search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் தலை"

    • தபால் தலையை வெளியிட்ட பிரதமர் மோடி ராம பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
    • பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டன.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.

    அயோத்தி ராமர் பிறந்து, வளர்ந்த இடம் என்பதால் அங்கு 5 வயதுடைய பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    மைசூரை சேர்ந்த சிற்பி இந்த பால ராமர் சிலையை செதுக்கி உள்ளார். இந்த சிலை பிரதிஷ்டை வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி முன்னிலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

    நேற்று பால ராமர் சிலையை அயோத்தி கோவிலுக்குள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இன்று பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டன.

    இந்நிலையில், ராமர் கோவில் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். தபால் தலைகளின் தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

    தொகுப்பு புத்தகம் வெளியிட்ட பிரதமர் மோடி பின்னர் ராம பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று நினைவு தபால் தலையை வெளியிட்டார்.
    • தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இதைப் பெற்றுக் கொண்டார்.

    இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று நினைவு தபால் தலையை வெளியிட்டார்.

    தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இதைப் பெற்றுக் கொண்டார். மத்திய தகவல் தொடர்பு துறை இணை மந்திரி தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி, தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் எஸ்.ராஜேந்திர குமார் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் கி.பி 705-745 முதல் தஞ்சாவூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தினார்.
    • அறம் மாறா நல்லாட்சி நடத்திய பேரரசர் சுவரன்மாறனின் பிறந்தநாளான மே 23 -ந் தேதி அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் கிராமத்தில் பெரும்பிடு குமுத்தரையர் காளாபிடாரி அம்மன் கோவிலில் அமைந்துள்ள அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பில் அதன் பொறுப்பாளர் ஜோதி தலைமையில் பேராசி ரியர் சந்திரசேகரன் மற்றும் குழுவினர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்ட பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் கி.பி 705-745 முதல் தஞ்சாவூரை தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்தினார். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் ஊராட்சியில் அன்னை மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோவில் அமைத்து வணங்கினார். அறம் மாறா நல்லாட்சி நடத்திய பேரரசர் சுவரன்மாறனின் பிறந்தநாளான மே 23 -ந் தேதி அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.

    தமிழக அரசும், மத்திய அரசும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறனுக்கு விரைவில் தபால்தலை வெளியிட வேண்டும். மேலும் சிவனுக்கு 1008 லிங்கங்களை அமைத்து சைவத்துக்கு பெரும் தொண்டாற்றிய ஆன்மீக சித்தன் பேரரசர் சுவரன்மாறன் பெயரில் தஞ்சாவூர் தமிழ் பல்கலை க்கழகத்தில் ஆய்வு இருக்கை ஒன்று அமைத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போன்ற கோரிக்கை அடங்கிய மனுவை டெல்லியில் தி.மு.க. எம்.பி கனிமொழியிடமும் கொடுத்தனர்.

    ×