உலக வெப்பம் - உருகும் பனி: அழியும் அபாயத்தில் பனிக்கரடிகள்

ஆர்க்டிக் பிரதேசங்களில் பனிப்பாறைகள் முற்றிலும் குறைந்து விட்டதுரிங்க்ட் சீல் உயிரினங்கள் முன்பு போல் அதிகம் கடற்கரைக்கு வருவதில்லை
உலக வெப்பம் - உருகும் பனி: அழியும் அபாயத்தில் பனிக்கரடிகள்
Published on

ஆர்க்டிக் கடல் பகுதியில் வாழும் அரிய வகை உயிரினத்தை சேர்ந்தவை, பனிக்கரடிகள். இவை சுமார் 30 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியவை.

ஆர்க்டிக் கடற்கரையோர பகுதிகளில் காணப்படும் "ரிங்க்ட் சீல்" (ringed seal) எனும் உயிரினங்களையும், பெலுகா திமிங்கிலங்கள், ஆர்க்டிக் மான்கள் உள்ளிட்டவைகளையும் வேட்டையாடி உண்டு பனிக்கரடிகள் வாழ்கின்றன.

உலகம் முழுவதும் சில ஆண்டுகளாக நிகழும் பருவகால மாற்றங்களால் ஆர்க்டிக் பனிப்பிரதேசத்தில் "பனி உருகல்" அதிக தீவிரமடைந்துள்ளது.

ஆண்டுக்காண்டு உலக வெப்பமயமாதல் (global warming) அதிகரிப்பதால் பனிப்பாறைகள் குறைந்து வருகின்றன.

கோடை காலங்களில் பல ஆர்க்டிக் பிரதேசங்களில் பனிப்பாறைகள் முற்றிலும் குறைந்து விட்டது.

இதனால் "ரிங்க்ட் சீல்" உயிரினங்கள், கரைக்கு வருவதில்லை.

இதன் தொடர்ச்சியாக, பனிக்கரடிகள் தங்கள் உணவு தேவைக்கு கடற்கரையோரம் கிடைக்கும் பறவைகளின் முட்டைகள், கனிகள், புற்கள் ஆகியவற்றை உண்டு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பனிக்கரடிகள் உடல் எடை கணிசமாக குறைந்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒரு வளர்ந்த ஆண் பனிக்கரடி, 600 கிலோகிராம் வரை எடையுள்ளவை. 

இதன் காரணமாக பனிக்கரடிகள் விரைவில் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும், பனிக்கரடிகளின் இனமே அழிந்து விடும் அபாயம் உள்ளதாகவும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

1980களில், கட்டுப்பாடின்றி வேட்டையாடியதால் பனிக்கரடிகளின் எண்ணிக்கை குறைந்தது. பல சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு பின் பனிக்கரடிகளை வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அதிகரித்த அந்த உயிரினம், தற்போது உலக வெப்பமயமாதலால் அதிகரிக்கும் "பனி உருகல்" காரணமாக உணவுக்கு வழியின்றி தவிப்பதால், மீண்டும் அழியும் அபாயத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com