என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்மோல் பிஷ்னோய்"

    • பிரபல ரவுடி கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய்.
    • விமானம் தரையிறங்கியதும் அன்மோல் பிஷ்னோயை போலீசார் பாதுகாப்பாக கைது செய்து அழைத்து சென்றனர்.

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார். இதில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    மேலும், கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாபி பாடகர் சித்து மூஸேவாலா கொலையிலும், 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பையில் நடிகர் சல்மான் கான் வீட்டு முன்பும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திலும் அன்மோல் பிஷ்னோய்க்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

    பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். அவரை கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் வைத்து அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அன்மோல் பிஷ்னோயை நாடு கடத்தும்படி அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. இந்தநிலையில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அன்மோல் பிஷ்னோயை அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது.

    அன்மோல் பிஷ்னோய் மற்றும் இந்தியாவால் தேடப்படும் 2 குற்றவாளிகள் உள்பட அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 200 இந்தியர்களுடன் விமானம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது. இவர்களில் 197 பேர் போதிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் ஆவார்கள்.

    அந்த விமானம் இன்று டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானம் தரையிறங்கியதும் அன்மோல் பிஷ்னோயை போலீசார் பாதுகாப்பாக கைது செய்து அழைத்து சென்றனர்.

    பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அன்மோல் பிஷ்னோயை விசாரிக்க 15 நாட்கள் காவல் வழங்கும்படி என்ஐஏ கேட்டுக் கொண்டது.

    இந்நிலையில், அன்மோல் பிஷ்னோவுக்கு 11 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

    • அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.

    பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாடகர் சித்து மூஸ்வாலா கொலை மற்றும் இந்த ஆண்டு சல்மான் கான் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு உள்பட பல வழக்குகள் தொடர்பாக அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுதவிர கடந்த மாதம் மகாராஷிடிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொல்லப்பட்ட வழக்கில் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார். கைது செய்யப்பட்டதாக கூறப்படும் அன்மோல் பிஷ்னோய் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக இம்மாத தொடக்கத்தில், மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தும் பணியைத் தொடங்கியது. அவரை கைது செய்ய மகாராஷ்டிரா சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.

    உலகளாவிய சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. முன்னதாக அன்மோல் பிஷ்னோய் கனடாவில் இருப்பதாக நம்பப்பட்டது.

    இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் அன்மோல் பிஷ்னோயை மிகவும் தேடப்படும் பட்டியலில் சேர்த்தது. அவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது.

    • அன்மோல் குறித்து தகவல் தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது.
    • 2022-ம் ஆண்டு அன்மோல் உள்பட 9 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும், முன்னாள் மாநில மந்திரியுமான பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் ஈடுபட்டதாக போலீசார் அவரை தேடிவந்தனர்.

    அவர் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது. அமெரிக்கா அவரை கைது செய்ததாக தகவல் வெளியானது. என்.ஐ.ஏ. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.

    ஆனால் அமெரிக்கா அவரை கைது செய்ததை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அன்மோல் கைது செய்யப்பட்டு அயோவா மாகாணத்தில் உள்ள பொட்டாவட்டமி கவுன்ட்டியில் (Pottawattamie County) உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டதை தவிர மற்ற விரிவான தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.

    பாலிவுட் நடிகர் வீட்டிற்கு அருகில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அன்மோல் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    அன்மோல் குறித்து தகவல் தெரிவித்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது.

    வாரத் தொடக்கத்தில் அன்மோலை நாடு கடுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை எந்த தகவலையும் வெளியிட மறுத்தது. இது உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் எஃப்.பி.ஐ. அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனத் தெரிவித்தது.

    இவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், நிதி சேர்த்தல் தொடர்பாக 2022-ம் ஆண்டு அன்மோல் உள்பட 9 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    ×