என் மலர்
நீங்கள் தேடியது "Meta AI"
- பேட்டரி செயல்திறன் நீட்டிக்கப்பட்ட உடற்பயிற்சிகளை ஆதரிக்கிறது.
- இதனுடன் வழங்கப்படும் கேஸ் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மெட்டா கனெக்டில் உலகளாவில் அறிமுகமானதைத் தொடர்ந்து, ஓக்லி (Oakley) மற்றும் மெட்டா இந்தியாவில் ஓக்லி மெட்டா வான்கார்டு (Oakley Vanguard) ஏஐ ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளன. இது அதிக தீவிரம் கொண்ட விளையாட்டு மற்றும் வெளிப்புற பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்ட செயல்திறன் AI கண்ணாடிகளின் கிடைக்கும் தன்மையை விரிவுபடுத்துகிறது.
ஓக்லி மெட்டா வான்கார்டு
ஓக்லி மெட்டா வான்கார்டு கடுமையான உடல் செயல்பாடுகளின் போது பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடிகள் இயக்கத்தின் போது நிலையாக இருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும் சைக்கிள் ஓட்டுதல் ஹெல்மெட்கள் மற்றும் தலைக்கவசங்களுடன் பயன்படுத்துவதை ஆதரிக்கின்றன. அவை IP67 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் மதிப்பீட்டைக் கொண்டுள்ளன. இது ஈரமான, தூசி நிறைந்த மற்றும் அதிக வியர்வை சூழல்களில் செயல்பட உதவுகிறது.
இந்த ரேப்-அரவுண்ட் ஃபிரேம் ஓக்லி PRIZM லென்ஸ் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கிறது. இது காற்று, சூரிய ஒளி மற்றும் குப்பைகளிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில் வேரியம்ட் மற்றும் வண்ண வரையறையை மேம்படுத்துகிறது. ஃபிரேம்கள் ஓக்லியின் த்ரீ-பாயிண்ட் ஃபிட் அமைப்பை பயன்படுத்துகின்றன. மேலும் பயனர்களுக்கு அதிக கஸ்டமைசேஷன் வழங்கும் நோக்கில், இது மூன்று விதமாக மாற்றக்கூடிய நோஸ் பேட்களை கொண்டுள்ளது.
அம்சங்கள்:
ஓக்லி மெட்டா வான்கார்டு, மெட்டா AI ஐ கார்மின் மற்றும் பிற ஆதரிக்கப்படும் உடற்பயிற்சி தளங்களுடன் ஒருங்கிணைக்கிறது. வாய்ஸ் கமான்ட் மற்றும் மெட்டா AI ஆப் மூலம் உடற்பயிற்சி தரவை ரியல்டைமில் பெற வழங்குகிறது. இந்தக் கண்ணாடிகளில் 12MP அல்ட்ரா-வைடு கேமராவும், 122-டிகிரி பார்வை புலமும், 3K தெளிவுத்திறன் வரை ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வீடியோ பிடிப்பை ஆதரிக்கும்.

ஆடியோ வெளியீடு ஓபன்-இயர் ஸ்பீக்கர்கள் மூலம் வழங்கப்படுகிறது, அழைப்புகள் மற்றும் குரல் தொடர்புகளின் போது காற்றின் குறுக்கீட்டைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட பல-மைக்ரோஃபோன் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரி செயல்திறன் நீட்டிக்கப்பட்ட உடற்பயிற்சிகளை ஆதரிக்கிறது. இதனுடன் வழங்கப்படும் கேஸ் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் ஓக்லி மெட்டா வான்கார்டு கலெக்ஷனின் ஆரம்ப விலை ரூ. 52,300 ஆகும். முன்னணி ஆப்டிகல் கடைகள், சன்கிளாஸ் ஹட் மற்றும் லென்ஸ்கிராஃப்டர்ஸ் ஆகியவை இதில் அடங்கும். இந்த வரிசையில் நான்கு ஃபிரேம் மற்றும் லென்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன:
PRIZM 24K உடன் பிளாக் ஃபிரேம்
PRIZM பிளாக் நிறத்துடன் வைட் ஃபிரேம்
PRIZM ரோட் உடன் கூடிய பிளாக் ஃபிரேம்
PRIZM சஃபையர் கொண்ட வைட் ஃபிரேம்
- இந்தாண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தியது.
- ஏற்கனவே வருடக் கணக்கில் வேலை செய்து வந்தவர்களை பணிநீக்கம் செய்தனர்.
இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பதால் நன்மை ஏற்பட்டாலும், பெரும்பாலும் தீங்காகவே அமைகிறது. அந்த வகையில், AI தொழில் நுட்பம் வந்த பிறகு பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் AI பிரிவு தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் AI உள்கட்டமைப்பு அலகுகள், அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவு (FAIR) மற்றும் பிற தயாரிப்பு தொடர்பான பதவிகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இந்தாண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தி, ஏற்கனவே வருடக் கணக்கில் வேலை செய்து வந்தவர்களை பணிநீக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- கடந்த ஆண்டு ‘கனெக்ட்’ நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவி சேவைகளில் ஒன்றான 'மெட்டா ஏஐ' தொழில்நுட்பத்தை இப்போது வாட்ஸ்-ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜா், மெட்டா ஏஐ வலைபக்கம் ஆகியவற்றில் நேற்று முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம், பயனா்கள் தாங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகச் செயலியை விட்டு வெளியேறாமலேயே, தங்களுக்கு வேண்டிய விஷயங்களை தேடுவதற்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவும் குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி ஆழமாக அறிவதற்கும் மெட்டா ஏஐ சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மெட்டா ஏஐ' சேவையானது அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு 'கனெக்ட்' நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் 'மெட்டா ஏஐ' சேவையின் சமீபத்திய பதிப்பு உலகம் முழுவதும் உள்ள பயனா்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தியாவில் இப்போது அச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு இடையே பயனா்கள் 'மெட்டா ஏஐ' சேவையை அணுகலாம். உதாரணமாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத்தில் உங்களுக்கு விருப்பமான ஒரு பதிவைப் பாா்க்கிறீா்கள் என்றால், அதே செயலியில் இருந்துகொண்டு அந்த பதிவு குறித்த மேலும் பல தகவல்களை 'மெட்டா ஏஐ' சேவையிடம் கேட்டுப் பெறலாம்.
- சாட் - ஜிபிடி தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமிருகப்படுத்தியது.
- தனியாக செயலியைப் பதிவிறக்கம் செய்ய தேவை இல்லை
மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக தொடர்பு தளமான வாட்ஸ்அப் இருந்து வருகிறது. இந்தியாவில் சுமார் 54 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துகின்றனர். உலகளவில் 300 கோடி பேர் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் சாட்-ஜிபிடி அம்சத்தை பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ அறிமுகம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் சாட்டிங் மூலம் மனிதர்கள் உரையாட சாட் - ஜிபிடி தொழில்நுட்பத்தை அந்நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது.

இது சாதாரண உரையாடல் தொடங்கி தொழில்துறையும் வளர்ந்து வரும் நுட்பமாக உள்ள நிலையில் தனியாகச் செயலியைப் பதிவிறக்கம் செய்யாமல் தற்போது வாட்ஸ்அப் செயலி மூலம் நேரடியாகவே சாட் -ஜிபிடி உடன் உரையாடும் அம்சத்தை அருகப்படுத்துவதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் 1-800-CHATGPT என்று அழைக்கப்படும் இந்த சாட் ஜிபிடி வாட்ஸ்அப்பில் அறிமுகமாகிறது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் உரையாட 1-800-242-8478 என்ற எண்ணை அழைத்தால் போதுமானது. ஏற்கனவே வாட்ஸ்அப்-இல் மெட்டா ஏஐ வசதி உள்ள நிலையில் இந்த சாட் ஜிபிடி அறிமுகம் பயனர்களிடத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக சாட்- ஜிபிடி குறித்து அதை பயிற்றுவிக்கும் குழுவில் பணியாற்றிய ஓபன் ஏஐ முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி[ 26 வயது] அதன் தீமைகள் குறித்து எச்சரித்திருந்தார். கடந்த நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.






