என் மலர்tooltip icon

    உலகம்

    • அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.
    • 4 ஆண்டுகள் பயணிக்கும் இந்த திட்டத்துக்கு "Skip Forward" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடையும் நிலையில் பதவியேற்பு அமைச்சகதுக்கானவர்களை தேர்வு செய்யும் வேளைகளில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.

    ஜோ பைடன் ஆட்சி போலல்லாது டிரம்ப் ஆட்சியில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற பயம் இப்போதே பலரை தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் டிரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க பிரபல சொகுசு கப்பல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

    அடுத்த நான்கு ஆண்டுகள் கடலிலேயே உலகத்தைச் சுற்றி வரும் பயண திட்டத்தை Villa Vie Residences சொகுசு கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் Villa Vie Odyssey க்ரூஸ் கப்பல் மூலம் 4 ஆண்டுகள் பயணிக்கும் இந்த திட்டத்துக்கு "Skip Forward" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த நான்கு வருட பேக்கேஜில், டபுள் ரூமில், ஒரு நபருக்கு $159,999 மற்றும் ஒரு நபர் தங்கும் சிங்கிள் அறைகளுக்கு $255,999 கட்டணம் ஆகும். அடுத்த நான்கு ஆடுகளில் 140 நாடுகளில் உள்ள 425 துறைமுகங்களுக்குச் சென்று

    7 கண்டங்களையும் அவற்றில் உள்ள 13 "உலக அதிசயங்கள்" மற்றும் 100 க்கும் மேற்பட்ட தீவுகளையும் சுற்றி வர முடியும்.

    சுமார் 600 பேர் இதில் பயணிக்கலாம் இப்போது கப்பல் ஏறினால் அடுத்து 2029 ஆம் ஆண்டுதான் இவர்கள் மீண்டும் அமெரிக்கா வந்து சேர்வார்கள்

    • முதலில் கடந்த 2001 ஆம் ஆண்டில் 8 ஜோடிகள் எந்த ஆடையும் அணியாமல் நிர்வாண திருமணம் செய்துள்ளனர்
    • வெவ்வேறு நாடுகளிலிருந்து இந்த முறையைக் கேள்விப்பட்டு அங்குவந்து திருமணம் செய்து கொண்டனர்.

    உலகில் கலாச்சாரங்கள் மட்டும் வாழ்க்கை முறை வெவ்வேறாக இருந்தாலும் திருமணம் என்பது அனைத்து நாட்டு மக்களிடையேயும் பொதுவாக காணப்படும் வழக்கம். மதம் ஆகியவற்றைப் பொறுத்து திருமண முறைகள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் இங்கு ஒரு இடத்தில் நிர்வாண திருமணங்கள் என்பது சகஜமாகியுள்ளது.

    இந்த முறைப் படி திருமண சடங்குகளில் மணமகன் - மணமகள், மாப்பிளை வீட்டார், பெண் வீட்டார், விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் என அனைவரும் நிர்வாணமாக இருப்பார்கள்.

    கரீபியன் தீவு நாடான ஜமைக்காவில் இந்த வினோத முறை தொடங்கியுள்ளது. ஜமைக்காவில் ரன்அவே என்ற பகுதியில் ஹெடோனிசம் ரிசார்ட் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இந்த சேவையை வழங்கி வருகிறது. அசாதாரணமானவற்றை விரும்புபவர்களுக்காக இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.

     

    அதன்படி முதலில் கடந்த 2001 ஆம் ஆண்டில் 8 ஜோடிகள் எந்த ஆடையும் அணியாமல் நிர்வாண திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 29 ஜோடிகளுக்கு இதுபோல அங்கு வைத்து நிர்வாண திருமணம் நடந்துள்ளது.

    வெவ்வேறு நாடுகளிலிருந்து இந்த முறையைக் கேள்விப்பட்டு அவர்கள் அங்கு வந்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த நிலையில் பலரும் இதற்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

    கணவன் மனைவி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படியான திருமணங்களை ஊக்குவிப்பதாக ரிசார்ட் தரப்பு தெரிவித்தது. இந்த முறையை பின்பற்றி உலகம் முழுவதிலும் இதுபோன்ற நிர்வாண திருமணங்கள் இன்றளவும் அங்கங்கே அரங்கேறி வருகிறது.

    • ரஷிய - உக்ரைன் போர் தொடர்பாக புதினை அலெக்ஸி ஜிமின் கடுமையாக விமர்சித்து வந்தார்.
    • குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்' என்ற அவரது ரஷிய தொலைக்காட்சி நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.

    உக்ரைன் - ரஷியா போர் தொடர்பாக புதினை விமர்சித்த 'செஃப்' அலெக்ஸி ஜிமின் சேர்பியாவில் உள்ள ஓட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    2014 ஆம் ஆண்டு ரஷிய அதிபர் புதின் கிரீமிய தலைவர்களுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அலெக்ஸி ஜிமின் விமர்சித்து ரஷியாவை விட்டு வெளியேறினார்.

    பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட அலெக்ஸி ஜிமின் ரஷியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடிபெயர்ந்தார். அங்கிருந்தே ரஷிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று மக்களிடையே புகழ்பெற்றார்.

    பின்னர் 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் - ரஷிய போர் தொடர்பாக ரஷிய அதிபர் புதினை அலெக்ஸி ஜிமின் தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வந்தார். இதனையடுத்து 'குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்' என்ற அவரது ரஷிய தொலைக்காட்சி நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தான் எழுதிய புத்தகத்தை விளம்பரப்படுத்த செர்பியாவிற்கு அலெக்ஸி ஜிமின் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஓட்டல் அறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

    • சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.
    • சுனிதாவின் உடல் மெலிந்து காணப்பட்டதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 6-ந்தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.

    ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. விண்வெளியில் சிக்கி உள்ள இருவரும் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.

    இதில் சுனிதாவின் உடல் மெலிந்து காணப்பட்டதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனக்கு உடல்நல பாதிப்பு இல்லை என்று சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

    விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் தனது உடல்நலம் குறித்து வீடியோ நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:-

    நான் இங்கு வந்தபோது இருந்த அதே எடையுடன் தான் இருக்கிறேன். தசை மற்றும் எலும்பு அடர்த்தியில் மைக்ரோ கிராவிட்டியின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்காக விண்வெளி வீரர்கள் பின்பற்றும் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருவதன் காரணமாகவே எனது உடலின் தோற்றம் மாறி விட்டது.

    சைக்கிளிங்க், டிரெட் மில்லில் ஓடுதல் மற்றும் பளு தூக்குதல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை வழக்கம்போல் செய்து கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் மேற்கொள்வதால் என உடலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். எனது உடல் மாறி இருந்தாலும் அதே எடையில்தான் இருக்கிறேன் என்றார்.

    • அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார்.
    • துளசிக்கு முக்கிய பதவியை டிரம்ப் வழங்கி உள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். இதில் துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, முன்னாள் எம்.பியான, லெப்டினன்ட் கர்னல் துளசி கப்பார்ட், தேசிய புலனாய்வு இயக்குநராக பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 தசாப்தங்களாக நமது நாட்டிற்காகவும், அனைத்து அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார்.

    அவர் தனது புகழ்பெற்ற வாழ்க்கையை வரையறுத்து உள்ள அச்சமற்ற உணர்வை நமது உளவுத்துறை சமூகத்திற்கு கொண்டு வருவார். நமது அரசியலமைப்பு உரிமைகளை வென்றெடுப்பார் என்பது எனக்குத் தெரியும் என்றார்.

    தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவியவர்களில் துளசி கபார்ட் முக்கிய மானவர். பிரசாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு எதிராக வும், அக்கட்சியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

    டிரம்பின் கொள்கைகளை வாக்காளரிடம் கொண்டு சேர்த்தார். ஹவாய் மாகாணத்தில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட துளசி அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. ஆவார்.


    ஆனால் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அல்ல. இவரது தாய் கரோல் கப்பார்ட் இந்துவாக மதம் மாறினார். இதனால் அவர் தனது 5 குழந்தைகளுக்கும் இந்து பெயர்களை வைத்தார்.

    துளசி கபார்ட் ராணு வத்தில் பணியாற்றி லெப்டி னன்ட் கர்னல் அந்தஸ்து வரை உயர்ந்தார். ஈராக்கில் ராணுவ பணியை மேற்கொண்டார். முதலில் ஜனநாயக கட்சியில் இருந்த துளசி கடந்த 2022-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் டிரம்பின் குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவரது கொள்கைகள் மற்றும் பேச்சுக்கள் டிரம்பை கவர்ந்தது. இதன்மூலம் துளசிக்கு முக்கிய பதவியை டிரம்ப் வழங்கி உள்ளார்.

    • மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
    • நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

    மெக்சிகோவில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.

    ஹூலையன் கவுண்டியில் உள்ள ஜியன் என்ற பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் அதிர்ந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

    நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

    • ராஜபக்சே சகோதரர்களான மஹிந்த, கோத்தபய, சமல் மற்றும் பசில் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
    • 225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த பாராளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் 3 இடங்கள் மட்டுமே இருந்தன. புதிய சட்டங்களை இயற்றுவதற்கு ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இடங்கள் தேவை என்பதால் பாராளுமன்றத்தை கலைத்து, புதிய தேர்தலை நடத்த அனுரா குமர திசநாயகா முடிவு செய்தார். அதன்படி அதிபராக பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்தார். அதனை தொடர்ந்து நவம்பர் 14-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என இலங்கை தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    இந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகள் களம் காண்கின்றன.

    அதே சமயம் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். அந்த வகையில் அதிபர் தேர்தலில் திசநாயாகவிடம் தோல்வியடைந்த ரணில் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 1977-ம் ஆண்டுக்கு பின்னர் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதது இதுவே முதல்முறையாகும்.

    அதேபோல ராஜபக்சே சகோதரர்களான மஹிந்த, கோத்தபய, சமல் மற்றும் பசில் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மேலும் கடந்த ஆட்சியில் இருந்த ஏராளமான மந்திரிகள் மற்றும் பிரதிநிதிகள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர்.

    225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.

    பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றிப் பெற வேண்டும். அதேநேரத்தில், 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் 'சிறப்பு பெரும்பான்மை' கிடைக்கும்.

    சிறப்பு பெரும்பான்மை இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே அதிபர் திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு சிறப்பு பெரும்பான்மை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்நிலையில் இலங்கையில் காலை 7 மணிக்கு பாராளுமன்ற தேர்தல் தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    தேர்தலை பாதுகாப்பாக நடத்த நாடு முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்களிக்க தகுதியுடைய 1 கோடியே 17 லட்சம் வாக்காளர்களுக்காக நாடு முழுவதும் 13 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார்.
    • அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு தற்போதைய அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் 47-வது அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர். டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார்.

    அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்தது. அதிபர் ஜோ பைடன், டிரம்புக்கு விருந்து அளித்து கவுரவித்தார்.

    அப்போது அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும். அது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    அதற்கு பதிலளித்த டிரம்ப் அது எவ்வளவு சீராக முடியுமோ அவ்வளவு சீராக இருக்கும் என்றார்.

    4 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியா - வட கொரியா ராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டுள்ளது.
    • புகைப்படங்களைச் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது

    சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் அதிபராக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் [40 வயது] செயல்பட்டு வருகிறார். ராணுவ கட்டமைப்புக்கு அதிகம் செலவு செய்யும் வட கொரியா கடந்த 2006 ஆம் ஆண்டு தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தி அணுசக்தி நாடுகளின் பட்டியலில் இணைந்தது.

    தென் கொரியா உடனான எல்லை பிரச்சனை, அந்நாட்டுக்கு உதவி செய்யும் அமெரிக்காவை எதிர்ப்பது என செயல்பட்டு வரும் வட கொரியா அவ்வப்போது அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போவதாக மிரட்டலும் விடுத்து வருகிறது. மேலும் சமீப காலமாக ரஷியாவுடன் நெருக்கம் காட்டும்வட கொரியா ராணுவ உதவிகளைப் பரிமாறிக்கொள்ளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டுள்ளது.

    தென் கொரியா தாராளவாதத்தைப் பின்பற்றும் நாடாக உள்ள நிலையில் வட கொரியா கடுமையான சட்டங்களையும், அதிக சமூக கட்டுப்பாட்டையும் மக்கள் மீது கொண்ட நாடாக விளங்குகிறது. அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வாழ்வாதாரம், சமூக நிகழ்வுகள் என என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்குத் தெரியாத அளவுக்கு அதிக தணிக்கை விதிமுறைகளும் வட கொரியாவில் உள்ளது.

    மக்கள் சுதந்திரமாக இல்லை என சர்வதேச சமூகத்தில் பொதுவான கண்ணோட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் வட கொரியாவில் இதுவரை வெளியுலகுக்குத் தெரியாத கட்டமைப்புகள் மற்றும் இடங்களின் புகைப்படங்களைச் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்களில் தென் கொரியாவிலிருந்த காணும் தூரத்தில் உள்ள Gijungdong கிராமம், Liaoning மாகாணத்தில் Dandong பகுதியிலிருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் உள்ள Sinuiju பகுதி உள்ளிட்ட பல பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 

     

     

     

     

     

     

    • இஸ்ரேல் முதலில் ஈரான் அணு நிலையங்கள் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பிரசுரத்தில் கூறினார்.
    • அயத்துல்லா கமேனிக்கு இஸ்ரேலை விட பயம் தரும் விஷயம் ஒன்று இருக்கிறது.

    பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் மத்திய கிழக்கில் முக்கிய நாடாக விளங்கும் ஈரானையும் குறிவைத்து வருகிறது. காசா போருக்கு எதிராக இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பைட்டர் ஜெட்கள் மூலம் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது எந்த நேரமும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அபாய சூழல் நிலவி வருகிறது. ஆனால் இஸ்ரேலுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு கடிவாளம் போட்ட நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தனது பிரசாரத்தின்போது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் ஒரு கருத்தை தெரிவித்தார்.

    அதாவது, இஸ்ரேல் முதலில் ஈரான் அணு நிலையங்கள் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஈரான் மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர், [ஈரான் மதத்தலைவர்] அயத்துல்லா கமேனிக்கு இஸ்ரேலை விட பயம் தரும் விஷயம் ஒன்று இருக்கிறது.

     

    அது நீங்கள் தான்.. ஈரான் மக்கள். அதனால்தான் அவர்கள் உங்கள் நம்பிக்கைகளை நசுக்குவதற்கும் உங்கள் கனவுகளைத் தடுக்கவும் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள்.

    நம்பிக்கையை இழக்காதீர்கள், சுதந்திர உலகில் இஸ்ரேலும் மற்றவர்களும் உங்களுடன் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார். மேலும் இஸ்ரேலை தாக்க நினைத்தால் ஈரானின் மொத்த பொருளாதாரமும் முடங்கும் என்றும் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையே  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் கடந்த சில நாள்களில்மூன்று பேசியிருக்கிறேன். இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டணியை இன்னும் வலிமையாக இணைப்பது குறித்துப் பேசினோம்" என்று நேதன்யாகு பேசியதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் டிரம்ப்பும் நானும் இணைந்து ஈரான் விவகாரத்தை கவனித்து வருகிறோம் என்றும் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    • 225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 இடங்களுக்கான உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள்.
    • பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை.

    கொழும்பு:

    இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற மறுநாளே இலங்கை பாராளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்து பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14-ந்தேதி நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

    அனுர குமார திசா நாயக்காவின் அனுர குமார திசநாயக்க தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 4 எம்.பிக்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெரும்பான்மை பலம் வேண்டும் என்பதால் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.

    அதன்படி இலங்கையில் நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு உள்ளன. சுமார் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

    தேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்க, சஜித பிரேமதாச, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் கட்சிகள் களத்தில் உள்ளன. அதேபோல தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

    225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 இடங்களுக்கான உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.

    பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. அதே வேளையில் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் சிறப்பு மெஜாரிட்டி கிடைக்கும். சிறப்பு மெஜாரிட்டி கிடைத்தால் தான் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே அதிபர் அனுர குமரா திசநாயக்கவின் கட்சிக்கு சிறப்பு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    • எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர் அடிப்படையில் தொழிலதிபர்களாக உள்ளனர்.
    • விவேக் ராமசாமி, டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தனது நிர்வாகத்துக்கு ஏற்ப நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார்.

    அந்த வகையில் டொனால்டு டிரம்ப் வெற்றிக்கு உதவிய டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் மற்றும் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகியோர் அந்த நாட்டின் செயல்திறன் துறையை (Department of Government Efficiency or DOGE) வழி நடத்துவார்கள் என டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

    அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செயல்திறன் துறை என்பது பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர் அடிப்படையில் தொழிலதிபர்களாக உள்ளனர். எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் செயல் அதிகாரியாக உள்ளார். மேலும் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார். அதேபோல் விவேக் ராமசாமியும் தொழிலதிபராக இருந்து குடியரசு கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

    எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற கடுமையாக உழைத்தனர். எலான் மஸ்க் நிதியுதவி செய்தார். விவேக் ராமசாமி, டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தார். இந்நிலையில் தான் அவர்கள் 2 பேருக்கும் டொனால்ட் டிரம்ப் முக்கிய பொறுப்பை வழங்கி உள்ளார்.

    "இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், கூட்டாட்சி ஏஜென்சிகளை மறுசீரமைப்பதற்கும் வழி வகுக்கும் 'Save America' இயக்கத்திற்கு அவசியம்" என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ×