search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "polar bear"

    • ஆர்க்டிக் பிரதேசங்களில் பனிப்பாறைகள் முற்றிலும் குறைந்து விட்டது
    • ரிங்க்ட் சீல் உயிரினங்கள் முன்பு போல் அதிகம் கடற்கரைக்கு வருவதில்லை

    ஆர்க்டிக் கடல் பகுதியில் வாழும் அரிய வகை உயிரினத்தை சேர்ந்தவை, பனிக்கரடிகள். இவை சுமார் 30 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியவை.

    ஆர்க்டிக் கடற்கரையோர பகுதிகளில் காணப்படும் "ரிங்க்ட் சீல்" (ringed seal) எனும் உயிரினங்களையும், பெலுகா திமிங்கிலங்கள், ஆர்க்டிக் மான்கள் உள்ளிட்டவைகளையும் வேட்டையாடி உண்டு பனிக்கரடிகள் வாழ்கின்றன.

    உலகம் முழுவதும் சில ஆண்டுகளாக நிகழும் பருவகால மாற்றங்களால் ஆர்க்டிக் பனிப்பிரதேசத்தில் "பனி உருகல்" அதிக தீவிரமடைந்துள்ளது.

    ஆண்டுக்காண்டு உலக வெப்பமயமாதல் (global warming) அதிகரிப்பதால் பனிப்பாறைகள் குறைந்து வருகின்றன.

    கோடை காலங்களில் பல ஆர்க்டிக் பிரதேசங்களில் பனிப்பாறைகள் முற்றிலும் குறைந்து விட்டது.


    இதனால் "ரிங்க்ட் சீல்" உயிரினங்கள், கரைக்கு வருவதில்லை.

    இதன் தொடர்ச்சியாக, பனிக்கரடிகள் தங்கள் உணவு தேவைக்கு கடற்கரையோரம் கிடைக்கும் பறவைகளின் முட்டைகள், கனிகள், புற்கள் ஆகியவற்றை உண்டு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.


    இதன் காரணமாக பனிக்கரடிகள் உடல் எடை கணிசமாக குறைந்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    ஒரு வளர்ந்த ஆண் பனிக்கரடி, 600 கிலோகிராம் வரை எடையுள்ளவை. 

    இதன் காரணமாக பனிக்கரடிகள் விரைவில் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும், பனிக்கரடிகளின் இனமே அழிந்து விடும் அபாயம் உள்ளதாகவும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    1980களில், கட்டுப்பாடின்றி வேட்டையாடியதால் பனிக்கரடிகளின் எண்ணிக்கை குறைந்தது. பல சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு பின் பனிக்கரடிகளை வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து அதிகரித்த அந்த உயிரினம், தற்போது உலக வெப்பமயமாதலால் அதிகரிக்கும் "பனி உருகல்" காரணமாக உணவுக்கு வழியின்றி தவிப்பதால், மீண்டும் அழியும் அபாயத்தில் உள்ளது.

    ரஷியாவில் உணவை தேடி பனிக்கரடிகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன. #PolarBear
    மாஸ்கோ:

    ரஷியாவின் வடக்கு பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது நோவாயா செம்லியா தீவுக்கூடம். இந்த தீவுக்கூடத்தின் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் பனிக்கரடிகள் வசித்து வந்தன.

    தற்போது அங்கு அதிக பனி காரணமாக மீன்கள் உள்ளிட்ட சில உயிரினங்கள் இடம் பெயர்ந்துவிட்டதால் உணவு கிடைக்காமல் பனிக்கரடிகள் தவிக்கின்றன. இதனால் உணவை தேடி பனிக்கரடிகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன.

    ஆர்க்கான்கெலஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெல்ஷியா குபா நகரில் 50-க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் சுற்றித் திரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பனிக்கரடிகள் மிகவும் ஆபத்தானவை என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதோடு அங்கு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், கரடிகளை விரட்டி அடிக்கவும் ராணுவவீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். #PolarBear
    ×