search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Messenger"

    • சிறுவயதில் இருந்தே, அறிவியல் ஆராய்ச்சிகளில் தீராத காதல் உண்டு.
    • `பயோ கெமிஸ்ட்ரி’ துறையை தேர்ந்தெடுத்து, அதில் பட்டம் பெற்றேன்.

    வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் ஒருசில மூலிகைப் பொருட்களைக் கொண்டே புற்று நோயை குணப்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சியை முன்னெடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், யாமினி சுதாலட்சுமி. சென்னை பல்கலைக்கழகத்தில் மெடிக்கல் பயோ கெமிஸ்ட்ரி துறையின் உதவி பேராசிரியராகவும், கல்விப் பணியோடு சேர்த்து புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளராகவும் செயல்படும் யாமினி, தன்னுடைய ஆராய்ச்சி தகவல்களை பிரான்ஸ், இலங்கை... உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த சர்வதேச கருத்தரங்குகளிலும் சமர்ப்பித்திருக்கிறார்.

    மஞ்சள் போன்ற எளிமையான பொருட்களைக் கொண்டு குறைந்த செலவிலேயே புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதால், இவரது ஆராய்ச்சியை மருத்துவ உலகமும் அங்கீகரித்து, ஊக்கப்படுத்துகிறது. கிட்டத்தட்ட ஆராய்ச்சி பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட சோதனைகளில் தீவிரமாக இருக்கும் யாமினியை, சென்னை பல்கலைக்கழக தரமணி வளாகத்தில் சந்தித்தோம். அவர் பகிர்ந்து கொண்டவை....

    ''சிறுவயதில் இருந்தே, அறிவியல் ஆராய்ச்சிகளில் தீராத காதல் உண்டு. மருத்துவம் படிக்கக் கிடைத்த வாய்ப்பைகூட, ஆராய்ச்சி பணிகளுக்காக விட்டுக்கொடுத்துவிட்டேன். அதேசமயம், ஆராய்ச்சி பணிகளுக்கு உகந்ததாக இருக்கும், `பயோ கெமிஸ்ட்ரி' துறையை தேர்ந்தெடுத்து, அதில் பட்டம் பெற்றேன். 1986-ம் ஆண்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றேன். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுகலைப் பட்டமும் (1988), எம்.பில். பட்டமும் (1992) பெற்றேன்.

    இதைத்தொடர்ந்து, சில மத்திய-மாநில அரசுகளின் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்ததால், நீண்ட இடைவெளிக்கு பிறகே 2002-ம் ஆண்டு, பி.எச்.டி. பட்டம் பெற முடிந்தது. தூதுவளையின் மூலமாக பாதிப்பிற்குள்ளான கல்லீரலை குணப்படுத்தமுடியும் என்பதை, எலி சோதனைகள் மூலமாக நிரூபித்ததன் பயனாக, எனக்கு பி.எச்.டி பட்டம் கிடைத்தது. அதுதான், என்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம்'' என்று தன்னுடைய ஆரம்ப வாழ்க்கையை விளக்கியவர், பி.எச்.டி.பட்டம் பெற்ற பிறகும், பயோ இன்பர்மேட்டிக்ஸ் மற்றும் கிளினிக்கல் சயின்ஸ் ஆகியவற்றைக் கற்றறிந்து, தன்னை அடுத்த கட்ட ஆராய்ச்சிகளுக்கு தயார்படுத்தினார்.

    ''என்னுடைய வாழ்க்கையில் ஆராய்ச்சிகளும், கல்விப் பணிகளும் பின்னிப்பிணைந்தவை. கிட்டத்தட்ட 35 வருடங்களாக, கல்விப்பணியில் இருந்துகொண்டே, பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். சில சமயங்களில், நான் மேற்கொண்ட ஆராய்ச்சி பணிகளுக்காக, கல்விப் பணியைக் கைவிடும் சூழல்கள் வந்திருக்கின்றன. இருப்பினும், இன்று வரை ஆராய்ச்சியுடன் கூடிய கல்விப் பணியில் நீடித்துக்கொண்டிருக்கிறேன்.

    நிறைய கல்லூரிகளில் பயோ கெமிஸ்ட்ரி துறையின் தலைவராக பணியாற்றி இருக்கிறேன். பயோ இன்பர்மேட்டிக் என்ற துறை, தமிழகத்திற்குள் அறிமுகமானபோது, அதை பல கல்லூரிகளில் முறைப்படுத்தப்பட்ட துறையாக உருவாக்கி, அதன்மீது மாணவர்களுக்கான கவனத்தை ஈர்த்திருக்கிறேன். அந்தவகையில் இப்போது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிக்காக சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்திருக்கிறேன்'' என்றவர், உயிரி வேதியியல் துறையில், நிறையப் புதுமைகளை செய்திருக்கிறார்.

    ''தூதுவளை சளி பிரச்சினைக்கு சிறந்த மருந்து என்பது நமக்கு தெரிந்த பொதுவான விஷயம். ஆனால் அந்த தூதுவளையில், நம் கல்லீரலை பாதுகாக்கும் சக்தியும், பாதிப்படைந்த கல்லீரலை குணமாக்கும் சக்தியும் அதிகமாக இருக்கிறது. இதுதான் என்னுடைய பி.எச்.டி ஆராய்ச்சி என்றாலும், இதன்மூலமாக கிடைத்த ஊக்கம், என்னை மூலிகைகள், வீட்டில் பயன்படும் இயல்பான பொருட்களை ஆராய வழிவகுத்தது. அதன் காரணமாக, கிருமிநாசினி என அறியப்படும் மஞ்சளை, புற்று நோய் காரணிகளை கட்டுப்படுத்தும் மருந்தாக மாற்றும் ஆராய்ச்சியில் இறங்கினேன்.

    எதிர்பார்த்தபடியே, மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, பாதிப்பை வெகு விரைவாகக் குறைக்கிறது. இந்தக் குர்குமின் வேதிப்பொருட்களை, நானோ டெக்னாலஜி முறையில் பலப்படுத்தும்போது, இதன் வீரியம் அதிகமாகி, புற்றுநோய் காரணிகளை வெகு விரைவாகக் கட்டுப்படுத்துகிறது.

    ஆராய்ச்சி பணிகள் 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், இனி சோதனை மருந்து உருவாக்கம், சோதனை ஆராய்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது, முழுமையாக வெற்றிபெற்றால், இப்போது சந்தையில் கிடைக்கும் புற்றுநோய் மருந்துகளை விட மிக மிகக்குறைந்த விலையில் விற்கமுடியும். புற்றுநோயாளிகளின் மருத்துவச் செலவு, 5 பங்கில் ஒரு பங்காக சுருங்கிவிடும்' என்று புது நம்பிக்கை கொடுக்கும் யாமினியின் ஆராய்ச்சியை, சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் அங்கீகரித்து, முழுமைபெற பல்வேறு வழிகளில் உதவி செய்கிறார்கள்.

    `தூதுவளை, மஞ்சள்... தொடர்ந்து இயல்பாக வீட்டுச் சமையலில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், ஓமம், பட்டை போன்ற மூலிகைப் பொருட்கள், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள்... ஆகியவற்றை பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை மருந்தாக உருமாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். ஆராய்ச்சிகளை வெறும் காகித அளவில் மட்டுமின்றி, அதை முழுமைப்படுத்தி, அதற்கான பேட்டன்ட் உரிமம் பெறும் முயற்சியில் இறங்கி உள்ளேன்.

    ஜெர்மனி, பிரான்ஸ், துபாய், ஆஸ்திரேலியா, ஹாங்காங், இலங்கை, பாங்காக்... ஆகிய இடங்களில் அரங்கேறிய பல்வேறு அறிவியல் கருத்தரங்குகளில் பங்கேற்று, ஆராய்ச்சி தகவல்களை பகிர்ந்திருக்கிறேன். இதில் பிரான்ஸ் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற 400 தலைப்புகளில், என்னுடைய ஆய்வு முதலிடம் பெற்றது சிறப்புக்குரியது. இதன்மூலம் கிடைத்த அங்கீகாரத்தினால் பல நாடுகளுக்கு, சிறப்பு பேச்சாளராகவும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.

    வெளிநாடுகளில் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளையும், என்னுடைய ஆராய்ச்சிகளால் கடந்திருக்கிறேன்'' என்றவர், அறிவியல் ஆராய்ச்சிகள் சம்பந்தப்பட்ட பல அமைப்புகள், குழுக்கள் மற்றும் வாரியங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகிப்பதுடன், மாணவ-மாணவிகளுக்கு ஆராய்ச்சி துறையில் ஆர்வம் ஏற்பட பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார்.

    `உயிரி வேதியியல் என்ற துறை, மிகவும் வித்தியாசமானது. சுவாரசியமான பல ஆராய்ச்சிகளைக் கொண்டது. எல்லா துறைகளுக்கும் மூலகாரணமாக திகழ்கிறது. முன்பைவிட, இப்போது உலகளவில் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. உலகளவிலும், மத்திய-மாநில அளவிலும் நிதி உதவியுடன் கூடிய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த துறையின் மகத்துவத்தை, மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி, எல்லா மாணவர்களையும் ஆராய்ச்சியாளராக மாற்றுவதே என்னுடைய லட்சியம். மேலும், சமூகத்திற்குப் பயன்படக்கூடிய பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. இவ்விரண்டையும் சிறப்பாக மேற்கொள்வேன்' என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் விடைபெற்றார்.

    மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, புற்றுநோய் பாதிப்பை வெகு விரைவாக குறைக்கிறது. இந்த குர்குமின் வேதிப்பொருட்களை, நானோ டெக்னாலஜி முறையில் பலப்படுத்தும்போது, இதன் வீரியம் அதிகமாகி, புற்றுநோய் காரணிகளை வெகு விரைவாக கட்டுப்படுத்துகிறது.

    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் போன்ற பேஸ்புக் நிறுவன செயலிகளில் மெட்டா பிராண்டிங் அமலுக்கு வந்தது.


    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசன்ஜர் மற்றும் இதர பேஸ்புக் குழும செயலிகளில் மெட்டா பிராண்டிங் காண்பிக்கிறது. அனைத்து செயலிகளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். வெர்ஷன்களில் மெட்டா பிராண்டிங் தோன்றுகிறது. முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெட்டா என மாற்றுவதாக அறிவித்தது.

    அந்த வரிசையில், தற்போது செயலிகளில் பேஸ்புக்கிற்கு மாற்றாக மெட்டா எனும் பிராண்டிங் இடம்பெற்று இருக்கிறது. முன்பை போன்று வழக்கமான சமூக வலைதளமாக நிறுவனமாக மட்டும் செயல்படுவதை தவிர்த்து, மெட்டாவெர்ஸ் எனும் புதிய மெய்நிகர் தொழில்நுட்பத்தில் இந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.

     கோப்புப்படம்

    பேஸ்புக் மட்டுமின்றி மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு இதர தொழில்நுட்ப நிறுவனங்களும் மெட்டாவெர்ஸ் போன்ற சேவைகளை உருவாக்கும் முயற்சியை துவங்கி உள்ளன.
    ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. #Messenger



    ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதனை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் டார்க் மோட் வசதியை சோதனை செய்து வந்தது.

    முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டார்க் மோட் வசதிக்கான அறிவிப்பு வெளியானது. பின் நான்கு மாதங்கள் கழித்து இந்த அம்சம் இந்தியா உள்பட சில நாடுகளில் வழங்கப்பட்டது. எனினும், இதனை ஆக்டிவேட் செய்ய எமோஜியை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.



    இந்த அம்சத்தை இயக்க மெசஞ்சரில் உங்களது ப்ரோஃபைல் புகைப்படத்தை க்ளிக் செய்து செட்டிங்ஸ் பகுதியில் தெரியும் டார்க் மோட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் திரை முழுக்க இருளாகி இருப்பதை பார்க்க முடியும். டார்க் மோட் ஆக்டிவேட் ஆகியிருக்கும் நிலையில், திரையின் பிரகாசம் குறைக்கப்பட்டிருக்கும். இதனால் குறைந்த வெளிச்சமுள்ள சூழல்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

    முன்னதாக டார்க் மோட் வசதி நிலா எமோஜியை அனுப்பினால் செயல்படும் வகையில் வழங்கப்பட்டிருந்தது. எனினும், இது தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டது. ஜனவரி மாத வாக்கில் இந்த அம்சம் சில நாடுகளில் வழங்கப்பட்டிருந்தது.
    ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற செயலிகளின் சேவை முடங்கியதற்கான காரணம் அது கிடையாது என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. #Facebook



    வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்று்ம மெசஞ்சர் சேவை நேற்றிரவு சில மணி நேரங்களுக்கு முடங்கியது. இந்நிலையில், சேவை முடங்கியதற்கு சைபர் தாக்குதல் காரணமில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

    உலகின் பல்வேறு பகுதிகளில் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளில் குறுந்தகவல் அனுப்புவதில் பயனர்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டனர். இதே போன்று ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் சேவைக்கும் தடங்கல் ஏற்பட்டது. பயனர்கள் சேவை முடக்கம் பற்றி வலைதளங்களில் தெரிவிக்க துவங்கினர்.



    இதற்கு ஃபேஸ்புக் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக் நிறுவன செயலிகளில் சிலவற்றை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதை நாங்கள் அறிவோம். இந்த பிரச்சனையை மிக விரைவில் சரி செய்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் சேவை முடங்கியதிற்கு டிஸ்ட்ரிபியூட்டெட் டினையல் ஆஃப் சர்வீஸ் (DDoS) சைபர் தாக்குதல் காரணமில்லை என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. பிரச்சனையை விரைவில் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறோம். சேவை முடங்கியதற்கு சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என எண்ணியவர்களுக்காக ஃபேஸ்புக் தகவல் வழங்கியிருக்கிறது.

    ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மொபைல் செயலிகள் சீராக வேலை செய்தாலும், போஸ்ட்களை அப்லோடு செய்வதில் சில பயனர்கள் சிரமம் எதிர்கொண்டதாக தெரிவித்திருக்கின்றனர். பிரபல சமூக வலைதளங்களின் சேவை முடங்கியதை தொடர்ந்து பயனர்கள் ட்விட்டர் தளத்தில் தங்களது பிரச்சனைகளை பதிவிட்டனர்.
    மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. #Facebook #WhatsApp



    ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளை ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். 

    வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தொடர்ந்து தனித்தனியே இயங்கினாலும், இதன் உள்கட்டமைப்பு கொண்டு வாடிக்கையாளர்கள் மற்ற செயலிகளை பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். 

    இதுகுறித்து தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மூன்று செயலிகளுக்கிடையே நடைபெறும் சாட்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான ஒப்புதலை ஃபேஸ்புக் இதுவரை வழங்கவில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் சேவைகளை அதிகளவு பயன்படுத்த வைக்கலாம் என ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.



    குறுந்தகவல் அனுபவத்தை பொருத்தவரை மக்களுக்கு வேகமான, எளிமையான, நம்பத்தகுந்த மற்றும் தனியுரிமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என ஃபேஸ்புக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    எங்களது குறுந்தகவல் செயலிகளை முழுமையாக என்க்ரிப்ட் செய்து அவற்றை ஒவ்வொரு நெட்வொர்க் மூலம் மிக எளிமையாக தகவல் பரிமாற்றம் செய்ய வைக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இவ்வாறு செய்லபடுத்தும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரும் மற்ற இரு செயலிகளை நிச்சயம் பயன்படுத்துவர் என கருதமுடியாது. சில பயனர்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்திக் கொண்டு மெசஞ்சரை இன்ஸ்டால் செய்யாமல் இருக்கலாம். 



    மூன்று சேவைகளையும் இணைக்கும் போது வாட்ஸ்அப் பயனர்கள் மற்ற செயலிகளான மெசஞ்சர் அல்லது இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவோருடன் தகவல் பரிமாற்றம் செய்ய வாய்ப்பளிக்கும். இதுதவிர ஃபேஸ்புக் தனது விளம்பரதாரர்களிடம் அதிக வாடிக்கையாளர்கள் தங்களது சேவையை பயன்படுத்துவதாக தெரிவிக்க முடியும்.

    இதன் மூலம் ஃபேஸ்புக் விளம்பர வருவாய் அதிகரிக்கும். ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை அதிகளவு வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சேவைகளை ஒன்றிணைப்பதன் மூலம் ஃபேஸ்புக் தனது போட்டி நிறுவனங்களான ஆப்பிள் ஐமெசேஜ் மற்றும் கூகுளின் மெசேஜிங் சேவைகளுக்கு போட்டியை பலப்படுத்த முடியும்.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதிக்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம். #Facebook #messenger



    ஃபேஸ்புக் எஃப்8 2018 டெவலப்பர் நிகழ்வில் மெசஞ்சர் செயலி முழுமையாக மாற்றப்படுவதாக அந்நிறுவனம் கடந்த ஆண்டின் மே மாதத்தில் அறிவித்திருந்தது. அன்று முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை உலகின் வெவ்வேறு பகுதிகளில் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது.

    ஃபேஸ்புக் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் தகவல் பரிமாற்றத்திற்கென மெசஞ்சர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மெசஞ்சரில் டார்க் மோட் வசதியை வழங்குவதாக ஃபேஸ்புக் கடந்த ஆண்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து டார்க் மோட் அம்சம் பல்வேறு நாடுகளில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

    தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுகிறது என ஜேன் மேன்சுன் வொங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து பகுதிகளிலும் டார்க் மோட் வசதி வழங்கப்படாத நிலையில், செயலியில் பணிகள் நடைபெறுகிறது (Work in Progress) என குறிப்பிட்டுள்ளதாக வொங் தெரிவித்திருக்கிறார்.



    முன்னதாக மெசஞ்சரில் டார்க் மோட் பற்றிய ட்விட் பதிவிட்ட வொங், பின் இந்த அம்சத்திற்கான ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டார். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று டார்க் மோட், பின்னணி நிறங்களை கருப்பு நிறத்திற்கு மாற்றுகிறது. எனினும், சில விவரங்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மெசஞ்சர் செயலியை ஃபேஸ்புக் மாற்றியமைத்தது. அதன்படி புதிய செயலியில் பயனர்கள் மிக எளிமையாக சாட் செய்யவும், வீடியோ கால் மற்றும் இதர அம்சங்களை பயன்படுத்தும் படி உருவாக்கப்பட்டு இருந்தது. மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி எங்கு சோதனை செய்யப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    மெசஞ்ரில் டார்க் மோட் வசதி Me பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனை செயல்படுத்தியதும், ஃபேஸ்புக் தரப்பில் இந்த அம்சம் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாக தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் வழங்கப்படும் புதிய அப்டேட் மூலம் பயனர்களுக்கு பூமராங் வீடியோ, புதிய செல்ஃபி மோட் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் என பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. #Facebook #messenger



    ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் பல்வேறு புதிய வசதிகளை சேர்ப்பதற்கான அப்டேட்களை வழங்கி வருகிறது. 

    அந்த வகையில் பயனர்களுக்கு பூமராங் வீடியோக்கள், செல்ஃபிக்களில் பேக்கிரவுண்டை தானாக பிளர் செய்யும் புதிய செல்ஃபி மோட், புகைப்படம் மற்றும் வீடியோக்களில் மெசஞ்சர் ஸ்டிக்கர்களை சேர்க்க ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    மெசஞ்சர் செயலியில் ஏற்கனவே நார்மல், வீடியோ, டெக்ஸ்ட், பூமராங் மற்றும் செல்ஃபி உள்ளிட்ட கேமரா மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் வரிசையில் புதிய செல்ஃபி மோட் மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக மெசஞ்சர் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் மூலம் சாட்களை சுவாரஸ்யமாக்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.



    இனி கேமரா ஐகானின் அருகில் இருக்கும் ஸ்டிக்கர் ஆப்ஷனை கிளிக் செய்து புதிதாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி பொருளை சேர்த்துக் கொள்ள முடியும். மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகள் உலகம் முழுக்க மெசஞ்சர் செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.

    அந்த வகையில் மெசஞ்சரின் புதிய வடிவமைப்பு பெற்ற செயலி மற்றும் பழைய பதிப்புகளில் அப்டேட் செய்வோருக்கு புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக மெசஞ்சர் லைட் செயலியில் அனிமேட் செய்யப்பட்ட ஜிஃப் படங்களுக்கான வசதி சேர்க்கப்பட்டது. எனினும், இந்த வசதியை இயக்க ஜிபோர்டு போன்ற மூன்றாம் தரப்பு கீபோர்டு செயலிகளை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
    ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் நேரலை வீடியோ மூலம் ஷாப்பிங் செய்ய புது வசதியை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. #Facebook



    ஃபேஸ்புக் நிறுவனம் வியாபார நிறுவனங்களுக்கென நேரலை வீடியோ வசதியை சோதனை செய்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசதியை கொண்டு வியாபார நிறுவனங்கள் தங்களது பொருட்களை நேரலை வீடியோ மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கி கூற முடியும். 

    நேரலை வீடியோக்களை பார்க்கும் பயனர்கள், அவர்களுக்கு விரும்பிய பொருட்களை அவர்களது சாதனத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டு பின், அதை வாங்கலாம். பயனர்கள் எடுத்து வைத்திருக்கும் ஸ்கிரீஷாட் படத்தை மெசஞ்சர் வழியே விற்பனையாளருக்கு அனுப்பி, சாட் செய்து பின் பண பரிமாற்றம் செய்து பொருளை வாங்கிக் கொள்ளலாம். 

    புது ஷாப்பிங் அம்சம் தாய்லாந்தில் தேர்வு செய்யப்பட்ட சில ஃபேஸ்புக் பேஜ்களில் மட்டும் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. தாய்லாந்து ஃபேஸ்புக் பயனர்கள் நேரலை வீடியோ மூலம் விற்பனை செய்வது பயன் தரும் வகையில் இருந்தது என தெரிவித்து இருக்கிறன்றனர்.




    வீடியோ மூலம் பொருட்களை விளக்கும் போது அவற்றின் பயன்பாடு பற்றி, வாடிக்கையாளர்கள் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும். ஃபேஸ்புக் தாய்லாந்து மார்கெட் பிளேஸ் அம்சத்தில் ஹோம் ரென்டல்ஸ் போன்ற அனுபவத்தை வழங்க திட்டமிட்டு வருவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    ஃபேஸ்புக் தளத்தின் மார்கெட் பிளேஸ் அம்சம் உலகின் மற்ற பகுதிகளை விட தாய்லாந்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது என ஃபேஸ்புக் அம்சங்களுக்கான மேளாலர் மயான்க் யாதவ் தெரிவித்திருக்கிறார். லைவ் ஷாப்பிங் அம்சத்திற்கான சோதனை தற்சமயம் நடைபெற்று வருகிறது. லைவ் ஷாப்பிங் விவரத்தை ஃபேஸ்புக் பேஜஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும். 

    இதன் மூலம் ஃபேஸ்புக் பேஜ்களில் இருப்பவர்கள் நேரலை வீடியோவை உடனுக்குடன் பார்த்து, குறிப்பிட்ட பொருட்களை வாங்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ள முடியும். தங்களுக்கு நேரலையில் வரும் பொருள் பிடித்திருக்கும் பட்சத்தில் மெசஞ்சரில் சாட் செய்து பொருளை வாங்கிக் கொள்ளலாம். #Facebook
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் இருந்தபடியே வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வசதியை வழங்கும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Messenger



    ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் செயலியில் வீடியோக்களை பார்த்து ரசிக்க புது வசதியை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புது வசதியை கொண்டு பயனர்கள் தங்களது சாதனங்களில் க்ரூப் சாட் மூலம் நண்பர்களுடன் இணைந்து வீடியோக்களை பார்க்க முடியும்.

    ஃபேஸ்புக் மெசஞ்சரில் பயனர்கள் அதிக நேரத்தை செலவிட வைக்கும் நோக்கில் ஃபேஸ்புக் புது அம்சத்தை வழங்க இருக்கிறது. புது அம்சம் மெசஞ்சரின் கோட்பேஸ் மூலம் கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஒரே வீடியோவை பயனர் தனது நண்பருடன் ஒன்றிணைந்து பார்க்க முடியும். இதேபோன்று ஒரே வீடியோவை பற்றி சாட் செய்ய முடியும். 

    இவ்வாறு வீடியோ பார்க்கும் போது அனைவரும் வீடியோவை இயக்க முடியும். மெசஞ்சரின் புது அம்சம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்குள் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.



    ஒன்றாக வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் எங்கிருந்து வீடியோக்களை தேட முடியும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஃபேஸ்புக்கில் இருந்து யு.ஆர்.எல். முகவரியை பதிவு செய்ய முடியும் என்றும், மெசஞ்சர் வழியாக வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

    இதுமட்டுமின்றி மெசேஜ் கம்போஸ் செய்யும் அல்லது டிஸ்கவர் டேப் மூலம் புது வீடியோக்களை பிரவுஸ் செய்ய முடியும் என்றும், யூடியூப் போன்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து வீடியோக்களை பார்க்கும் வசதியை ஃபேஸ்புக் மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீடியோக்களை ஒன்றிணைந்து பார்க்கச் செய்வதன் மூலம், மெசஞ்சர் தளத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகம் ஆகும். வீடியோ பார்க்கும் சேவையில், விளம்பர வீடியோக்கள், திரைப்பட டிரெயிலர்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம். தற்சமயம் வரை இந்த அம்சம் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சம் வழங்குவதை உறுதி செய்திருந்த நிலையில், பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படுகிறது. #messengerupdate



    ஃபேஸ்புக் தளத்தில் அன்சென்ட் அம்சம் வழங்குவதை ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், இதற்கான அப்டேட் வழங்கப்படுவதாக தெரிகிறது. அதன்படி ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய மெசேஜ்களை திரும்பப் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

    மெசன்ஜரில் அனுப்பிய குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட முதல் பத்து நிமிடங்களுக்குள் அவற்றை திரும்பப்பெற முடியும். இதன் மூலம் தவறாக அனுப்பிய குறுந்தகவல்களை திருத்தவோ அல்லது நிரந்தரமாக அழிக்கவோ முடியும். இந்த ஆப்ஷன் பயன்படுத்தும் போது குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் தகவல் திரையில் தோன்றுகிறது. 

    ஃபேஸ்புக்கில் அன்சென்ட் செய்யப்பட்ட மெசேஜ்கள் சிறிது நேரத்திற்கு அப்படியே இருக்கும், இதனால் மெசேஜ்கள் ரிப்போர்ட் செய்யப்பட்டால் அவை மறுபரிசீலனை செய்யப்பட்டும். அனுப்பிய மெசேஜ்களை திரும்பப்பெறும் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்படுகிறது.



    முதற்கட்டமாக இந்த வசதி போலாந்து, பொலிவியா, கொலம்பியா மற்றும் லித்துவேனியா உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்படுகிறது. எனினும், மற்ற நாடுகளில் விரைவில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படம், வீடியோக்கள், லின்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய பத்து நிமிடங்களுக்குள் அழிக்க முடியும்.

    மெசஞ்சர் உரையாடலில் அனுப்பப்படும் அனைத்தும் தகவல்களை அழிக்க முடியும், எனினும் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை மட்டுமே உங்களால் அழிக்க முடியும். மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்களை உங்களால் அழிக்க முடியாது. 

    மெசஞ்சரில் அன்சென்ட் அம்சத்தை பயன்படுத்த, மெசேஜை அழுத்திப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மெசேஜை திரும்பப் பெறச் செய்யும் ஆப்ஷன் திரையில் தெரியும். அதில் அனைவருக்கும் அழிக்கக் கோரும் ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும். 

    இவ்வாறு செய்யும் போது “மெசேஜ் நிரந்தரமாக அழிக்கப்படும், நீங்கள் மெசேஜை அழித்த விவரம் அனைவருக்கும் தெரியவரும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்” என்ற எச்சரிக்கை தகவல் திரையில் தோன்றும். மேலும் பல்வேறு புதிய அன்சென்ட் வசதிகளை வழங்க ஃபேஸ்புக் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் கடந்த ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Messenger



    வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. தற்சமயம் இதே அம்சம் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட இருக்கிறது.

    ஐ.ஓ.எஸ். 191.0 வெர்ஷனின் குறியீடுகளில் கலர் கிரேடியன்ட்கள், ரீ-ஸ்கின் செய்யப்பட்ட இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவை வரும் வாரங்களில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அல்லது அழிக்கும் வசதியை வழங்குவதாக குறிப்பட்டிருக்கிறது.



    அந்த வகையில் மெசஞ்சர் செயலியில் குறுந்தகவல்களை அனுப்பிய 10 நிமிடங்களுக்குள் அதனை திரும்பப் பெறவோ அல்லது அழிக்கவோ முடியும். #Messenger #Facebook
    ஃபேஸ்புக் மெசன்ஜரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் மூலம் வீடியோ சாட்டில் இருந்த படி ஏ.ஆர். கேம்களை விளையாட முடியும். #AugmentedReality


    ஃபேஸ்புக் மெசன்ஜரில் புதிய கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மல்டி-பிளேயர் வீடியோ சாட் ஏ.ஆர். கேம்ஸ் என அழைக்கப்படும் புதிய வசதி மெசன்ஜரில் வீடியோ காலிங் அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.

    அதிகபட்சம் ஆறு பேருடன் வீடியோ கால் மேற்கொண்டு கேமிங் அனுபவத்தை அதிக உரையாடல்களுடன், நிஜமானதாக உணர முடியும். மெசன்ஜரில் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு சவால் விடுத்து, அவர்கள் எத்தனை நேரம் சிரிக்கமால் உள்ளனர் என்பதை பார்க்கவோ அல்லது விண்வெளியில் அதிரடி போர் விளையாட்டு போன்றவற்றை அனுபவிக்க முடியும்.

    இதுவெறும் துவக்கம் தான் என்றும் விரைவில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த புதிய கேம்கள் அடுத்தடுத்து சேர்க்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அந்த வகையில் பந்தை பின்புறம் பாஸ் செய்யும் விளையாட்டு “பீச் பம்ப்”  (Beach Bump) என்ற பெயரிலும் மேட்ச் செய்யும் பூனை விளையாட்டு “கிட்டன் கிரேஸ்” (Kitten Kraze) என்ற பெயரில் வழங்கப்பட இருக்கிறது. 

    புதிய கேமிங் அனுபவத்தில் திளைக்க அப்டேட் செய்யப்பட்ட மெசன்ஜர் செயலியை பயன்படுத்த வேண்டும். அப்டேட் செய்தவர்கள் சாட் விண்டோவில் விளையாட விரும்புபவரை தேர்வு செய்து, மேலே காணப்படும் வீடியோ ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஐகான் திரையின் மேல் வலது புறமாக காணப்படும்.

    பின் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து மெசன்ஜரில் காணப்படும் ஏ.ஆர். கேம்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இனி நீங்கள் தேர்வு செய்த நபருக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். புதிய அனுபவங்கள் ஏ.ஆர். ஸ்டூடியோ மேலும் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இவை உங்களுக்கு அதிகம் அறிமுகமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க ஏதுவாக இருக்கும். #Facebook #AugmentedReality
    ×