search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    குண்டு வீச்சுக்கு மத்தியில் 10 கி.மீ. நடந்து உக்ரைனுக்கு தப்பி வந்த 98 வயது மூதாட்டி
    X

    குண்டு வீச்சுக்கு மத்தியில் 10 கி.மீ. நடந்து உக்ரைனுக்கு தப்பி வந்த 98 வயது மூதாட்டி

    • மூதாட்டி லிடியா ஸ்டெபனிவ்னா குண்டுவீச்சுக்கு மத்தியில் ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோ மீட்டர் நடந்தே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்றார்.
    • உணவு, தண்ணீர் இல்லாமல் நடந்ததாகவும், பலமுறை விழுந்ததாகவும், ஆனால் தன்னம்பிக்கையுடன் நடந்து சென்றதாகவும் மூதாட்டி தெரிவித்தார்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் ரஷிய படையால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் டொனெட்ஸ்கில் உள்ள ஓச்செரி டைன் பகுதியில் இருந்து 98 வயது மூதாட்டியான லிடியா ஸ்டெபனிவ்னா என்பவர் குண்டுவீச்சுக்கு மத்தியில் ஊன்றுகோல் உதவியுடன் 10 கிலோ மீட்டர் நடந்தே உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்றார். அவரை ராணுவத்தினர் மீட்டு தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றனர். தான் உணவு, தண்ணீர் இல்லாமல் நடந்ததாகவும், பலமுறை விழுந்ததாகவும், ஆனால் தன்னம்பிக்கையுடன் நடந்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×