என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அவர்கள் போர் வேண்டாம் என்று கைவிட்டார்கள்.
    • 7 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தின.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போர் உட்பட ஏழு போர்களை தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்.

    வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்த ஏழு போர்களில் நான்கு போர்களை, வரி விதிப்பு மற்றும் வர்த்தகத்தைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

    டிரம்ப் பேசுகையில், "நான் அவர்களிடம்வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து போரிட்டால், உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்ய மாட்டோம், மேலும் 100% வரி விதிப்போம் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அனைவரும் போர் வேண்டாம் என்று கைவிட்டார்கள்" என்று கூறினார்.

    மேலும், "நான் இந்த எல்லாப் போர்களையும் நிறுத்தியுள்ளேன்.  இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பெரிய போர் ஏற்பட்டிருக்க வேண்டியது!

    அது அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடும். இரு நாடுகளும் 7 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தின. 24 மணி நேரத்திற்குள் சண்டையை நிறுத்தவில்லை என்றால் வர்த்தகம் நிறுத்தப்படும் என்று நான் எச்சரித்ததால்தான் போர் நின்றது" என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் எந்த நாட்டு ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது என்று அவர் குறிப்பிடவில்லை.  

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
    • பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, சுவிட்சர்லாந்தின் ரெபேகா மசரோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பிரிட்டனின் எம்மா ராடுகானு 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானின் இனா ஷிபஹராவை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
    • இதில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சக நாட்டவரான எமிலோ நவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜூன் மாதம் அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பின் அறிக்கை கசிந்தது.
    • பணி நீக்கம் தொடர்பாக பாதுகாப்பு துறை விளக்கம் அளிக்கவில்லை.

    அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் உளவுப்பிரிவு தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெப்ரி க்ரூஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 மூத்த ராணுவ அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்செத் பிறப்பித்து உள்ளார். இந்த பணி நீக்கம் தொடர்பாக பாதுகாப்பு துறை விளக்கம் அளிக்கவில்லை.

    ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்படவில்லை என்று கடந்த ஜூன் மாதம் கசிந்த அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மதிப்பீடு முற்றிலும் தவறானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் பென்டகனின் உளவுப்பிரிவு தலைவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் தொடங்குகிறது.
    • இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், செக் குடியரசு வீரர் விட் கோப்ரிவா உடன் மோதுகிறார். நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்காவுடன் மோதுகிறார்.

    இதேபோல், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்காவின் டெய்லர் ப்ரிட்ஸ், டாம்மி பால், நார்வேவின் கேஸ்பர் ரூட், ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் உள்ளிட்டோரும் முதல் நாளில் களம் இறங்குகின்றனர்.

    நான்கு முறை யுஎஸ் ஓபன் உள்பட மொத்தம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செர்பியாவின் 38 வயதான ஜோகோவிச், முதல் சுற்றில் அமெரிக்காவின் லர்னர் டியெனை எதிர்கொள்கிறார்.

    மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான பெலாரசின் அரினா சபலென்கா முதல் சுற்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை ரெபேக்கா மாஸரோவாவுடன் மோதவுள்ளார்.

    இதேபோல், போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கோப், ஜெசிகா பெகுலா, மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, ஜப்பானின் நவோமி ஒசாகா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, இங்கிலாந்தின் எம்மா ராடுகானு ஆகியோரும் முதல் நாளில் களம் காண்கின்றனர்.

    • ரஷிய அதிகாரிகள் தங்கள் 3 ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப 2.5 கோடியை ரொக்கமாக கொடுத்தனர்.
    • அலாஸ்காவை சேர்ந்த மார்க் வாரன் என்ற நபருக்கு ரஷிய அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றை பரிசளித்திருந்ததும் வைரலானது.

    உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரஷிய அதிபர் புதின் அமெரிக்கா சென்றார்.

    அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முக்கிய முடிவும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில் ரஷிய அதிபர் அமெரிக்காவுக்கு சென்றது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் வங்கிக்கணக்கை பயன்படுத்த முடியாமல், ரஷிய அதிகாரிகள் தங்கள் 3 ஜெட் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப 2.5 கோடியை ரொக்கமாக கொடுத்தனர்.

    அதேபோல் அலாஸ்காவை சேர்ந்த மார்க் வாரன் என்ற நபருக்கு ரஷிய அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் ஒன்றை பரிசளித்திருந்ததும் வைரலானது.

    இதற்கிடையே ரஷிய அதிபர் புதின் அமெரிக்கா சென்றபோது அவருடன் சென்ற அதிகாரிகள் அவரின் மலம் அடங்கிய சூட்கேசை உடன் கொண்டு சென்றது வைரலாகி வருகிறது.

    வெளிநாட்டு பயணங்களில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளிநாடு செல்லும்போது, அவர் உடன் "Poop Suitcase" எனப்படும் சிறப்பு பெட்டி கொண்டு செல்லப்படுகிறது.

    இதன் மூலம், 72 வயதான புதினின் மலம் மற்றும் சிறுநீர் கழிவுகளை மற்ற நாடுகள் ஆய்வு செய்து உடல்நிலை, நோய் அல்லது உடல் பலவீனங்களை கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடைமுறையை பின்பற்றுகின்றனர் என்று கூறப்படுகிறது.  

    • வெள்ளை மாளிகையில் அதிபர் பணியாளர் அலுவலத்தின் இயக்குநராக உள்ள செர்ஜியோ கோர் பரிந்துரை.
    • அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் செர்ஜியோ கோர் முக்கியப் பங்கு வகித்தவர்.

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை நியமித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதிபர் டிரம்ப் அரசியல் உதவியாளர் செர்ஜியோ கோரை வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.

    வெள்ளை மாளிகையில் அதிபர் பணியாளர் அலுவலத்தின் இயக்குநராக உள்ள செர்ஜியோ கோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் செர்ஜியோ கோர் முக்கியப் பங்கு வகித்தவர்.

    • விசா வைத்திருப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும்.
    • புதிய விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கும், ஏற்கனவே விசா உள்ள அனைவருக்கும் பொருந்தும்.

    5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை மதிப்பாய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    இந்த மதிப்பாய்வில் யாராவது விசா விதிகளை மீறியது கண்டறியப்பட்டால், அவர்களின் விசா உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் அமெரிக்காவில் இருந்தால், அவர்களை நாட்டிலிருந்து நாடு கடத்தும் செயல்முறை தொடங்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது

    அனைத்து விசா வைத்திருப்பவர்களின் பதிவுகளும் உன்னிப்பாக சரிபார்க்கப்படும். விசா வழங்கப்பட்ட பிறகு அவர்களின் நடத்தையில் ஏதேனும் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? அவர்கள் விதிகளுக்கு மாறாக நடந்து கொள்கிறார்களா? விசா காலாவதியான பிறகு நாட்டில் தங்குவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது, பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது, பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்பது அல்லது பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பது போன்ற பிரச்சினைகளை அதிகாரிகள் ஆராய்வார்கள்.

    இதற்காக, விசா வைத்திருப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள், அவர்களின் சொந்த நாடுகளில் சட்ட அமலாக்க நிறுவனங்கள் வைத்திருக்கும் பதிவுகள் மற்றும் அமெரிக்காவில் அவர்களின் நடத்தை தொடர்பான அனைத்து விவரங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது புதிய விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கனவே விசா உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்குக்கும் அதிகமான விசாக்களை, குறிப்பாக மாணவர் விசாக்களை நான்கு மடங்கு அதிகமாக ரத்து செய்துள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. டிரம்ப் பதவியேற்றதிலிருந்து 6,000க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   

    • டிரம்ப் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களின் மதிப்பை உயர்த்தி காட்டி வங்கிக் கடன்கள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றது.
    • துணிச்சலுடன் செயல்பட்டதற்காக நீதிமன்றத்தை மதிப்பதாக டிரம்ப் மனமுவந்துள்ளார்.

    டிரம்ப் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களின் மதிப்பை உயர்த்தி காட்டி வங்கிக் கடன்கள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களைப் பெற்றதாக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் 2022 இல் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 2024 இல் அவருக்கு 500 மில்லியன் டாலர் அபராதம்விதிக்கப்பட்டது.

    இதற்கிடையே கடந்த வருட இறுதியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் அமெரிக்க அதிபரானார்.

    இந்நிலையில் அதிபர் டிரம்ப் 500 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு அதிகாரசபை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    முந்தைய உத்தரவில் அபராதம் அதிகமாக விதிக்கப்பட்டது என்றும், அமெரிக்க அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தை மீறியது என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    நியூயார்க்கில் தனது வணிகத்தை முற்றிலுமாக பாதித்த உத்தரவை ரத்து செய்ய துணிச்சலுடன் செயல்பட்டதற்காக நீதிமன்றத்தை மதிப்பதாக டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் மனமுவந்துள்ளார். 

    • இந்தியா உடனான டிரம்ப் நிர்வாகத்தின் உறவு மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது.
    • சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம்.

    வாஷிங்டன்:

    இந்தியா மீது 25 சதவீதம் இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்துள்ளார்.

    இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவைத் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ஐநாவுக்கான அமெரிக்க முன்னாள் தூதரான நிக்கி ஹாலே கூறியுள்ளதாவது:

    இந்தியா உடனான டிரம்ப் நிர்வாகத்தின் உறவு மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறது. சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு இந்தியாவின் தயவும், உறவும் மிகவும் அவசியம்.

    இந்தியா டிரம்பின் கருத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒரு தீர்வு காண அமெரிக்கா உடன் இணைந்து செயல்பட வேண்டும்.

    இந்தியா, சீனாவைப் போல ஒரு எதிரி அல்ல. டிரம்ப் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை இலக்குகளை அடைய, அமெரிக்கா- இந்தியா உறவுகளை மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானவை.

    ஜவுளி, மலிவான தொலைபேசிகள் மற்றும் சோலார் பேனல்கள் போன்ற உற்பத்தி செய்ய முடியாத தயாரிப்புகளை சீனா போன்ற அளவில் உற்பத்தி செய்யும் திறனில் இந்தியா சிறந்து விளங்குகிறது.

    எளிமையாகச் சொன்னால், இந்தியாவின் சக்தி வளரும்போது சீனாவின் வளர்ச்சி குறைந்து விடும் என தெரிவித்தார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக், காஸ்பர் ரூட் ஜோடி தோல்வி அடைந்தது.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றது. 2வது செட்டை இகா ஸ்வியாடெக் ஜோடி 7-5 என வென்றது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 10-6 என வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தியது.

    • இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர 'அமெரிக்கக் கட்சி' உருவாக்கப்பட்டது
    • குடியரசு கட்சியின் எதிர்கால வாரிசாகக் கருதப்படுகிறார்.

    கடந்த ஜூலை மாதம் டிரம்ப் நிர்வாகத்தால் கொடுவரப்பட்ட வரி குறைப்பு மற்றும் செலவு மசோதாவை கடுமையாக எதிர்த்த உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க், அதிபர் டிரம்ப் உடனான நட்பை முறித்துக்கொண்டார்.

    அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே, புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டார்.

    "இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திருப்பித் தர 'அமெரிக்கக் கட்சி' உருவாக்கப்பட்டது என்று அறிவித்தார். ஊழல் மற்றும் ஊதாரித்தனத்தால் நாடு திவாலாகிறது. நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம், ஜனநாயகத்தில் அல்ல" என்று கடுமையான கூறியிருந்தார்.

    2026 இடைக்காலத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்பதையும் மஸ்க் அப்போது தெரிவித்திருந்தார்.

    ஆனால் சமீபத்திய காலங்களாக சைலண்ட் மோடில் இருக்கும் மஸ்க் பிஸ்னஸில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் குடியரசு கட்சியின் எதிர்கால வாரிசாகக் கருதப்படும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் மஸ்க் கடந்த சில வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    2028 ஆம் ஆண்டு ஜனாதிபதி வெப்பாளராக ஜே.டி. வான்ஸை ஆதரிக்க மஸ்க் ஆர்வமாக உள்ளார் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    2024 தேர்தலில் டொனால்டு டிரம்ப் மற்றும் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மஸ்க் 300 மில்லியன் டாலர்களை செலவிட்டது குறிப்பிடதக்கது. 

    ×