என் மலர்
நீங்கள் தேடியது "Sindh"
- ஆக்கிரமிப்புவாத இந்துத்துவா அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.
- ஆத்திரமூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு ராஜ்நாத் சிங் மற்றும் பிற இந்தியத் தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
சிந்து மாகாணம் இந்தியாவுக்கு சொந்தமாகலாம் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் பேசியதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் மாயையான மற்றும் ஆபத்தான கருத்துக்களை பாகிஸ்தான் வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தகைய அறிக்கைகள் யதார்த்தத்தை சவால் செய்ய முயலும் ஆக்கிரமிப்புவாத இந்துத்துவா அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. மேலும் அவை சர்வதேச சட்டம், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் மற்றும் நாடுகளின் இறையாண்மையை மீறுகிறது" என்று தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆத்திரமூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு ராஜ்நாத் சிங் மற்றும் பிற இந்தியத் தலைவர்களை கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு இணங்க, ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு காண நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நீதி, சமத்துவம் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தியாவுடனான அனைத்து மோதல்களுக்கும் அமைதியான தீர்வு காண பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த காலங்களைப் போலவே, பாகிஸ்தான் தனது பாதுகாப்பு, தேசிய சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பல ஆண்டாக அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிப்பட்டு வருகின்றனர்.
- சிலர் எப்படியோ அங்கிருந்து தப்பித்து, இந்தியாவுக்கு வந்துவிட்டனர் என்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பல ஆண்டுகளாக நமது அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் அவதிப்பட்டு வருகின்றனர்.மக்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் எப்படியோ அங்கிருந்து தப்பித்து, இந்தியாவுக்கு வந்துவிட்டனர்.
குறிப்பிட்ட சமூகத்தின் ஓட்டு வங்கியை திருப்திபடுத்துவதற்காக அவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர்.
அண்டை நாடுகளில் இருந்து வரும் ஒரு சிறப்பு வகுப்பினருக்கு அடைக்கலம் வழங்கப்பட்டது. உண்மையிலேயே அதற்கு தகுதியான இந்து சமூக மக்களுக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. அவர்களின் துன்பங்கள் புரிந்து கொள்ளப்படவில்லை.
ஆனால் அந்த வலியை யாராவது புரிந்து கொண்டனர் என்றால், அது பிரதமர் மோடி தான். அதனால் தான் குடியரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
சிந்து பகுதியைச் சேர்ந்த இந்துக்கள், குறிப்பாக அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் இருந்து சிந்து பிரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளவில்லை என அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
சிந்துவில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் சிந்து நதியை புனிதமாகக் கருதினர். இன்று சிந்து நிலம் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாகரீக ரீதியாக எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். நிலத்தை பொறுத்தவரை எல்லைகள் மாறலாம். யாருக்கு தெரியும், சிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பலாம் என தெரிவித்தார்.
- ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.
- பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
நாகர்கோவில்:
ஆண்-பெண் என்ற இருபாலத்தினருக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்களாக திருநங்கைகள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசு வாய்ப்பு வழங்கி வருகிறது.
மேலும் சாதாரண மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நலத்திட்டங்களும் இவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஆண்-பெண்களை போன்று அனைத்து துறைகளிலும், திருநங்கைகளும் தடம் பதிக்க தொடங்கி இருக்கின்றனர்.
அவர்கள் சுயதொழிலில் ஈடுபடுவது மட்டுமின்றி, மத்திய-மாநில அரசு துறைகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர், ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இதன்மூலம் தென்னக ரெயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பையும் அவர் பெற்றிருக்கிறார். நாகர்கோவிலை சேர்ந்த அவரது பெயர் சிந்து. வாழ்க்கையில் உயர கல்வியே முக்கியம் என்பதை உறுயியாக நம்பிய சிந்து, பி.லிட் தமிழ் இலக்கியம் படித்தார்.
பின்னர் கடந்த 2003-ம் ஆண்டு தெற்கு ரெயில்வேயில் பணியில் சேர்ந்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியாற்றிய அவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு பணி மாறுதலாகி வந்தார். மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினார்.
இந்நிலையில் ஒரு சிறிய விபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் தொழில்நுட்ப பிரிவில் சிந்துவால் பணியாற்ற முடியவில்லை. தொழில்நுட்பம் இல்லாத பணியில் தொடர முடியுமா என்று அவரிடம் ரெயில்வே துறையினர் கேட்டனர்.
அதற்கு அவர் சம்மதித்தது மட்டுமின்றி, டிக்கெட் பரிசோதகராக பணிபுரிய விரும்புவதாக தெரிவித்தார். அதன்பேரில் திருநங்கை சிந்து, திண்டுக்கல் ரெயில் நிலையத்திலேயே டிக்கெட் பரிசோதகராக நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் பரிசோதகராக அவர் பணியில் சேர்ந்தார்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த தான், டிக்கெட் பரிசோதகராகி இருப்பது சிந்துவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சிந்து கூறியதாவது:-
டிக்கெட் பரிசோதகராக பணியில் சேர்ந்திருப்பது எனது வாழ்நாளில் மறக்க முடியாக நிகழ்வு. நான் டிக்கெட் பரிசோதகராக பணியாற்ற சில சவால்கள் இருந்தன. ஆனால் அது எனது கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு நனவாகிவிட்டது.
இது எனக்கு மட்டுமல்ல. திருநங்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் என்பதால் என்னை சுற்றியிருந்தவர்கள் என்னை எப்படி பார்ப்பார்கள் என்று நான் மிகவும் கவலைப் பட்டேன். இருப்பினும் தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியனும், அதன் அலுவலக பணியாளர்களும் எனக்கு ஆதரவளித்தனர்.
என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். திருநங்கையான எனது சாதனைக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருந்ததை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். தற்போது பெரும்பாலான மக்கள் எங்களை மிகவும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






