என் மலர்tooltip icon

    உலகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பியான ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில் கிழித்த சம்பவம் உலகத்தின் கவனத்தை பெற்றுள்ளது..

    ஹனா-ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் எனும் 22 வயதான இளம் எம்பி, தனது கன்னி உரையின் போதே மாவோரி மொழியில் பேசியது நியூசிலாந்து மட்டுமல்லாது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நியூசிலாந்து அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக நியூசிலாந்து ஆளும் கூட்டணியில் ஏசிடி கட்சி முன்மொழிவை கொண்டு வந்து வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்தது.

    அதன்படி, நேற்று நியூசிலாந்து பாராளுமன்றத்தில் வைதாங்கி உடன்படிக்கையின் சில மாற்றங்களை கொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, நியூசிலாந்து நாட்டின் பூர்வ குடிகளான மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் எம்பி, ஹக்கா எனப்படும் மாவோரிகளின் நடனம் ஆடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




    • யாழ்ப்பாணம் ஊர்க்கா வந்துறை தொகுதியில் டக்ளஸ் தேவனாந்தா கட்சி வெற்றி பெற்றது.
    • யாழ்ப்பாணம் மாவட்டம் கிளி நொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி வாகை சூடியது.

    இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது.

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களில் அதிபர் அனுரா குமார திச நாயகா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ( என்.பி.பி,) கட்சி முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடந்த ஓட்டு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை வகித்து வந்தது.

    எதிர்கட்சிகளை விட அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தது. நேரம் ஆக ஆக அக்கட்சி அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி முகத்தில் இருந்தது. ஓட்டுகள் பாதி எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சி 63 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தது.

    இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 11 சதவீத வாக்குகளும், முன்னாள் அதிபர் ரணில் விக்கிரம சிங்கே ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக முன்னணி 5 சதவீத வாக்குகளும் பெற்று மிகவும் பின் தங்கி இருந்தது.

    முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா வெறும் 2.98 சதவீத வாக்குகள் மட்டுமே வாங்கி பரிதாப நிலையில் இருந்தது.

    வாக்கு எண்ணிக்கை முடிவில் 123 இடங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது.

    பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 113 இடங்களும் சிறப்பு பெரும்பான்மைக்கு 150 இடங்களும் தேவை. இந்த மேஜிக் எண்ணை அக்கட்சி எளிதில் எட்டி பிடித்தது. சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இத்தேர்தலில் முன்னாள் மந்திரிகள் பலர் தோல்வி அடைந்தனர்.

    ஈழத்தமிழர்களின் தலைநகராக போற்றப்படும் திரிகோணமலை, மூதூர், சேருவில் தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த 3 தொகுதிகளிலும் இலங்கை தமிழரசு கட்சி தோல்வியை சந்தித்தது.

    திரிகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 2 இடங்களிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர், மானிப்பாய், கோபாய் தொகுதிகளிலும் ஆளும் கட்சியே ஆதிக்கம் செலுத்தியது.

    யாழ்ப்பாணம் ஊர்க்கா வந்துறை தொகுதியில் டக்ளஸ் தேவனாந்தா கட்சி வெற்றி பெற்றது.

    யாழ்ப்பாணம் மாவட்டம் கிளி நொச்சியில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி வாகை சூடியது.

    ராஜபக்சே குடும்பத்தினரின் கோட்டையாக கருதப்படும் அம்பாந்தோட்டை தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி கடுமையான தோல்வியை தழுவியது.

    இந்த தொகுதியிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. இக்கட்கி கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெறும் 3 உறுப்பினர்களை மட்டுமே பெற்றது.

    ஆனால் இந்த தேர்தலில் இலங்கை பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளதால் அக்கட்சி மிக எளிதாக பாராளுமன்றத்தை கைப்பற்றி உள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயகா வெற்றி பெற்று புதிய அதிபராக பதவி ஏற்றார்.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதிலும் தேசிய மக்கள் சக்தி விசுவரூப வெற்றி பெற்று இருக்கிறது.

    இலங்கை பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற முடியும். தற்போது தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதால் சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது.

    தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றதை அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • புகார்கள் குறித்து 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தது.
    • இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

    சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க் ஜுக்கர்பெர்க் நிர்வகித்து வருகிறார். இதனிடையே மெட்டா நிறுவனம், மார்க்கெட்பிளேஸ் எனும் விளம்பர சேவையில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த சேவையை ஃபேஸ்புக்கில் புகுத்திய மெட்டா, பயனர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மார்க்கெட்பிளேஸ்ஸை கட்டாயம் அணுகும் வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனால், தவறான நடைமுறைகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக பல நாடுகள் குற்றம் சாட்டி வந்தன.

    இதனை தொடர்ந்த இந்த புகார்கள் குறித்து 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் நீண்ட நாட்களாக விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரணையின் இறுதியில், மெட்டா நிறுவனத்திற்கு சுமார் 80 கோடி யூரோ அதாவது இந்திய மதிப்பில் ரூ.7.100 கோடி அபராதம் விதித்துள்ளது.

    ஆனால், இந்த குற்றச்சாட்டை மெட்டா நிறுவனம் மறுத்துள்ளது. 'இந்த புகாரின் படி பார்க்கையில் எந்த ஒரு வாடிக்கையாளர்களும் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை' என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

    • தற்போது துபாயில் சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கல்வித்துறை வளர்ச்சிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    துபாய்:

    இந்தியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான நட்புறவு நிலவி இருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அரசுமுறை பயணமாக நேற்று அமீரகம் வருகை புரிந்தார். அவரை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் வரவேற்றார்.

    இந்த வருகையின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    சிம்பயோசிஸ் சர்வதேச (டீம்ட் யுனிவர்சிட்டி) என்ற தனியார், நிகர்நிலை பல்கலைக்கழகம் இந்தியாவின் புனே நகரில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் பெங்களூரு, ஐதராபாத், நாசிக், நொய்டா, நாக்பூர் போன்ற பல்வேறு நகர வளாகங்களில் அமைந்துள்ளது.

    தற்போது துபாயில் சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பல்கலைக்கழகத்தை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மாற்று எரிசக்தி, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகம் இருந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அமீரகத்துக்கு வந்ததையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சாதனை முயற்சியாக கூட்டு பொருளாதார ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த புதிய பல்கலைக்கழகம் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் இந்தியா தயாராகி வருகிறது.

    மேலும் இருநாடுகளுக்கு இடையே மின்சார வாகனம், தூய்மை மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள், மாற்று எரிசக்தி, விண்வெளி, சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மேம்பட உதவியாக இருக்கும். கல்வித்துறை வளர்ச்சிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விழாவில் அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், பல்கலைக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து துபாய் அல் ஜடாப் பகுதியில் அமைந்துள்ள முகம்மது பின் ராஷித் நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய மந்திரி பங்கேற்று 'ஒய் பாரத் மேட்டர்ஸ்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

    இதையடுத்து துபாய் துறைமுக பகுதியில் அமைய இருக்கும் 'பாரத் மார்ட்' என்ற வணிக வளாகத்தின் திட்டப்பணிகளை துறைமுக அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆய்வு செய்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் உணவு சாப்பிட்டப்படியே நடந்து முடிந்த தேர்தல் குறித்து நீண்டநாள் நண்பர்கள்போல சகஜமாக பேசுகிறார்கள்.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி ஒருநாள் கூட ஆகாதநிலையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.

    அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அந்த நாட்டின் ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்கு சென்று டிரம்ப் சந்தித்துள்ளார்.

    இந்தநிலையில் அரசியல் எதிரிகளாக கருதப்படும் இவர்கள் நண்பர்களாக இருந்து விடுமுறையை இணைந்து கொண்டாடுவது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவில், வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் உணவு சாப்பிட்டப்படியே நடந்து முடிந்த தேர்தல் குறித்து நீண்டநாள் நண்பர்கள்போல சகஜமாக பேசுகிறார்கள்.

    பின்னர் நாம் ஒருவேளை இந்த இடத்தில் இல்லாமல் இருந்தால் என யோசிக்கிறார்கள். அப்போது அவர்கள் இருவரும் விடுமுறையை கொண்டாடி ஐஸ்கிரீம் சுவைப்பது, குதிரை சவாரி செய்வது, கோல்ப் விளையாடுவது, இருசக்கர வாகனம் ஓட்டுவது, ஆற்றில் மீன்பிடிப்பது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது என ஈடுபடுகிறார்கள்.

    ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி ஒருநாள் கூட ஆகாதநிலையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.



    • மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
    • இன்று மொத்த முடிவுகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றிப்பெற்று அதிபரானார்.

    அந்த சமயத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். எனவே அதிபராக பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்த திசநாயகா, இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரியாவை நியமித்தார்.

    இதனையடுத்து, இலங்கை பாராளுமன்றத்துக்கு நவம்பர் 14-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இத்தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது. ஆளும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி, முன்னாள் அதிபர் ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை பொதுஜன பெரமுனா, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் களத்தில் உள்ளன. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் இருக்கின்றன. இதில் 196 இடங்களுக்கான உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியல் மூலமாக நிரப்பப்படும்.

    பெரும்பான்மைக்கு 113 இடங்களும், சிறப்பு பெரும்பான்மைக்கு 150 இடங்களும் தேவை. சிறப்பு பெரும்பான்மை இருந்தால் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என்பதால் அதிபர் திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சிறப்பு பெரும்பான்மையை பெற முனைப்புடன் உள்ளது.

    இந்த நிலையில் இலங்கையின் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி தொடங்கியது. வாக்களிக்க தகுதியுடைய 1 கோடியே 70 லட்சம் பேருக்காக நாடு முழுவதும் 13 ஆயிரத்து 314 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளில் சுமார் 90,000 போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மக்கள் அதிகாலை முதலே வாக்குச் சவாடிகளில் நீண்ட வரிசையில் காத்திருத்து ஆர்வமுடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். இதனால் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    அதேபோல் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இன்றி சுமுகமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிபர் திசநாயகா, இடைக்கால பிரதமர் ஹரிணி அமரசூரியா ஆகிய இருவரும் தலைநகர் கொழும்பில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை செலுத்தினர்.

    மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கியுள்ளன. இதில், பெரும்பான்மை இடங்களை தேசிய மக்கள் சக்தி பிடிக்கும் என்றே தெரிகிறது. தபால் வாக்குகளில் அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது தேசிய மக்கள் சக்தி. மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் தற்போது வரை 16 தேர்தல் மாவட்டங்களில் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கெல்லாம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது.

    இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 11 சதவீத வாக்குகள் மற்றும் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு பெற்ற தேசிய ஜனநாயக முன்னணி 5 சதவீத வாக்குகளை மட்டுமே தற்போதைய நிலையில் பெற்றுள்ளது.

    இன்று மொத்த முடிவுகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 70,000 ஆஸ்டிராஜெனிகா டோஸ்களை டொமினிகாவுக்கு இந்தியா வழங்கியது.
    • அவற்றை பெற்று சக கரீபியன் நாடுகளுக்கு டொமினிகா ஆதரவுக் கரம் நீட்டியது.

    ரோசி:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை வழங்கி உதவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர்.

    கொரோனா தடுப்புக்கான 70 ஆயிரம் ஆஸ்டிராஜெனிகா டோஸ்களை டொமினிகாவுக்கு இந்தியா வழங்கியது. இதனால் அவற்றை பெற்று சக கரீபியன் நாடுகளுக்கு டொமினிகா ஆதரவுக் கரம் நீட்டியது.

    கொரோனாவை கட்டுப்படுத்த, பரவலைத் தடுக்கும் வகையிலான மருந்து பொருட்களை டன் கணக்கில் அந்நாடுகளுக்கு அனுப்பி இந்தியா உதவிக்கரம் நீட்டியது.

    இதற்காகவும், டொமினிகா மற்றும் இந்தியா இடையிலான நட்புறவை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்க டொமினிகா அரசு முடிவு செய்துள்ளது.

    இந்நிலையில், டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கயானா நாட்டின் ஜார்ஜ் டவுன் நகரில் வரும் 19 முதல் 21 வரையிலான 3 நாட்களில் இந்தியா-கேரிகோம் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடிக்கு டொமினிகா காமன்வெல்த் நாட்டின் ஜனாதிபதி சில்வானி புர்தன் விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறார்.

    டொமினிகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு ஆதரவளித்த பிரதமர் மோடிக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருது அமையும் என அந்நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் தெரிவித்துள்ளார்.

    • உண்மையில் தனக்குத்தான் பிறந்தாளா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.
    • நாட்டின் தலைநகரான ஹனோய் -க்கு தாய் குடிபெயர்ந்துள்ளார்

    சினிமாக்களில் வருவதுபோல் வியட்நாமில் நடந்த ஒரு உண்மை சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வியட்நாமை சேர்ந்த தந்தை ஒருவருக்கு பள்ளிக்கு செல்லும் வயதில் மகள் இருந்துள்ளார். தனது மகள் வளர வளர அவள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் போலும் இல்லாமல் மிகவும் அழகாக இருந்ததால் அவள் உண்மையில் தனக்குத்தான் பிறந்தாளா என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.

    எனவே மகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்துள்ளார். இதில் அவள் தனது மகள் இல்லை என்று அவருக்கு தெரியவந்தது. இதற்குப் பிறகு தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிறுமியின் தந்தை தனது மனைவியிடம் குழந்தைப்பேறு இல்லாதவள் என்று கூறி தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.

    ஆனால் தான் குழந்தை பெற்றதாக சிறுமியின் தாய் உறுதியாக இருந்துள்ளார். சண்டை முற்றிய நிலையில் தனது கணவனை பிரிந்து மகளை அழைத்துக்கொண்டுநாட்டின் தலைநகரான ஹனோய் -க்கு தாய் குடிபெயர்ந்துள்ளார். அங்கு மகளை புதிய பள்ளியில் சேர்த்தார்.

    இந்நிலையில் பள்ளியில் மகளின் பிறந்தநாள் விழாவில் அதே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் அவளது தோழியான லான் என்ற சிறுமியை தாய் பார்த்துள்ளார். லான் பார்ப்பதற்கு தன்னைப் போலவே இருப்பதை இந்த தாய் உணர்ந்துள்ளார். எனவே மேற்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் அனைத்திற்கும் விடை கிடைத்துள்ளது.

     

    டிஎன்ஏ பரிசோதனையில் லான் - தான் இவரின் மகள் என்று தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு சிறுமிகளுக்கும் ஒரே மருத்துவமனையில் பிரசவம் ஆகியுள்ளது . மருத்துவமனையில் வைத்து இரண்டு பெண் குழந்தைகளும் இடம் மாறி இருக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

    • நாங்கள் தான் இந்த நாட்டின் உரிமையாளர் என பேசியுள்ளார்.
    • வெள்ளையர்கள் மீண்டும் ஐரோப்பா, இங்கிலாந்துக்கு செல்ல வேண்டும்.

    கனடாவில் வாழும் மக்களை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவுக்கு திருப்பி செல்லுங்கள் என்று காலிஸ்தானியர்கள் கூறிய சம்பவம் கனடா நாட்டில் அரங்கேறியது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் வீடியோவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், "இது கனடா, எங்களின் சொந்த நாடு. நீங்கள் (கனடியரகள்) திரும்பி செல்லுங்கள்."

    "வெள்ளையர்கள் மீண்டும் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டும். இது நம் நாடு சைமன் திரும்பி போ. நாங்கள் தான் இந்த நாட்டின் உரிமையாளர்," என பேசியுள்ளார். இவர் பேசும் போதே அங்கிருந்த சிலர் கத்தினர்.

    கனடாவில் காலிஸ்தானி இயக்கத்தின் மையமான பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் நடந்த காலிஸ்தானி நிகழ்வில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முதன்முறையாக, கனடாவில் காலிஸ்தானிக்கு ஆதரவான கூறுகள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

    மேலும், இவர்கள் "ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை" என்று வலியுறுத்தி இருந்தார். ஒட்டாவாவில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது அவர் கருத்து தெரிவித்தார்.

    இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கோரிக்கை அடங்கிய வெளியாகியுள்ளது. காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட பின்னணியில், இந்தியா மற்றும் கனடா உயர் அதிகாரிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மோசமடைந்துள்ளன.


    • இலங்கை பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.
    • பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

    2022 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முதன்முறையாக இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரா குமர திசநாயகா வெற்றி பெற்று அதிபர் ஆனார்.

    அப்போதைய பாராளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் மூன்று இடங்கள் மட்டுமே இருந்தன. பெரும்பான்மை இல்லாததால், பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தான் இலங்கை பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது.

     


    225 இடங்கள் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு 196 உறுப்பினர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் தேசிய அளவில் பெற்ற வாக்கு சதவீத அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

    இந்த தேர்தலில், அதிபர் அனுரா குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மஹிந்த ராஜபக்சே ஆகியோரின் கட்சிகள் களத்தில் உள்ளன. அதே போல் தமிழ் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

    வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டவுடன் உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்படும். அந்த வகையில் இன்று நள்ளிரவு தொடங்கி, முதற்கட்ட முன்னிலை நிலவரம் தெரியவரும். 

    • ஓடுதளத்தில் விமானம் ஒன்று மேலே பறக்க தயாராகிக் கொண்டிருந்தது
    • மக்கள் வெளியற இஸ்ரேல் எச்சரித்தது.

    பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் 27-ந்தேதி ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தலைநகர் பெய்ரூட்- இல் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார்.

    இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட் சர்வதேச விமான நிலையம் அருகே இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. ஓடுதளத்தில் விமானம் ஒன்று மேலே பறக்க தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வான் வரை கரும்புகை எழுந்து சுற்றிலும் பரவியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஹிஸ்புல்லா அமைப்பு வலுவாக உள்ள தெற்கு பெய்ரூட்டில் தாஹியே பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே அப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.  

    லெபனான் சுகாதார அமைச்சக அறிக்கைபடி இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை லெபனானில்  3,189  பேர் கொல்லப்பட்டுள்ளனர். 14,078 பேர் காயமடைந்துள்ளனர்.

    • ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

    உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன.

    சமீபத்தில் தென் இந்தியாவில் குழைந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் குழந்தை பிறப்பை அதிகரிக்க கூறியுள்ள உபாயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

    2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டு பிறப்பு விகிதம் 5.1 சதவீதம் குறைந்து 758,631ஆகப் பதிவானது. இந்த ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 3,50,074 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே கால் இடைவெளியுடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீதம் குறைவாகும்.

    இந்நிலையில் ஜப்பானின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் நவோகி ஹைகுடா கடந்த நவம்பர் 8 ஆம் தேதி யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் , 25 வயதிற்குப் பிறகு பெண்கள் திருமணம் செய்வதைத் தடைசெய்யவும், 30 வயதாகிவிட்டால் கருப்பை நீக்கத்தை கட்டாயப்படுத்தவும் ஹைகுடா பரித்துரைத்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து தனது கருத்துக்காக நவோகி ஹைகுடா மன்னிப்பு கேட்டுள்ளார். தான் பேசிய கருத்துகள் கடுமையானவைதான் என்றும் பெண்களுக்கு எதிரான இத்தகைய கடுமையான நடவடிக்கைகளுக்குத் தான் வாதிடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் கூறிய கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார்.

    ×