என் மலர்
நீங்கள் தேடியது "டொமினிக் குடியரசு"
- கேளிக்கை விடுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
- கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.
சாண்டோ டொமிங்கோ:
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது.
இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள்.
அந்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது திடீரென கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.
சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், படுகாயம் அடைந்த 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலர் இறந்ததால் தற்போது பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இறந்தவர்களில் பலர் சுற்றுலா பயணிகள் என்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே உடைமைகளை வைத்து அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
- கேளிக்கை விடுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
- கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.
சாண்டோ டொமிங்கோ:
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது.
இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள்.
நேற்று முன்தினம் அந்த விடுதியில் இசைக் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது திடீரென கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்திருந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.
சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்தது.
இந்நிலையில் கட்டிடத்தில் சிக்கி இறந்து போனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பலி எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. படுகாயம் அடைந்த 160 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
- இந்த விபத்தில் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
- இந்த விபத்தில் சில புகழ்பெற்ற நபர்களும் உயிரிழந்துள்ளதாகக் சொல்லப்படுகிறது.
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் உள்ள புகழ்பெற்ற இரவுநேர கேளிக்கை விடுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென்று கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.
மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் பலர் பலியாகி இருப்பது தெரியவந்தது.
இந்த விபத்தில் 79 பேர் உயிரிழந்தனர். 160-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இடிபாடு களுக்கு அடியில் பலர் உயிரோடு சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குப் பிறகும், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
அவசரகால செயல்பாட்டு மையத்தின் இயக்கு னர் ஜுவான் மானுவல் மெண்டஸ் கூறும்போது, கேளிக்கை விடுதியின் மூன்று பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து மீட்புப்பணி நடந்து வருகிறது. நாங்கள் தொடர்ந்து இடிபாடுகளை அகற்றி மக்களைத் தேடுகிறோம் என்றார்.
இந்த நிலையில் இந்த விபத்தில் முன்னாள் பேஸ்பால் அணி வீரர் ஆக்டேவியோ டோட்டல் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
- தென் அமெரிக்க நாடான டொமினிகன் குடியரசு மற்றும் அதன் அண்டை நாடான ஹைதி எல்லையில் மசாக்ரே ஆறு பாய்கிறது.
- ஹைதியுடனான எல்லைகளை காலவரையின்றி மூடுவதாக டொமினிகன் குடியரசு நாட்டின் அதிபர் லூயிஸ் அபினாடர் அறிவித்தார்.
சான்டோ டொமிங்கோ:
தென் அமெரிக்க நாடான டொமினிகன் குடியரசு மற்றும் அதன் அண்டை நாடான ஹைதி எல்லையில் மசாக்ரே ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் இரு நாடுகள் இடையே நீண்ட காலமாக பிரச்சினை உள்ளது. குறிப்பாக அங்குள்ள ஹைதியன் பகுதியில் சிலர் கால்வாயை தாண்டியதால் இந்த பிரச்சினை தீவிரமெடுத்தது. இது தொடர்பாக இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில் ஹைதியுடனான எல்லைகளை காலவரையின்றி மூடுவதாக டொமினிகன் குடியரசு நாட்டின் அதிபர் லூயிஸ் அபினாடர் அறிவித்தார். அதன்படி நேற்று அதன் வான், கடல் மற்றும் தரை என அனைத்து எல்லைகளும் மூடப்பட்டன. இது அந்த இரு நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
- 70,000 ஆஸ்டிராஜெனிகா டோஸ்களை டொமினிகாவுக்கு இந்தியா வழங்கியது.
- அவற்றை பெற்று சக கரீபியன் நாடுகளுக்கு டொமினிகா ஆதரவுக் கரம் நீட்டியது.
ரோசி:
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை வழங்கி உதவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர்.
கொரோனா தடுப்புக்கான 70 ஆயிரம் ஆஸ்டிராஜெனிகா டோஸ்களை டொமினிகாவுக்கு இந்தியா வழங்கியது. இதனால் அவற்றை பெற்று சக கரீபியன் நாடுகளுக்கு டொமினிகா ஆதரவுக் கரம் நீட்டியது.
கொரோனாவை கட்டுப்படுத்த, பரவலைத் தடுக்கும் வகையிலான மருந்து பொருட்களை டன் கணக்கில் அந்நாடுகளுக்கு அனுப்பி இந்தியா உதவிக்கரம் நீட்டியது.
இதற்காகவும், டொமினிகா மற்றும் இந்தியா இடையிலான நட்புறவை பலப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்க டொமினிகா அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கயானா நாட்டின் ஜார்ஜ் டவுன் நகரில் வரும் 19 முதல் 21 வரையிலான 3 நாட்களில் இந்தியா-கேரிகோம் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடிக்கு டொமினிகா காமன்வெல்த் நாட்டின் ஜனாதிபதி சில்வானி புர்தன் விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறார்.
டொமினிகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு ஆதரவளித்த பிரதமர் மோடிக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் இந்த விருது அமையும் என அந்நாட்டின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் தெரிவித்துள்ளார்.
- கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்தியா-காரிகாம் உச்சி மாநாடு நடைபெற்றது.
- அப்போது டொமினிகாவின் உயர்ந்த தேசிய விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது.
ஜார்ஜ் டவுன்:
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின்போது கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியா, டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது. அத்துடன், டொமினிகாவின் சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் இந்தியா உதவிகளை அளித்தது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக டொமினிகா அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கயானாவின் ஜார்ஜ் டவுனில் இந்தியா-காரிகாம் உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது டொமினிகா அதிபர் சில்வானி பர்ட்டன் பிரதமர் நரேந்திர மோடிக்கு, டொமினிகா விருதை வழங்கி கவுரவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி டொமினிகாவின் உண்மையான நண்பர். கோவிட் தொற்றின்போது சரியான நேரத்தில் டொமினிகாவுக்கு உதவினார். அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்குகிறோம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என விரும்புகிறோம் என டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் தெரிவித்துள்ளார்.






