என் மலர்tooltip icon

    உலகம்

    • அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.

    பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாடகர் சித்து மூஸ்வாலா கொலை மற்றும் இந்த ஆண்டு சல்மான் கான் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு உள்பட பல வழக்குகள் தொடர்பாக அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர கடந்த மாதம் மகாராஷிடிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொல்லப்பட்ட வழக்கில் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார். கைது செய்யப்பட்டதாக கூறப்படும் அன்மோல் பிஷ்னோய் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக இம்மாத தொடக்கத்தில், மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தும் பணியைத் தொடங்கியது. அவரை கைது செய்ய மகாராஷ்டிரா சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.

    உலகளாவிய சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. முன்னதாக அன்மோல் பிஷ்னோய் கனடாவில் இருப்பதாக நம்பப்பட்டது.

    இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் அன்மோல் பிஷ்னோயை மிகவும் தேடப்படும் பட்டியலில் சேர்த்தது. அவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது.

    • வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் காமேனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    • 60 உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ரகசிய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

    ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமிய குடியரசாக ஈரான் உருவெடுத்தது. அதன் முதல் உயர் [தேசிய-மத] தலைவராக (Supreme Leader) ருஹோல்லா கோமேனி பதவி வகித்தார்.1989 ஆம் ஆண்டு அவரது மறைவுக்குப் பின் தேசிய தலைவரான அயத்துல்லா அலி காமேனி [85 வயது] இன்று வரை அந்த பதவியில் இருக்கிறார்.

     

    ஈரானின் உயர் தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விடவும் அதிகாரமிக்கதும் வாழ்நாள் முழுவதும் வகிக்கும் பதவியும் ஆகும். இந்நிலையில் தற்போது இஸ்ரேலுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் அடுத்த ஈரான் தேசிய தலைவராகத் தனது இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனியை அயத்துல்லா காமேனி தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் காமேனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி அயத்துல்லா காமேனியின் அவசர அழைப்பின்படி ஈரான் நிபுணர்கள் சபை [Assembly of Experts] -இல் அங்கம் வகிக்கும் 60 உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ரகசிய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

    இந்த வாக்கெடுப்பில் ருஹோல்லா கோமேனியை அடுத்த தலைவராக ஏற்கும் முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜனநாயக முறையில் இல்லாமல் அடுத்த தலைவர் தேர்வு நடப்பது வெளியே தெரிந்தால் எதிர்க்கட்சி மற்றும் மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் போராட்டம் வெடிக்கும் என்று அஞ்சுவதால் இந்த தலைவர் தேர்வு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அலி  காமேனி பதவி விலகி மொஜிதாபாவிடம் அதிகாரம் கைமாறும் என்று கூறப்படுகிறது.  

     

    கடந்த இரண்டு வருடங்களாக மொஜிதாபா காமேனிக்கு இந்த தலைமை பொறுப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது ஈரான் அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் மொஜிதாபா ஏற்கனவே செயல்பட்டு வருகிறார்.

    ஈரானில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு போராட்டங்களை ஒடுக்கியவர் மொஜ்தபா. எனவே  அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு எதிராக பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    • இளைஞர் கூகுளின் ஜெமினி ஏ.ஐ. சாட்பாட்டிடம் கேள்வி எழுப்பினார்.
    • தயவு செய்து செத்து விடு என திட்டி உள்ளது.

    ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருகிறது.

    அமெரிக்காவை சேர்ந்த விதய் ரெட்டி என்ற 29 வயதான பட்டதாரி இளைஞர், முதியோர் பராமரிப்பு குறித்து கூகுளின் ஜெமினி ஏ.ஐ. சாட்பாட்டிடம் கேள்வி எழுப்பினார்.

    வகுப்பறையில் ஆசிரியரிடம் கேள்வி கேட்பது போன்று அந்த வாலிபர் மற்றும் சாட்பாட் இடையேயான உரையாடல் நீண்டு கொண்டே சென்றது.


    அப்போது இயல்பாக பதில் அளித்த சாட்பாட், திடீரென அந்த இளைஞரை திட்டி உள்ளது. இது அந்த சாட்டின் டிரான்ஸ்கிரிப்சனில் தெரிய வந்துள்ளது.

    அதில், 'அற்ப மானிடனே... உன்னைத்தான்; நீ முக்கியம் இல்லை, நீ தேவையில்லை, நீ நேரத்தை வீணடிக்கிறாய், நீ பூமிக்கு பாரமாக இருக்கிறாய், தயவு செய்து செத்து விடு' என திட்டி உள்ளது.

    இந்த உரையாடலின் பிரதி தற்போது வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற ஆலோசனை தனியாக உள்ள அல்லது உடல்நிலை சரியில்லாத நபருக்கு கிடைத்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். அதை நினைத்தால் எனக்கு கவலை தருகிறது என விதய் ரெட்டியின் சகோதரி கூறியுள்ளார்.

    • செயற்கை கோள் சுமார் 4,700 கிலோ எடை கொண்டது.
    • இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இடையேயான முதல் வணிக ஒத்துழைப்பு.

    வாஷிங்டன்:

    உலக பணக்காரரான எலான்மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமமும் (இஸ்ரோ) இணைந்து விண்வெளிக்கு இந்திய வீரரை அனுப்பும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு (2025) செயல்படுத்தப்படலாம் என தெரிகிறது.

    இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம் இந்தியாவின் ஜி.சாட் தகவல் தொழில் நுட்ப செயற்கைகோளை விண்ணில் செலுத்த இருக்கிறது.

    அமெரிக்காவின் புளோரிடா கேப் சுனாவரலியில் இருந்து பால்கன் 9 ராக்கெட்டை பயன்படுத்தி இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.

    ஜி சாட் என் 2 என குறிப்பிடப்பட்ட இந்த செயற்கை கோள் சுமார் 4,700 கிலோ எடை கொண்டது. இந்தியாவின் தகவல் தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த செயற்கை கோள் செயல்பாட்டுக்கு வந்ததும் நாடு முழுவதும் தனது சேவைகளை வழங்கும்.

    தொலைதூர பகுதிகளுக்கான இணையசேவை இணைப்பு மற்றும் விமானத்தில் உள்ள இணைய சேவை உள்ளிட்ட நாடு முழுவதும் முக்கிய சேவைகளை இந்த செயற்கைகோள் வழங்கும்.

    இது இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இடையேயான முதல் வணிக ஒத்துழைப்பு ஆகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 225 இடங்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது.
    • 159 இடங்களைக் தேசிய மக்கள் சக்தி கூட்டணி கைப்பற்றியது

    இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றிபெற்று அதிபரானார்.

    அந்த சமயத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு 3 எம்.பி.க்கள் மட்டுமே இருந்ததால் அவர் பாராளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். இடைக்கால பிரதமராக பெண் எம்.பி. ஹரிணி அமரசூரியாவை நியமித்தார்.

    இந்த நிலையில் 225 இடங்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் 159 இடங்களைக் கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 3-ல் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் மந்திரி சபையை அதிபர் திசநாயகா நாளை (திங்கட்கிழமை) நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்தது.

    இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நடந்து வருகிறது. அதன்படி இலங்கையின் புதிய பிரதமராக தற்போதைய தற்காலிக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதிய பிரதமராக  பதவியேற்றுள்ளார். அதிபர் அனுரா குமார திசநாயகா முன்னிலையில் பிரதமர் மற்றும் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

    கடல்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் பதவியேற்றார். அதிபர் முன்னிலையில் அவருக்கு தமிழில் பதவிப்பிரமாணம் நடந்தது. இலங்கை வெளிவிவகார துறை அமைச்சராக விஜித் ஹேரத் பதவியேற்றார். மகளிர் மற்றும் சிறுவர் நலத்துறை அமைச்சராக சரோஜா சாவித்திரி பால்ராஜ் பதவியேற்றார். இலங்கையின் 10-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்குகிறது.

    • விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
    • சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்து இருந்தது.

    நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்சின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்றும், மன அழுத்தத்தில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இந்த தகவலை மறுத்த நாசா, சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அனைவரும் நலமுடன் உள்ளனர் என தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் விண்வெளியில் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் புதிய படத்தை நாசா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

    அதில், சுனிதா ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் குழு விண்கலத்தில் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து பூமியை எட்டிப்பார்க்கிறார். இதன்மூலம் சுனிதா வில்லியம்ஸ் நலமாக உள்ளார் என்பது தெரிகிறது.

    முன்னதாக, சுனிதா தனது எடை குறைப்பு குறித்த வதந்திகளை மறுத்து, நான் இங்கு வந்தபோது என்ன எடை இருந்தேனோ அதே எடையில் இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

    • உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூரம் சென்று தாக்குதல் ஏவுகணைகளை வழங்கியுள்ளது.
    • வடகொரியா ராணுவ வீரர்கள் ரஷியாவுக்கு உதவி செய்து வருவதால் ஜோ பைடன் தற்போது ஒப்புதல்.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வரவில்லை. ரஷியாவை எதிர்த்து போரிட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்து வருவதால் பதிலடி கொடுத்து வருகிறது.

    அமெரிக்கா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவகணைகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. ஆனால் தங்களுடைய ஒப்புதல் இல்லாமல் அதை பயன்படுத்தக்கூடாது என அமெரிக்க திட்டவட்டாக தெரிவித்திருந்தது.

    தற்போது ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா 10 ஆயிரம் வீரர்களை அனுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஏவுகணைகளை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் நாட்களில் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

    இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அப்போது உக்ரைன்-ரஷியா இடையிலான போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளது உக்ரைன்- ரஷியா இடையிலான போரை மேலும் தூண்டும். ஜோ பைடனின் அதிபர் ஆட்சிக்காலம் ஜனவர் 20-ந்தேதி வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர்.
    • மற்றொரு இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

    அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸில் உள்ள செயின்ட் ரோச் (St Roch neighbourhood) நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக தனியார் கார் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சிறிது நேரத்தில் அல்மோனாஸ்டர் அவென்யூ பிரிட்ஜ் பகுதியில் மற்றொரு துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரையும் கைது செய்யவில்லை. சந்தேகப்பட்டு நபர்கள் என்ற தகவலையும் வௌயியடவில்லை. பிரெஞ்ச் குவார்ட்டர் (French Quarter) என்ற பிரபல நகரின் அருகில்தான் செயினட் ரோச் நெய்பர்ஹூட் உள்ளது. பிரெஞ்ச் குவார்ட்டர் பிரபல சுற்றுலா பகுதியாகும்.

    கடந்த 10-ந்தேதி அலபாமாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 16 பேர் காயம் அடைந்தனர்.

    அணிவகுப்பு நடைபெறும் பகுதியிலும், கொண்டாட்டம் நிகழ்ச்சியிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியா வந்தடைந்தார்.
    • முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம் என இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

    இடைக்கால அரசு அமைக்கப்பட்டு 100 நாட்கள் ஆகிறது. இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் வலியுறுத்துவோம். போராட்டம் மற்றும் வன்முறையால் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் தகவலையும் கவனமாக சேகரித்து வருகிறோம். வன்முறையில் காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாது செய்யப்பட்டது. இதில் டாக்காவில் உள்ள 13 மருத்துவமனைகளும் அடங்கும்.

    இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்தார்.

    ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நடைபெற்ற வன்முறையில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 19931 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    முன்னதாக ஷேக் ஹசீனாவை திருப்பு அனுப்பு இந்தியாவிடம் வலியுறுத்தமாட்டோம் என முகமது யூனுஸ் தெரிவித்திருந்தார். தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

    • 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 1139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 251 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்து சென்றது.

    இதில் 117 பணய கைதிகளை இஸ்ரேல் உயிருடன் மீட்ட நிலையில், 101 பணய கைதிகள் ஹமாஸ் வசம் உள்ளனர். இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    லெபனானுக்குள் புகுந்தும், வான்வழி மூலமாகவும் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெரூட்டில் உள்ள ரசல் நபா பகுதியில் இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமது அய்ப் கொல்லப்பட்டார்.

    • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 79,984 ஆக உயர்ந்துள்ளது.
    • டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இதுவரை 80,000ஐ நெருங்கியுள்ளது.

    வங்கதேசத்தில் கொசுக்களால் பரவும் வைரல் காய்ச்சலான டெங்கு வேகமாக பரவி வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் வங்கதேசம் முழுவதும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1,389 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இதுவரை 80,000ஐ நெருங்கியுள்ளது.

    டெங்கு காய்ச்சலால் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கையின் மூலம், இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 79,984 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் மொத்தம் 415 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும், இன்று காலை வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள புதிய நோயாளிகளில் 376 பேர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    மேலும், டாக்கா பிரிவில் 391 பேரும், மைமென்சிங் பிரிவில் 44 பேரும், சட்டோகிராம் பிரிவில் 172 பேரும், குல்னா பிரிவில் 159 பேரும், ராஜ்ஷாஹி பிரிவில் 96 பேரும், ரங்பூர் பிரிவில் 19 பேரும், பரிஷால் பிரிவில் 123 பேரும், 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    • அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வருவது போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
    • கடந்த 3 மாதங்களில் ரஷியவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவே மிகப்பெரியதாகும்

    ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது.

    இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போர் ஒரு முடிவை எட்டாமல் நீண்டுகொண்டே செல்கிறது.இந்த போரில் இரண்டு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வருவது போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் உக்ரைன் மீது 120 ஏவுகணைகள், 90 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் பல்வேறு மாகாணங்களில் உள்ள மின் உற்பத்தி உட்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

     

    ரஷியாவில் இருந்து ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் , டிரோன்கள் ஆகியவற்றை உக்ரைன் பாதுகாப்புப்படை சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், சில ஏவுகணைகள், டிரோன்கள் இலக்குகளை தாக்கி அழித்தன. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததா முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

     

     

    இந்த தாக்குதலில் மின் உற்பத்தி உள்கட்டமைப்புகள் பெரும்பாலான எண்ணிக்கையில் சேதமடைந்தன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் ரஷியவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவே மிகப்பெரியதாகும் என்று கூறப்படுகிறது.

     

    ×