என் மலர்
நீங்கள் தேடியது "Messenger"
நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசஜ் வந்துக் கொண்டிருக்கிறது. அதில், "தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருப்பார்கள்" என்ற செய்தி இருக்கிறது. இதை பார்த்து தற்கொலை முயற்சியை கைவிடுகிறார்.
பின்னர் அந்த பெண் யார் என்பதை தேடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.
இறந்தவர் எப்படி மெசேஜ் அனுப்பு முடியும், அவர் உண்மையில் இறந்து விட்டாரா? இல்லையா? மெசேஜ் அனுப்பியது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஶ்ரீராம் கார்த்திக், தனது கதாபாத்திரத்திற்கு முழுமையான நியாயம் சேர்த்திருக்கிறார். அந்த பெண் யார் என்ற தேடுதலும், காதலிப்பதும் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ, அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக லிப் லாக் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பாத்திமா, கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற முகத்தோடும், எதிர்பார்ப்புகளோடும் தன் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார்.
பாத்திமாவின் தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம்
நாம் நிறைய காதல் படங்களை பார்த்து இருப்போம். ஆனால், யாரும் எதிர்பார்த்திராத காதல் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி. யாரும் சிந்திக்காத கதையை, தனது கற்பனை கலந்து திகில் மற்றும் ஃபேண்டஸி படமாக கொடுத்து இருக்கிறார். வித்தியாசமான சிந்தனை மற்றும் விபரீதமான காட்சியமைப்புகள் இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டி இருக்கலாம்.
இசை
இசையமைப்பாளர் அபுபக்கர்.எம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் பால கணேசன் தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.
படத்தொகுப்பு
இயக்குனரின் முயற்சியை சிறப்பாக உள்வாங்கி பணியாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் பிரசாந்தின் பணியும் பாராட்டும்படி உள்ளது.
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல்சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குனர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குனர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
விக்ரவாண்டி அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் மெஸன்ஜர் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போன்றே படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம்வர தொடங்கிவிட்டன.
மேலும், படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மெஸன்ஜர் திரைப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என்று டிரெய்லரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மெஸன்ஜர் செயலியால் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமாக சொல்லும் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரசாந்த் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அபு பக்கர் இசையமைக்க, பாலசுப்ரமணியன் கலை பணிகளை செய்து இருக்கிறார். தக்ஷன் மற்றும் பிரசாந்த் பாடல்கள் எழுத சைந்தவி, சத்யபிரகாஷ், மற்றும் கபில் கபிலன் பாடியிருக்கிறார்கள்.
- (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர்.
- இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா.விஜயன் தயாரித்திருக்கும் படம் மெஸன்ஜர். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னிமாடம், யுத்தகாண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் கதாநாயகனாகவும், பெரும் வெற்றி பெற்ற "சார்" திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்து இருக்கிறார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவுற்று ரிலீசுக்கு தயாராகி இருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த நிலையில், இந்தப் படத்தின் சிறப்பு போஸ்டரை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
மெஸன்ஜர் படத்தின் கதாநாயகிகளாக மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார் , ஜீவா ரவி, யமுனா, கோதண்டன், இட்இஸ் பிரசாந்த், கூல் சுரேஷ், ராஜேஷ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. இவர் இயக்குநர் A.R. காந்தி கிருஷ்ணா மற்றும் இயக்குநர் பத்ரி அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். ஃபேண்டஸி லவ் ஸ்டோரி பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு பிரசாந்த் படத்தொகுப்பு செய்திருக்கிறார். அபு பக்கர் இசையமைக்க, பாலசுப்ரமணியன் கலை பணிகளை செய்து இருக்கிறார். விக்ரவாண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
- சிறுவயதில் இருந்தே, அறிவியல் ஆராய்ச்சிகளில் தீராத காதல் உண்டு.
- `பயோ கெமிஸ்ட்ரி’ துறையை தேர்ந்தெடுத்து, அதில் பட்டம் பெற்றேன்.
வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் ஒருசில மூலிகைப் பொருட்களைக் கொண்டே புற்று நோயை குணப்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சியை முன்னெடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், யாமினி சுதாலட்சுமி. சென்னை பல்கலைக்கழகத்தில் மெடிக்கல் பயோ கெமிஸ்ட்ரி துறையின் உதவி பேராசிரியராகவும், கல்விப் பணியோடு சேர்த்து புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளராகவும் செயல்படும் யாமினி, தன்னுடைய ஆராய்ச்சி தகவல்களை பிரான்ஸ், இலங்கை... உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த சர்வதேச கருத்தரங்குகளிலும் சமர்ப்பித்திருக்கிறார்.
மஞ்சள் போன்ற எளிமையான பொருட்களைக் கொண்டு குறைந்த செலவிலேயே புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதால், இவரது ஆராய்ச்சியை மருத்துவ உலகமும் அங்கீகரித்து, ஊக்கப்படுத்துகிறது. கிட்டத்தட்ட ஆராய்ச்சி பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட சோதனைகளில் தீவிரமாக இருக்கும் யாமினியை, சென்னை பல்கலைக்கழக தரமணி வளாகத்தில் சந்தித்தோம். அவர் பகிர்ந்து கொண்டவை....
''சிறுவயதில் இருந்தே, அறிவியல் ஆராய்ச்சிகளில் தீராத காதல் உண்டு. மருத்துவம் படிக்கக் கிடைத்த வாய்ப்பைகூட, ஆராய்ச்சி பணிகளுக்காக விட்டுக்கொடுத்துவிட்டேன். அதேசமயம், ஆராய்ச்சி பணிகளுக்கு உகந்ததாக இருக்கும், `பயோ கெமிஸ்ட்ரி' துறையை தேர்ந்தெடுத்து, அதில் பட்டம் பெற்றேன். 1986-ம் ஆண்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றேன். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுகலைப் பட்டமும் (1988), எம்.பில். பட்டமும் (1992) பெற்றேன்.
இதைத்தொடர்ந்து, சில மத்திய-மாநில அரசுகளின் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்ததால், நீண்ட இடைவெளிக்கு பிறகே 2002-ம் ஆண்டு, பி.எச்.டி. பட்டம் பெற முடிந்தது. தூதுவளையின் மூலமாக பாதிப்பிற்குள்ளான கல்லீரலை குணப்படுத்தமுடியும் என்பதை, எலி சோதனைகள் மூலமாக நிரூபித்ததன் பயனாக, எனக்கு பி.எச்.டி பட்டம் கிடைத்தது. அதுதான், என்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம்'' என்று தன்னுடைய ஆரம்ப வாழ்க்கையை விளக்கியவர், பி.எச்.டி.பட்டம் பெற்ற பிறகும், பயோ இன்பர்மேட்டிக்ஸ் மற்றும் கிளினிக்கல் சயின்ஸ் ஆகியவற்றைக் கற்றறிந்து, தன்னை அடுத்த கட்ட ஆராய்ச்சிகளுக்கு தயார்படுத்தினார்.
''என்னுடைய வாழ்க்கையில் ஆராய்ச்சிகளும், கல்விப் பணிகளும் பின்னிப்பிணைந்தவை. கிட்டத்தட்ட 35 வருடங்களாக, கல்விப்பணியில் இருந்துகொண்டே, பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். சில சமயங்களில், நான் மேற்கொண்ட ஆராய்ச்சி பணிகளுக்காக, கல்விப் பணியைக் கைவிடும் சூழல்கள் வந்திருக்கின்றன. இருப்பினும், இன்று வரை ஆராய்ச்சியுடன் கூடிய கல்விப் பணியில் நீடித்துக்கொண்டிருக்கிறேன்.
நிறைய கல்லூரிகளில் பயோ கெமிஸ்ட்ரி துறையின் தலைவராக பணியாற்றி இருக்கிறேன். பயோ இன்பர்மேட்டிக் என்ற துறை, தமிழகத்திற்குள் அறிமுகமானபோது, அதை பல கல்லூரிகளில் முறைப்படுத்தப்பட்ட துறையாக உருவாக்கி, அதன்மீது மாணவர்களுக்கான கவனத்தை ஈர்த்திருக்கிறேன். அந்தவகையில் இப்போது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிக்காக சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்திருக்கிறேன்'' என்றவர், உயிரி வேதியியல் துறையில், நிறையப் புதுமைகளை செய்திருக்கிறார்.
''தூதுவளை சளி பிரச்சினைக்கு சிறந்த மருந்து என்பது நமக்கு தெரிந்த பொதுவான விஷயம். ஆனால் அந்த தூதுவளையில், நம் கல்லீரலை பாதுகாக்கும் சக்தியும், பாதிப்படைந்த கல்லீரலை குணமாக்கும் சக்தியும் அதிகமாக இருக்கிறது. இதுதான் என்னுடைய பி.எச்.டி ஆராய்ச்சி என்றாலும், இதன்மூலமாக கிடைத்த ஊக்கம், என்னை மூலிகைகள், வீட்டில் பயன்படும் இயல்பான பொருட்களை ஆராய வழிவகுத்தது. அதன் காரணமாக, கிருமிநாசினி என அறியப்படும் மஞ்சளை, புற்று நோய் காரணிகளை கட்டுப்படுத்தும் மருந்தாக மாற்றும் ஆராய்ச்சியில் இறங்கினேன்.
எதிர்பார்த்தபடியே, மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, பாதிப்பை வெகு விரைவாகக் குறைக்கிறது. இந்தக் குர்குமின் வேதிப்பொருட்களை, நானோ டெக்னாலஜி முறையில் பலப்படுத்தும்போது, இதன் வீரியம் அதிகமாகி, புற்றுநோய் காரணிகளை வெகு விரைவாகக் கட்டுப்படுத்துகிறது.
ஆராய்ச்சி பணிகள் 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், இனி சோதனை மருந்து உருவாக்கம், சோதனை ஆராய்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது, முழுமையாக வெற்றிபெற்றால், இப்போது சந்தையில் கிடைக்கும் புற்றுநோய் மருந்துகளை விட மிக மிகக்குறைந்த விலையில் விற்கமுடியும். புற்றுநோயாளிகளின் மருத்துவச் செலவு, 5 பங்கில் ஒரு பங்காக சுருங்கிவிடும்' என்று புது நம்பிக்கை கொடுக்கும் யாமினியின் ஆராய்ச்சியை, சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் அங்கீகரித்து, முழுமைபெற பல்வேறு வழிகளில் உதவி செய்கிறார்கள்.
`தூதுவளை, மஞ்சள்... தொடர்ந்து இயல்பாக வீட்டுச் சமையலில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், ஓமம், பட்டை போன்ற மூலிகைப் பொருட்கள், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள்... ஆகியவற்றை பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை மருந்தாக உருமாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். ஆராய்ச்சிகளை வெறும் காகித அளவில் மட்டுமின்றி, அதை முழுமைப்படுத்தி, அதற்கான பேட்டன்ட் உரிமம் பெறும் முயற்சியில் இறங்கி உள்ளேன்.
ஜெர்மனி, பிரான்ஸ், துபாய், ஆஸ்திரேலியா, ஹாங்காங், இலங்கை, பாங்காக்... ஆகிய இடங்களில் அரங்கேறிய பல்வேறு அறிவியல் கருத்தரங்குகளில் பங்கேற்று, ஆராய்ச்சி தகவல்களை பகிர்ந்திருக்கிறேன். இதில் பிரான்ஸ் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற 400 தலைப்புகளில், என்னுடைய ஆய்வு முதலிடம் பெற்றது சிறப்புக்குரியது. இதன்மூலம் கிடைத்த அங்கீகாரத்தினால் பல நாடுகளுக்கு, சிறப்பு பேச்சாளராகவும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.
வெளிநாடுகளில் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளையும், என்னுடைய ஆராய்ச்சிகளால் கடந்திருக்கிறேன்'' என்றவர், அறிவியல் ஆராய்ச்சிகள் சம்பந்தப்பட்ட பல அமைப்புகள், குழுக்கள் மற்றும் வாரியங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகிப்பதுடன், மாணவ-மாணவிகளுக்கு ஆராய்ச்சி துறையில் ஆர்வம் ஏற்பட பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார்.
`உயிரி வேதியியல் என்ற துறை, மிகவும் வித்தியாசமானது. சுவாரசியமான பல ஆராய்ச்சிகளைக் கொண்டது. எல்லா துறைகளுக்கும் மூலகாரணமாக திகழ்கிறது. முன்பைவிட, இப்போது உலகளவில் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. உலகளவிலும், மத்திய-மாநில அளவிலும் நிதி உதவியுடன் கூடிய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த துறையின் மகத்துவத்தை, மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி, எல்லா மாணவர்களையும் ஆராய்ச்சியாளராக மாற்றுவதே என்னுடைய லட்சியம். மேலும், சமூகத்திற்குப் பயன்படக்கூடிய பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. இவ்விரண்டையும் சிறப்பாக மேற்கொள்வேன்' என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் விடைபெற்றார்.
மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, புற்றுநோய் பாதிப்பை வெகு விரைவாக குறைக்கிறது. இந்த குர்குமின் வேதிப்பொருட்களை, நானோ டெக்னாலஜி முறையில் பலப்படுத்தும்போது, இதன் வீரியம் அதிகமாகி, புற்றுநோய் காரணிகளை வெகு விரைவாக கட்டுப்படுத்துகிறது.
- நேற்று முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- கடந்த ஆண்டு ‘கனெக்ட்’ நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவி சேவைகளில் ஒன்றான 'மெட்டா ஏஐ' தொழில்நுட்பத்தை இப்போது வாட்ஸ்-ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்ஜா், மெட்டா ஏஐ வலைபக்கம் ஆகியவற்றில் நேற்று முதல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன்மூலம், பயனா்கள் தாங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகச் செயலியை விட்டு வெளியேறாமலேயே, தங்களுக்கு வேண்டிய விஷயங்களை தேடுவதற்கும் உள்ளடக்கத்தை உருவாக்கவும் குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி ஆழமாக அறிவதற்கும் மெட்டா ஏஐ சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மெட்டா ஏஐ' சேவையானது அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு 'கனெக்ட்' நிகழ்ச்சியில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் 'மெட்டா ஏஐ' சேவையின் சமீபத்திய பதிப்பு உலகம் முழுவதும் உள்ள பயனா்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தியாவில் இப்போது அச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு இடையே பயனா்கள் 'மெட்டா ஏஐ' சேவையை அணுகலாம். உதாரணமாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத்தில் உங்களுக்கு விருப்பமான ஒரு பதிவைப் பாா்க்கிறீா்கள் என்றால், அதே செயலியில் இருந்துகொண்டு அந்த பதிவு குறித்த மேலும் பல தகவல்களை 'மெட்டா ஏஐ' சேவையிடம் கேட்டுப் பெறலாம்.














