என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்தாண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தியது.
    • ஏற்கனவே வருடக் கணக்கில் வேலை செய்து வந்தவர்களை பணிநீக்கம் செய்தனர்.

    இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பதால் நன்மை ஏற்பட்டாலும், பெரும்பாலும் தீங்காகவே அமைகிறது. அந்த வகையில், AI தொழில் நுட்பம் வந்த பிறகு பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    அந்த வகையில், மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

    நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் AI பிரிவு தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங் தெரிவித்துள்ளார்.

    மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் AI உள்கட்டமைப்பு அலகுகள், அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவு (FAIR) மற்றும் பிற தயாரிப்பு தொடர்பான பதவிகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    இந்தாண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தி, ஏற்கனவே வருடக் கணக்கில் வேலை செய்து வந்தவர்களை பணிநீக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • துபாயில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.
    • துபாய் சர்வதேச கல்வி நகரில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

    துபாய்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (வயது 18). இவர் துபாயில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் துபாய் சர்வதேச கல்வி நகரில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வைஷ்ணவ் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேலே பறந்த சில நிமிடங்களில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
    • இதனால் ஓடுபாதையில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.

    கராகஸ்:

    வெனிசுலாவின் டாச்சிரா மாகாணம் பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.

    ரன்வேயை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ரன்வேயில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேரும் கருகி பலியாகினர்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசியான் அமைப்பின் 47-வது உச்சி மாநாடு 26-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது.
    • பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆசியான் மாநாட்டில் பங்கேற்க மலேசியா அழைப்பு விடுத்தது.

    கோலாலம்பூர்:

    ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) அமைப்பின் 47-வது உச்சி மாநாடு வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறுகிறது.

    இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் அமைப்புக்கும், இந்தியாவுக்கும் சமீபத்திய ஆண்டுகளாக இருதரப்பு உறவு முன்னேற்றம் அடைந்து வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆசியான் மாநாட்டில் பங்கேற்க மலேசியா அழைப்பு விடுத்தது. இதையடுத்து பிரதமர் மோடி மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், மலேசியாவில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியது.

    இதற்கிடையே மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

    இதுதொடர்பாக மலேசிய பிரதமர் அன்வர் கூறுகையில், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். ஆசியான் உச்சி மாநாட்டிற்கான தயாரிப்புகள் குறித்து இருவரும் விவாதித்தோம்.

    அதே வேளையில் இந்தியாவில் தீபாவளி பண்டிகை இன்னும் கொண்டாடப்படுவதால் ஆன்லைனில் கலந்து கொள்வதாக மோடி தெரிவித்தார். அவரது இந்த முடிவை மதிக்கிறேன். மலேசியா-இந்தியா உறவை வலுப்படுத்துவதற்கும், ஆசியான்-இந்தியா ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கும் மலேசியா தொடர்ந்து உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.

    ஆசியான் உச்சி மாநாட்டில் மலேசியாவின் அழைப்பை ஏற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரதமர் மோடியின் மலேசிய பயணம் ரத்து மூலம் டிரம்ப் உடனான சந்திப்பு இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா இன்று வாடிகனுக்கு வருகை தந்தனர்.
    • ஆங்கிலம் மற்றும் லத்தீன் ஆகிய இரண்டு மொழிகளில் பிரார்த்தனை நடந்தது

    கடந்த 500 ஆண்டுகளில் முதல் முறையாக போப் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை செய்தனர்.

    கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஆங்கிலிகன் திருச்சபை பிரிந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டு பிரார்த்தனை இதுவாகும்.

    தங்கள் தேவாலயங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைக்காக மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா இன்று வாடிகனுக்கு வருகை தந்தனர்.

    இந்த பிரார்த்தனை மைக்கேலேஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியமான தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட்டின் கீழ் உள்ள சிஸ்டைன் சேப்பலில் நடைபெற்றது. ஆங்கிலம் மற்றும் லத்தீன் ஆகிய இரண்டு மொழிகளில் பிரார்த்தனை நடந்தது 

    • ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன்" என்றார்.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சில நாட்களுக்கு முன்பு டிரம்ப்-புதின் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

    இதற்கிடையே ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறவிருந்த டிரம்ப்- புதின் இடையேயான சந்திப்பு திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதினை சந்தித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.

    உக்ரைன் போர் விவகாரத்தில் ஏற்கனவே ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இந்த நிலையில் போரை நிறுத்த ரஷியா மறுத்து வருவதால் அந்நாட்டின் 2 மிகப்பெரிய எண்ணை நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்து உள்ளது.

    ரோஸ்நெப்ட் , லுகோயில் ஆகிய 2 நிறுவனங்கள் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் துணை நிறுவனங்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இவை மிகப்பெரிய தடைகள். ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. "போர் முடிவுக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன்" என்றார்.

    மேலும் அமெரிக்க கருவூல துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறும்போது,"இந்த அர்த்தமற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் புதின் மறுத்துவிட்டதால், ரஷியாவின் போர் எந்தி ரத்திற்கு நிதியளிக்கும் அந்நாட்டின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்தது போல் புதின் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை என்றார்.

    • தொடரில் நடித்து வரும் ஸ்மிரிதி இரானி, யாரோ ஒருவருடன் வீடியோ காலில் பேசுகிறார்.
    • நாங்கள் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறுகிறார்.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனர், பில்கேட்ஸ். அத்துடன் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மிகுந்த பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர்.

    இந்த பணி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவின் பிரபல இந்தி டி.வி. தொடரில் முதல் முறையாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

    அந்தவகையில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான ஸ்மிரிதி இரானி நடித்து வரும் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி 2' என்ற தொலைக்காட்சி தொடரில் பில் கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த தொடருக்கான முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. அதில் அந்த தொடரில் நடித்து வரும் ஸ்மிரிதி இரானி, யாரோ ஒருவருடன் வீடியோ காலில் பேசுகிறார்.

    அதில், 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா' என தொடங்கும் ஸ்மிரிதி இரானி, 'நீங்கள் அமெரிக்காவில் இருந்து நேரடியாக என் குடும்பத்துடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்' என கூறுகிறார்.

    அவருடன் எதிர்முனையில் பேசியது பில்கேட்ஸ்தான் என பின்னர் ஸ்மிரிதி இரானி உறுதிப்படுத்தினார். இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும் அவர் கூறினார்.

    முன்னதாக அமெரிக்காவின் பிரபல டி.வி. தொடரான 'தி பிக் பேங்க் தியரி' என்ற நிகழ்ச்சியிலும் பில்கேட்ஸ் தலைகாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தீவு நாட்டில் கொசுக்கள் இருப்பதை விஞ்ஞானிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
    • ஹால்டசன் மூன்று மாதிரிகளை சேகரித்தார்.

    பூமியில் கொசுக்கள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்கள் ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே என்று கருதப்பட்டது. கிரகத்தின் மிகக் குளிரான பகுதிகளில் கூட செழித்து வளரும் பூச்சிகள் ஏன் அங்கு தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ந்து வந்தனர்.

    இந்த நிலையில், பூமியில் கொசுக்கள் இல்லாத சில இடங்களில் ஒன்றாக நீண்ட காலமாக கொண்டாடப்பட்ட ஐஸ்லாந்து, அந்த தனித்துவத்தை இழந்துவிட்டது. வேகமாக வெப்பமடைந்து வரும் கிரகத்தின் மற்றொரு காணக்கூடிய விளைவைக் குறிக்கும் வகையில், தீவு நாட்டில் கொசுக்கள் இருப்பதை விஞ்ஞானிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

    இந்த மாத தொடக்கத்தில் உள்ளூர் பூச்சி ஆர்வலர் பிஜோர்ன் ஹ்ஜால்டசன் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டார். அவர் ரெய்க்ஜாவிக் நகரின் வடமேற்கே உள்ள க்ஜோஸின் பனிப்பாறை பள்ளத்தாக்கில் அந்துப்பூச்சிகளைக் கவனித்தபோது "சிவப்பு ஒயின் ரிப்பனில் ஒரு விசித்திரமான ஈ" என்று முதலில் தற்செயலாகக் கண்டார்.

    "இது நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒன்று என்பதை உடனடியாக என்னால் உணர முடிந்தது" என்று கூறிய ஹால்டசன் நகைச்சுவையுடன், "கடைசி கோட்டையும் இடிந்து விழுந்தது போல் தெரிகிறது" என்று கூறினார்.

    ஹால்டசன் மூன்று மாதிரிகளை சேகரித்தார். இரண்டு பெண் கொசுக்கள் மற்றும் ஒரு ஆண் கொசு - அவற்றை ஐஸ்லாந்து இயற்கை வரலாற்று நிறுவனத்திற்கு சரிபார்ப்புக்காக அனுப்பினார். பூச்சியியல் வல்லுநர் மத்தியாஸ் ஆல்ஃபிரட்சன், ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படும் குலிசெட்டா அன்யுலாட்டா என்ற குளிர் எதிர்ப்பு கொசு இனம் பூச்சிகள் என்பதை உறுதிப்படுத்தினார்.

    • சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான ‘ஹயபூசா’வை காட்சிப்படுத்தினர்.
    • மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்.

    இளைய தலைமுறையினரின் கனவு பட்டியலில் மோட்டார் சைக்கிள் வாங்குவது முக்கியமானதாக ஒன்றாக இருக்கும். பல லட்சம் செலவழித்து தங்களுக்கு பிடித்த மோட்டார் சைக்கிளை வாங்குவதில் மெனக்கெடுவார்கள். அந்த மோட்டார் சைக்கிளே தங்கத்தில் இருந்தால் அவற்றை வாங்குவதற்கு என தனிக்கூட்டம் முந்தும் அல்லவா.

    அவ்வாறான சம்பவம் துபாயில் அரங்கேறியுள்ளது. துபாயில் சர்வதேச வாகன கண்காட்சி நடந்தது. இதில் சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான 'ஹயபூசா'வை காட்சிப்படுத்தினர்.

    மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளை அவர்கள் முழுக்க முழுக்க தங்கத்தில் வடிவமைத்திருந்தனர். இதன் விலை ரூ.1.67 கோடியாம். இதனை சுற்றி வாலிபர்கள் ஈக்கள் மொய்ப்பது போல சுற்றி வர அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



    • தென் கொரியாவில் அடுத்த வாரம் ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாடு நடக்கிறது.
    • இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பியாங்காங்:

    உலக நாடுகளின் வர்த்தகப் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா ராணுவம் அதி நவீன ஏவுகணைகளைத் தயாரித்து சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே, தென் கொரியாவில் அடுத்த வாரம் நடக்கவுள்ள ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தென் கொரியாவின் புதிய அதிபர் லீ ஜே மூங் ஆகியோரை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்பதால் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், வடகொரியா ராணுவம் நேற்று அதி நவீன ஏவுகணைகளை வானில் ஏவி பரிசோதனை செய்தது. கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை நோக்கி ஏவி வடகொரியா ராணுவம் சோதித்தது என தென் கொரியா ராணுவம் புகார் அளித்துள்ளது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • பெட்ரோல் கசிந்து வெளியேறியபோது ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.

    அபுஜா:

    மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் லகோஸ் மாகாணத்தில் இருந்து நைஜர் மாகாணத்திற்கு டேங்கர் லாரியில் நேற்று பெட்ரோல் கொண்டு செல்லப்பட்டது.

    நைஜர் மாகாணத்தின் கட்சா பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இதனால் டேங்கர் லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது.

    இந்த சம்பவத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள், வாகனங்களில் பயணித்தவர்கள் என 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெளிநாட்டில் இருந்து வருபவர்களை கஃபீல் எந்த வேலைக்கும் அமர்த்த முடியும்.
    • வேறு வேலைக்கு மாற விரும்பினால், கஃபீல் பயண ஆவணங்களை பறிமுதல் செய்து வைத்து விடுவார்.

    சவூதி அரேபியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலான சர்ச்சைக்குரிய கஃபாலா தொழிலாளர் ஸ்பார்ன்சர்ஷிப் முறை ரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு, அந்த மாதம் தொடக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

    இது ஒரு நவீன கால அடிமை முறையாக பார்க்கப்படுகிறது. இந்த முறைப்படி கஃபீல் என அழைக்கப்படும் உத்தரவாதம் வழங்குபவர் அல்லது பிணை வழங்குபவர் (பொதுவாக முதலாளி) தொழிலாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் கட்டுப்படுத்த முடியும். அவர்கள் வேறு வேலைக்கு செல்ல விரும்பினால் அல்லது சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பினாலும் கூட, டிராவல் ஆவணங்களை பறிமுதல் வைத்துக் கொள்ள இந்த முறை அனுமதி அளித்தது.

    இந்த முறையால் மாட்டிக்கொண்ட கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த செவிலியர் ஜெசிந்தா மென்டோன்சா வாழக்கை கொடுமையாக இருந்தது.

     கணவர் இறந்ததால், மூன்று குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. செவிலியரான ஜெசிந்தா, செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை பார்த்து, மாதம் 25 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் என்பதால் கத்தாருக்கு செல்ல விரும்பினார். ஆனால், ஏஜென்ட் அவரை ஏமாற்றி சவூதி அரேபியாவுக்கு கடத்திச் சென்றனர்.

    அங்கு உள்ள ஒருவரிடம் ஒப்படைத்தனர். அந்த உரிமையாளரின் தாய் மற்றும் மூன்று மனைவிகளுக்கு பணிபுரிய வேண்டியதாயிற்று. ஒரு நாளில் 16 மணி நேரம் வேலை வாங்கிவிட்டு, சரியாக சாப்பாடு வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். கஷ்டப்பட்டு அமைச்சகம் உதவியுடன் ஜெசிந்தா மீட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார்.

    இந்த முறையால் இந்தியாவைச் சேர்ந்த 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வந்தனர். இவர்களுக்கு இனிமேல் இதுபோன்று கொடுமைகள் நடக்காது.

    இஸ்ரேல் மற்றும் பஹ்ரைனில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதைப் போல, சவுதி அரேபியாவிலும் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்வாறு செய்யக்கூடாது. குவைத், லெபனான், கத்தார் போன்ற நாடுகளில் வெவ்வேறு வடிவங்களில் இந்த முறை இன்னும் இருந்து வருகிறது.

    இதுபோன்ற நாடுகளில் வெளிநாட்டைச் சேர்ந்த 2.5 கோடி வெளிநாட்டினர் வாழ்ந்து வருகின்றனர். அதில இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சுமார் 75 லட்சம் பேர் ஆவார்கள்.

    பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் "Vision 2030" மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த முறை ரத்து செய்யப்படும் என ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது.

     

    வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாட்டின் பிம்பத்தை மாற்றுவதற்காக பல டிரில்லியன் டாலர் செலவில் மறுசீரமைப்பு செய்ய பட்டத்து இளவரசர் முடிவு செய்துள்ளார். 2029 ஆசிய விளையாட்டு போட்டிக்கு முன்னதாக இந்த மறுசீரமைப்பு செய்ய சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.

    இதன் மூலம் 1.3 கோடி வெளிநாட்டு தொழிலாளர்களில், 25 லட்சம் இந்தியர்கள் பயன் அடைவார்கள்.

    சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் பிற உலகளாவிய நிறுவனங்கள், வளைகுடா நாடுகள் கஃபாலா முறையைப் பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டின. அவை 'ஸ்பான்சர்ஷிப்' என்ற போர்வையில் மனித கடத்தலை அனுமதிப்பதாக குற்றம் சாட்டின.

    பெண்கள்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. கஃபீல்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களை உரிமைக் குழுக்கள் ஆவணப்படுத்தியுள்ளன. உதாரணமாக, 2017 ஆம் ஆண்டில், குஜராத்தில் ஒரு பெண் சவுதி அரேபியாவில் தனது 'ஸ்பான்சரால்' பாலியல் அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டார், பின்னர் இந்திய அரசாங்கத்தால் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

    இதேபோல் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

    கஃபாலா தொழிலாளர் ஸ்பான்சர் முறை, 1950ஆம் ஆண்டுவாக்கில், வெளிநாட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு வந்த திறன் மற்றும் திறன் அற்ற தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் வகையில கொண்டு வரப்பட்டது. கட்டுமான தொழில் அல்லது உற்பத்தி துறைகளில் அவர்கள் பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகித்தனர். பொருளாதார் சரிந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து தொழிலாளர்கள் கஃபீல் என்பதற்குள் கட்டப்பட்டனர். அவர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. தொழிலளர்கள் வாழ்க்கை உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்தும் முதலாளிகளாக இருந்தனர்.

    முதலாளின் அனுமதி இன்று அவதூறு வழக்கு தொடர முடியாது.

    ×