என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்லாந்து"

    • தீவு நாட்டில் கொசுக்கள் இருப்பதை விஞ்ஞானிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
    • ஹால்டசன் மூன்று மாதிரிகளை சேகரித்தார்.

    பூமியில் கொசுக்கள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்கள் ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே என்று கருதப்பட்டது. கிரகத்தின் மிகக் குளிரான பகுதிகளில் கூட செழித்து வளரும் பூச்சிகள் ஏன் அங்கு தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ந்து வந்தனர்.

    இந்த நிலையில், பூமியில் கொசுக்கள் இல்லாத சில இடங்களில் ஒன்றாக நீண்ட காலமாக கொண்டாடப்பட்ட ஐஸ்லாந்து, அந்த தனித்துவத்தை இழந்துவிட்டது. வேகமாக வெப்பமடைந்து வரும் கிரகத்தின் மற்றொரு காணக்கூடிய விளைவைக் குறிக்கும் வகையில், தீவு நாட்டில் கொசுக்கள் இருப்பதை விஞ்ஞானிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

    இந்த மாத தொடக்கத்தில் உள்ளூர் பூச்சி ஆர்வலர் பிஜோர்ன் ஹ்ஜால்டசன் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டார். அவர் ரெய்க்ஜாவிக் நகரின் வடமேற்கே உள்ள க்ஜோஸின் பனிப்பாறை பள்ளத்தாக்கில் அந்துப்பூச்சிகளைக் கவனித்தபோது "சிவப்பு ஒயின் ரிப்பனில் ஒரு விசித்திரமான ஈ" என்று முதலில் தற்செயலாகக் கண்டார்.

    "இது நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒன்று என்பதை உடனடியாக என்னால் உணர முடிந்தது" என்று கூறிய ஹால்டசன் நகைச்சுவையுடன், "கடைசி கோட்டையும் இடிந்து விழுந்தது போல் தெரிகிறது" என்று கூறினார்.

    ஹால்டசன் மூன்று மாதிரிகளை சேகரித்தார். இரண்டு பெண் கொசுக்கள் மற்றும் ஒரு ஆண் கொசு - அவற்றை ஐஸ்லாந்து இயற்கை வரலாற்று நிறுவனத்திற்கு சரிபார்ப்புக்காக அனுப்பினார். பூச்சியியல் வல்லுநர் மத்தியாஸ் ஆல்ஃபிரட்சன், ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படும் குலிசெட்டா அன்யுலாட்டா என்ற குளிர் எதிர்ப்பு கொசு இனம் பூச்சிகள் என்பதை உறுதிப்படுத்தினார்.

    • சுமார் 700 முதல் 1000 மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென்கிழக்கு நோக்கிப் பாய்ந்து வருகிறது.
    • சுமார் 800 ஆண்டுகளாக செயலற்று இருந்தது.

    ஐரோப்பாவில் அமைந்துள்ள ஐஸ்லாந்து நாட்டில் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்நிலையில் தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கே அமைந்துள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது.

    தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்பு சுமார் 700 முதல் 1000 மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென்கிழக்கு நோக்கிப் பாய்ந்து வருகிறது.

    சுமார் 800 ஆண்டுகளாக செயலற்று இருந்த இந்த எரிமலைப் பகுதி கடந்த 2023 நவம்பர் முதல் மீண்டும் செய்யப்படத் தொடங்கியது குறிப்பிடத்க்கது. 

    • ஐஸ்லாந்து ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு 7.39 மணியளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    ஐஸ்லாந்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஐஸ்லாந்து ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு 7.39 மணியளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

    10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.85 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 32.05 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    • அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன.
    • இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தெரிவித்தார்.

     ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (58 வயது).

    ஆஸ்தில்டர் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தனது இள வயது அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது தனது 22 ஆவது வயதில், 16 வயது மாணவர் ஒருவருடன் உடலுறவு வைத்து குழந்தை பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

    ஆஸ்தில்டர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அந்நாட்டில் கடும் கண்டனங்களை குவித்தது. இதனால் ஆஸ்தில்டர் வகித்து வந்த அமைச்சர் பதவிக்கே நெருக்கடி வந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் கிறிஸ்ட்ரூன், நேற்று முன் தினம் இரவு ஆஸ்தில்டரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார். இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

    தனது ராஜினாமாவுக்கு பின் பேசிய அவர், "அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. இன்று இந்தப் பிரச்சினைகளை நான் நிச்சயமாக வித்தியாசமாகக் கையாண்டிருப்பேன். அப்போது அதற்கான முதிர்ச்சி என்னிடம் இல்லை" என்று கூறினார்.

    இதற்கிடையே இது ஒரு தீவிரமான விஷயம் எனக் கூறிய ஐஸ்லாந்தின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர், "இது மிகவும் தனிப்பட்ட விஷயம், சம்பந்தப்பட்ட நபருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த விஷயத்தில் நான் மேலும் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.

    • எரிமலை வெடிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல்
    • கடந்து இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை எரிமலை வெடிப்பு நிகழ்வு நடந்துள்ளது

    ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது.

    1600 நில அதிர்வுகள் அளவிடப்பட்டுள்ள நிலையில், தலைநகர் பகுதியில் மிகப்பெரிய அளவில் உணரப்பட்டதாகவும், அது தொடரவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    இதில் நான்கு அதிர்வுகள் 4 ரிக்டர் அளவிற்கு மேல் இருந்ததாகவும், இது லேசான நிலநடுக்கும் எனவும் கருதப்படுகிறது. இருந்தாலும் விமானம் பறப்பதற்கு ஆரஞ்சு எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை எரிமலை வெடிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை, என்றாலும் ஒன்றிரண்டு நாட்களில் நிகழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் கடந்த 2021 மற்றும் 2022-ல் ரெய்க்ஜாவிக்கில் இருநது 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஃபக்ராடால்ஸ்ஃப்ஜால் மலை அருகே எரிமலை வெடிப்பு உண்டானது.

    இந்த நில அதிர்வுகள் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

    • கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்தது.
    • தீப்பிழம்பு ஆரஞ்சு நிறத்தில் வெளியேறி வருகிறது

    ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை நேற்று இரவு ஆக்ரோஷத்துடன் வெடிக்க தொடங்கி தீப்பிழம்பை கக்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் நேற்று வெடித்து சிதறியுள்ளது.

    தீப்பிழம்பு ஆரஞ்சு நிறத்தில் வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    சில நாட்களுக்கு முன்பு ரெய்க்ஜாவிக் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எரிமலை வெடிப்புக்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நெருப்பு மற்றும் பனியால் ஆன நாடு என ஐஸ்லாந்து அழைக்கப்படுகிறது
    • தொலைக்காட்சியில், 3 வீடுகளை லாவா மூழ்கடித்த காட்சிகளை கண்டு மக்கள் அதிர்ந்தனர்

    வட ஐரோப்பாவில் உள்ள தீவு நாடு, ஐஸ்லாந்து. இதன் தலைநகரம் ரெக்ஜெவிக் (Reykjavik).

    பனிப்பாறைகளாலும், எரிமலைகளாலும் சூழப்பட்டுள்ளதால், நெருப்பு மற்றும் பனியால் ஆன நாடு (Land of fire and ice) எனவும் ஐஸ்லாந்து அழைக்கப்படுவதுண்டு.

    ஐஸ்லாந்து நாட்டு மக்களின் வாழ்க்கைமுறையில், எரிமலைகளிலிருந்து "லாவா" (lava) எனப்படும் எரிமலை குழம்புகள் வெளிக்கிளம்புவதும், அவற்றின் சீற்றம் குறைந்த பிறகு ஊரை சுத்தப்படுத்தி மீண்டும் குடியேறுவதும் வழக்கமான ஒன்று.

    சில தினங்களுக்கு முன், இந்நாட்டின் க்ரிண்டாவிக் (Grindavik) பகுதியில் எரிமலைக்குழம்பு பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.


    இதையடுத்து, அப்பகுதியில் வாழ்ந்த சுமார் 3800 பேர், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர்.

    இம்முறை க்ரிண்டாவிக் பகுதியில் எரிமலை குழம்பு மொத்த ஊரையும் நாசம் செய்து விட்டதால், மீண்டும் அங்கு குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    நகரின் பல இடங்களில் நீண்ட தூரத்திற்கு பூமியில் பிளவு ஏற்பட்டு அதிலிருந்தும் லாவா வெளியேறியது.

    க்ரிண்டாவிக் பகுதிக்கு அருகே உள்ள ஸ்வார்ட்ஸெங்கி புவிவெப்ப மின் நிலையத்திற்கு (geothermal power plant) உள்ளே லாவா செல்வதை தடுக்கும் வகையில், அதற்கு வெளியே அரசு, தடுப்புகள் அமைத்துள்ளது.

    இந்நகரின் 3 வீடுகளை லாவா மூழ்கடித்த காட்சிகளை தொலைக்காட்சியில் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இயற்கையின் சீற்றத்தால் வீடுகளை விட்டு வெளியேறி மீண்டும் குடிபுக முடியாத நிலையில் உள்ள மக்களில் பலருக்கு வீடுகளின் பேரில் வங்கி கடன் உள்ளதால், தங்கள் வாழ்வாதாரம் என்ன ஆகுமோ எனும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    • ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன.
    • அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    ரெய்காவிக்:

    ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. அதில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறின. இது சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியது.

    இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் மக்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்தனர். இதன் சமீபத்திய எரிமலை வெடிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • பனிக்கட்டியின் அடியில் 4 பேர் சிக்கிய நிலையில், இருவர் மீட்கப்பட்டனர்.
    • காணாமல் போன மேலும் இருவரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

    தென்கிழக்கு ஐஸ்லாந்தில் சுற்றுலா குழு ஒன்று சென்று கொண்டிருந்தபோது பனி குகை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 25 பேர் கொண்ட சுற்றுலாக் குழு ஒரு வழிகாட்டியுடன் சேர்ந்து பனிப்பாறை ப்ரீடாமெர்குர்ஜோகுல்லுக்கு சென்றபோது, திடீரென பனி குகை இடிந்து விழுந்துள்ளது.

    இந்த விபத்தில், பனிக்கட்டியின் அடியில் 4 பேர் சிக்கியதாகவும், பின்னர் இருவர் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்திருந்த நிலையில், அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொரு நபர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதைதொடர்ந்து, காணாமல் போன மேலும் இருவரையும் தேடும் பணியை நேற்று தொடங்கிய மீட்புப் படையினர், இன்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    நிலைலமை கடினமாக உள்ள சூழலில் ஏராளமான மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஐஸ்லாந்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஜோகுல்சர்லோன் என்ற பனிப்பாறை குளத்திற்கு அருகில் விபத்து நடந்த பனிப்பாறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் தான் அதிகளாவிலான துருவ கரடிகள் வாழ்கின்றன.
    • கிரீன்லாந்தில் இருந்து உருகும் பனிக்கட்டிகள் வழியே துருவ கரடிகள் ஐஸ்லாந்திற்கு வருகினறன.

    ஐஸ்லாந்து நாட்டில் 8 வருடங்களுக்கு பிறகு தென்பட்ட பனிக்கரடியை போலீசார் சுட்டு கொன்றனர்.

    பனிக்கரடியால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் சுட்டு கொன்றோம் என்று இதற்கு போலீசார் விளக்கம் அளித்தனர்.

    பனிக்கரடிகள் இஸ்லாந்தை பூர்வீகமாக கொண்டவை அல்ல. ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் தான் அதிகளாவிலான பனிக்கரடிகள் வாழ்கின்றன. கிரீன்லாந்தில் இருந்து உருகும் பனிக்கட்டிகள் வழியே பனிக்கரடிகள் ஐஸ்லாந்திற்கு வருகினறன.

    கடையாக 2016 ஆம் ஆண்டு தான் ஐஸ்லாந்தில் பனிக்கரடி காணப்பட்டது. 9 ஆம் நூற்றாண்டில் இருந்து இப்போது வரை ஐஸ்லாந்தில் 600 பனிக்கரடிகள் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    ×