடுத்துக்கொண்டால் நாம் பெரிய இடங்களைப் பற்றிப் பேசுகிறோம்.
இந்தப் போர்களில் சிலவற்றைப் பாருங்கள். நீங்கள் ஆப்பிரிக்காவுக்குச் சென்று அதைப் பாருங்கள். ரூவாண்டா மற்றும் காங்கோ இடையே இந்த மோதல் 31 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஈரானின் எதிர்கால அணுசக்தி திறனை நாங்கள் முற்றிலுமாக அழித்தோம் என்பதைத் தவிர்த்து, மொத்தம் 6 போர்களைச் முடித்துள்ளோம்.
இந்த (ரஷியா - உக்ரைன்) போரையும் நாங்கள் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று நான் நம்பிக்கையுடன் உணர்கிறேன்" என்று கூறினார். அப்போது அவர் அருகில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இருந்தார்.
கடந்த ஏப்ரல் 22 ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட மோதல் மே 9 அன்று போர் நிறுத்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்த போர் நிறுத்தத்தை வர்த்தக தடைகளை வைத்து மிரட்டி இரு நாட்டு தலைவர்களையும் சம்மதிக்க வைத்து தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை 25 முறைக்கும் மேலாக கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன்.
- வெறும் போர் நிறுத்தம் எங்கள் நோக்கமல்ல.
உக்ரைன் ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றி போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெருமுயற்சி எடுத்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 15 இல் அலாஸ்காவுக்கு ரஷிய அதிபர் புதினை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முக்கிய முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் இன்று, வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வாஷிங்டனுக்கு வரவழைத்து பேசுவார்த்தை நடத்தியுள்ளார் டிரம்ப். முதலில் ஜெலன்ஸ்கியுடன் தனியாக தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேசினார். தொடர்ந்து அமெரிக்கா வருகை தந்த 7 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஜெலன்ஸ்கி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலன்ஸ்கியும் விரும்புகிறார், புதினும் விரும்புகிறார். இந்த போரால் உலக நாடுகள் தளந்துவிட்டன. விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும். வெறும் போர் நிறுத்தம் எங்கள் நோக்கமல்ல.

நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடுய அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்வோம். இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளேன். இந்த போர் சற்று கடினமானது. இந்த போருக்கு ஜோ பைடன் தான் காரணம்.
பேச்சுவார்த்தையின்போது புதினுடன் போனில் பேசினேன். இதன் பின்னரும் பேச உள்ளேன். ஜெலன்ஸ்கி, புதின் இருவருடனும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளேன்.
புதின் ஒத்துழைப்பு வழங்குவார் என நம்புகிறேன்.பேச்சுவார்த்தை கடினம், ஆனால் சாத்தியம். உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இன்னும் 2 வாரங்களில் முடிவு தெரிந்துவிடும்" என்று தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் உக்ரைனுக்கு மேலும் உதவுகளை டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களிடம் ஜெலன்ஸ்கி கோரினார்.
முன்னதாக இந்த சந்திப்பின் முன், கிரீமியாவையும் நேட்டோ உறுப்பினராகும் ஆசையையும் உக்ரைன் கைவிட்டால் போர் நிற்கும் என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விளக்கம் அளித்துள்ளார்.
- ஐரோப்பிய நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதால் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் அடங்கும். ஆனால் சீனாவை விடுத்தது இந்தியாவை மட்டும் அமெரிக்கா குறிவைப்பது ஏன் என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்தது.
இந்நிலையில் இந்த கேள்விக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, இந்தியாவை போல சீனா மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயரும் என்று அவர் கூறினார்.
அவர் கூறியதாவது, "ரஷியாவிலிருந்து சீனா வாங்கி விற்கும் எண்ணெயில் பெரும் சதவீதத்தை ஐரோப்பிய நாடுகள் வாங்குகின்றன. இது தவிர, இயற்கை எரிவாயுவையும் வாங்குகின்றன. இந்த சூழலில், தடைகள் விதிக்கப்பட்டால், வாங்குபவர்கள் மாற்று வழிகளைத் தேட வேண்டியிருக்கும். இது சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையை அதிகரிக்கும்" என்று கூறினார்.
சீனா மற்றும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான அமெரிக்க செனட் மசோதாவை உருவாக்கும் போது ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.
ரஷியா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் ஐரோப்பிய நாடுகள் மீது தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
தற்போது இது குறித்து தனக்கு தகவல் இல்லை என்றாலும் இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கும் எண்ணம் இல்லை என்று அவர் கூறினார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஐரோப்பிய நாடுகள் ஆக்கபூர்வமான பங்கை வகிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- முதலில் ஜெலன்ஸ்கியுடன் தனியாக தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேசினார்.
- அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அங்கு உக்ரைனில் கார்க்கிவ் நகர் மீது ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைன் ரஷியா இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றி போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெருமுயற்சி எடுத்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 15 இல் அலாஸ்காவுக்கு ரஷிய அதிபர் புதினை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முக்கிய முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் இன்று, வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வாஷிங்டனுக்கு வரவழைத்து பேசுவார்த்தை நடத்தியுள்ளார் டிரம்ப். முதலில் ஜெலன்ஸ்கியுடன் தனியாக தனது ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பேசினார்.
தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் வருகை தந்துள்ள நிலையில் அவர்களை சந்தித்த டிரம்ப் கூட்டாக ஜெலென்ஸ்கியை போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு சம்மதிக்க வைக்க அழுத்தம் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
எல்லாம் சரியாக நடந்தால் ஜெலன்ஸ்கி, புதின் இருவருடனும் சேர்நது ஒரு மீட்டிங் போடுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த வெள்ளை மாளிகை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அங்கு உக்ரைனில் கார்க்கிவ் நகர் மீது ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.






