என் மலர்
உலகம்
- இந்த வருடம் இறுதியில் இந்தியா வர திட்டமிட்டிருந்தார்.
- டெல்லி குண்டு வெடிப்பால் பாதுகாப்பு கவலை தெரிவித்து பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்பு கவலை காரணமாக பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேதன்யாகு கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். பாதுகாப்பு மதிப்பீடு நிலுவையில் உள்ள நிலையில் அடுத்த வருடம் தொடக்கத்தில் வரும் வகையில் புதிய தேதியை கோருவார் எனத் தெரிகிறது.
நேதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இது 3-வது முறையாகும். கடந்த செப்டம்பர் 9-ந்தேதி இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் 17-ந்தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதால் இந்திய பயணத்தை ரத்து செய்தார். அதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதமும் தேர்தல் காரணமாக இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதம்ர மோடி ஆவார்.
- உக்ரைன் தலைநகரில் உள்ள இரண்டு மாவட்டங்களில் தாக்குதல்.
- 9 மாடி குடியிருப்பு கட்டிடம், எரிசக்தி கட்டமைப்பு சேதம் எனத் தகவல்.
உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். இறுதியாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய போர் நிறுத்த திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதில் பெரும்பாலான கோரிக்கைகள் ரஷியாவுக்கு சாதகமாக உள்ளது. இதனால் உக்ரைன் ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள், உக்ரைன் நாட்டு தலைவர்களுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம்தான் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதற்குள் இன்று காலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா தாக்குதல் நடத்தியள்ளது.
பெச்செர்ஸ்க் மற்றம் டினிப்ரோவ்ஸ்கி ஆகிய மாவட்டங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. டினிப்ரோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள 9 மாடி கட்டிடம் தீப்பிடித்து எரியும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
குடியிருப்பு கட்டிடங்களை தவிர்த்து எரிசக்தி கட்டமைப்பு மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து உக்ரைன் உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.
- உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக தகவல்.
- சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோனில் பேசியதாக தெரிவித்துள்ளார். அப்போது ஜி ஜின்பிங் சீனாவுக்கு வர அழைப்பு விடுத்ததை ஏற்றுக் கொண்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவுக்கு செல்ல இருப்பதாகவும், தனது அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வருடம் இறுதியில் அமெரிக்க வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவுடனான எங்கள் உறவு மிகவும் வலுவானது என சமூக வலைத்தளத்தில் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இருவரும் உக்ரைன், அமெரிக்க சோயாபீன்ஸ் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
வரி விதிப்பு காரணமாக அமெரிக்கா- சீனா இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தென்கொரியாவில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். அப்போது இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.
தைவான் குறித்து ஜப்பான் கருத்து தெரிவித்ததால் சீனா- ஜப்பான் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தைவான் குறித்து டொனால்டு டிரம்ப் குறிப்பிடவில்லை.
சுயாட்சி பெற்ற தைவான் சீன ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தைவான் குறித்து யாரும் கருத்து தெரிவித்தால் அதற்கு கடும் கண்டனமும் தெரிவித்து வருகிறது.
தைவானுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுத்தால், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான ஜப்பானின் ராணுவம் இதில் ஈடுபடக்கூடும் என ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி குறிப்பிட்டிருந்தார்.
- இந்த கௌரவத்தைப் பெற்ற ஒரே இந்திய வம்சாவளி பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
- ரகசிய தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் நாஜிகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
திப்பு சுல்தானின் வழித்தோன்றலும், இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களுக்கு எதிரான ரகசிய உளவாளியாக இருந்த நூர் இனாயத் கான்-ஐ பிரான்ஸ் அரசு கௌரவித்துள்ளது.
பிரான்ஸ் அரசு தபால் சேவையான லா போஸ்ட், நூர் உருவம் கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த கௌரவத்தைப் பெற்ற ஒரே இந்திய வம்சாவளி பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நாஜி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்காற்றிய 12 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நினைவுகூரும் வகையில் தொடர்ச்சியான தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது நூர் இடம்பெற்றுள்ளார்.
நூர், பிரான்சில் பிரிட்டிஷ் ராணுவ சிறப்பு நடவடிக்கை பிரிவின் ரகசிய உளவாளியாக பணியாற்றினார். ரகசிய தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் அவர் நாஜிகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
நூரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய 'ஸ்பை பிரின்சஸ்: தி லைஃப் ஆஃப் நூர் இனாயத் கானின்' ஆசிரியர் ஷ்ரபானி பாசு பேசுகையில், பிரான்ஸ் அரசாங்கம் நூர் இனாயத் கானின் தபால் தலையை வெளியிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடி தனது உயிரைத் தியாகம் செய்த ஒரு பெண்ணின் முகம் பிரான்சில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் தபால் தலையில் தோன்றுவது அற்புதம்" என்று கூறினார்.
- சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும் என கூறி கேலி செய்ததாகவும் தோங்டாக் குற்றம் சாட்டினார்.
- இந்திய பயணி கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் கொடூரமானது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக் என்ற பெண் கடந்த நவம்பர் 21 அன்று லண்டனில் இருந்து ஜப்பானுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஜப்பான் விமானத்தை பிடிப்பதற்காக காத்திருந்தார்.
ஆனால் அங்கு சீன அதிகாரிகள் பிரேமா, அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது இந்திய பாஸ்போர்ட் செல்லாது என கூறி சுமார் 18 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது சர்ச்சைக்குரிய வரைபடங்களை வெளியிட்டு வருகிறது.
இந்த சூழலில்தான் பிரேமாவை தடுத்து வைத்த சீன அதிகரிகள் அவருக்கு அடிப்படை வசதிகளையும் மறுத்து அலைக்கழித்துள்ளனர்.
அவருக்கு சரியான உணவு அல்லது அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை. அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜப்பானுக்கு விமானத்தில் ஏற விடாமல் தடுக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள அவரது தோழி ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகிய பிறகு, அதிகாரிகள் தலையிட்டு அவர் வேறு விமானத்தில் அனுப்பப்பட்டார்.
சீன அதிகாரிகளும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களும் தன்னைப் பார்த்து சிரித்ததாகவும், "சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும்" என கூறி கேலி செய்ததாகவும் தோங்டாக் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக ஷாங்காயில் உள்ள இந்திய தூதரகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், வெளிப்படையான காரணமின்றி ஒரு இந்திய பயணி கைது செய்யப்பட்டுள்ளது மிகவும் கொடூரமானது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அதன் குடிமக்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டில் பயணிக்க அனைத்து உரிமைகளும் உள்ளன. சீனாவின் நடவடிக்கைகள் சர்வதேச சிவில் விமான ஒப்பந்தங்களுக்கு எதிரானவை என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய தோங்டாக், இது இந்தியாவின் இறையாண்மைக்கு அவமானம் என்றும். தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும், அருணாச்சலப் பிரதேச மக்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.
- ஆக்கிரமிப்புவாத இந்துத்துவா அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.
- ஆத்திரமூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு ராஜ்நாத் சிங் மற்றும் பிற இந்தியத் தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
சிந்து மாகாணம் இந்தியாவுக்கு சொந்தமாகலாம் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் பேசியதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் மாயையான மற்றும் ஆபத்தான கருத்துக்களை பாகிஸ்தான் வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தகைய அறிக்கைகள் யதார்த்தத்தை சவால் செய்ய முயலும் ஆக்கிரமிப்புவாத இந்துத்துவா அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. மேலும் அவை சர்வதேச சட்டம், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் மற்றும் நாடுகளின் இறையாண்மையை மீறுகிறது" என்று தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆத்திரமூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு ராஜ்நாத் சிங் மற்றும் பிற இந்தியத் தலைவர்களை கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு இணங்க, ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு காண நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நீதி, சமத்துவம் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தியாவுடனான அனைத்து மோதல்களுக்கும் அமைதியான தீர்வு காண பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த காலங்களைப் போலவே, பாகிஸ்தான் தனது பாதுகாப்பு, தேசிய சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதில் ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிச்சக் செய்தான்.
- மற்ற 2 பயங்கரவாதிகளும் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள பெஷாவரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சதார் பகுதியில் அமைந்துள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தில் நேற்று காலை 8 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது.
நேற்று காலை ராணுவ வீரர்கள் வழக்கமான படை அணிவகுப்பு நடத்தியபோது 3 பயங்கரவாதிகள் துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிரதான வாயிலின் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். அதில் ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிச்சக் செய்தான். இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து மற்ற 2 பயங்கரவாதிகளும் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர். அவர்கள் மீது ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். காயமடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு 'தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்' அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
- எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது.
- தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு எரிமலை 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்துள்ளது.
தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ள ஹைலே குப்பி எரிமலை இன்று வெடித்துள்ளது. இதனால் எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது.
எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
எரிமலையிலிருந்து சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வருகின்றன.
இந்த எரிமலை வெடிப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தியாவில் விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கண்ணூரில் இருந்து அபுதாபிக்கு சென்ற இண்டிகோ விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
- காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு காசா மனிதாபிமான பவுண்டேசன் நிறுவனம் உதவி வழங்கி வந்தது.
- போர் நிறுத்தம் ஏற்பட்டதால் காசாவில் நிறுவனத்தை மூடியதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு பல்வேறு உதவி நிறுவனங்கள் உதவி செய்து வந்தன. மனிதாபிமான அடிப்படையில் உணவுப்பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை வழங்கி வந்தன. இதில் காசா மனிதாபிமான பவுண்டேசன் என்ற நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அதரவு நிறுவனம் என சர்ச்சைக்குள்ளானது.
கடந்த 6 வாரத்திற்கு முன்னதாக இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்படடது. இதனால் விநியோகம் மையங்களை மூடியது. இந்த நிலையில், காசாவில் நிறுவனம் மூடப்படுவதாக இன்று அறிவித்துள்ளது.
"காசா மக்களுக்கு உதவி வழங்குவதற்கு ஒரு சிறந்த வழி இருக்கிறது என்பதை காட்டும் எங்கள் பணியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்" என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
- ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இதேபோன்ற தடையை முன்மொழிந்துள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இதனிடையே 16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
நிதி மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற ஆன்லைன் அபாயங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் வகையில் வழிமுறைகளை வகுத்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
ஏற்கனவே டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகள் 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக்கிடந்தன.
- பலியானவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் 2 ஆண்டு களுக்கும் மேலாக போர் நடந்தது. இந்த போரின் போது காசா நகரம் மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்த போரின் போது ஹமாஸ் படையை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை ஆதரித்தது. இதையடுத்து இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா படைக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், ஹிஸ்புல்லா படையை குறிவைத்து லெபனானில் அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடைசியாக கடந்த ஜூன் மாதம் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு எந்த தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள புகா் பகுதிகளில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. மூத்த ஹிஸ்புல்லா படை தலைவரான அலி தப்தாவை குறிவைத்து அங்குள்ள கட்டிடம் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. 9 மாடி கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் பொது மக்களில் 5 பேர் கொல்லப் பட்டனர். 28 போ் படுகாயம் அடைந்தனா். இதை லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பலியானவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக்கிடந்தன. தெருவில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கார் சேதம் அடைந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மீட்பு படையினர் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டிடத்தில் இருந்து புகை வெளிவந்து கொண்டிருந்தது.
சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாதுகாப்புக்காக அந்த இடத்தில் லெபனான் வீரர்கள் குவிக்கப்பட்டனர். கட்டிடத்தின் மீது 3 ஏவுகணைகள் வீசப்பட்டதாக லெபனானின் அதிகாரப்பூர்வ தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஹரேத் ஹிரீக் பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது. இது ஹிஸ்புல்லா படையினர் ஆதிக்கம் செலுத்தும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் இந்த தாக்குதலுக்கான உத்தரவை வழங்கியதாக கூறியுள்ளது. 'பெய்ரூட்டின் மையப்பகுதியில் பயங்கரவாத அமைப்பின் கட்டமைப்பையும், மறுசீரமைப்பையும் வழி நடத்தி வந்த ஹிஸ்புல்லா தலைமை தளபதியை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது' என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 'இஸ்ரேல் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் தனது நோக்கங்களை அடைவதற்கான செயல்பாட்டில் உறுதியாக உள்ளது' என்றும் கூறியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கட்ஸ் கூறுகையில், 'இஸ்ரேலுக்கு எதிராக கையை உயர்த்தும் எவரின் கையும் வெட்டப்படும், இஸ்ரேலின் அதிகபட்ச அமலாக்க கொள்கை தொடரும்' என்று எச்சரித்தார்.
ஹிஸ்புல்லா படையினர் மீண்டும் ஆயுதங்களை ஏந்தக்கூடாது, அந்த படை மீண்டும் கட்டமைக்கப்படக்கூடாது என்று இஸ்ரேல் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. மேலும் இஸ்ரேலுக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு லெபனான் அதிபா் ஜோசப் ஓன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- துருக்கி ஏர்லைன்ஸ் இன்று முதல் நவம்பர் 28-ந்தேதி வரை விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.
- 6 விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. இந்த நிலையில், கரீபியன் கடற்பகுதியில் போர்க்கப்பல்கள், போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.
உலகின் சக்தி வாய்ந்த யு.எஸ்.எஸ்.ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலையும் அனுப்பி வைத்துள்ளது. இது போருக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இதனால் வெனிசுலா பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறது. அதன்படி சிறப்பு அவசரநிலையை அதிபர் நிகோலஸ் அறிவித்து உள்ளார். 'பிளான் இன்டிபென் டென்சியா 200' என்ற திட்டத்தின் கீழ், நிலம், கடல், வான்வெளியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கை யாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் உலக அளவில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளை சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.
6 விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் இன்று முதல் நவம்பர் 28-ந்தேதி வரை விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.






