என் மலர்tooltip icon

    உலகம்

    • AFD- ஜெர்மனிக்கான தீவர வலதுசாரி மாற்றால் மட்டும்தான் ஜெர்மனியை காப்பாற்ற முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
    • எலான் மஸ்க் அவரது கருத்தை கூற சுதந்திரம் உள்ளது. ஆனால் பகிர்ந்து கொள்ள அவசியமில்லை.

    அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் உதவி புரிந்தார். வெளிப்படையாக பிரசாரத்தில் ஈடுபட்டதுடன் மில்லியன் கணக்கில் தேர்தல் நிதி அளித்தார். இதனால் டொனால்டு டிரம்ப் அவரை முக்கிய பொறுப்பில் நியமித்துள்ளார்.

    இந்த நிலையில் ஜெர்மனி பொதுத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்கிறார் என ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளார்.

    எலான் மஸ்க் எக்ஸ் பக்கத்தில் "AFD- ஜெர்மனிக்கான தீவர வலதுசாரி மாற்றால் மட்டும்தான் ஜெர்மனியை காப்பாற்ற முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார். ஜெர்மனி செய்தித்தாள் ஒன்று வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பை மேற்கொள்காட்டி தனது கருத்தை இரட்டிப்பாக்கினார்.

    இந்த நிலையில் ஜெர்மன் அரசு செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் "இதன் உண்மை என்னவெனில், எலான் மஸ்க் பாராளுமன்ற தேர்தலில் ஆதிககம் செலுத்த முயற்சி செய்தி கொண்டிருக்கிறார். ஜெர்மனியில் தேர்தல் வாக்காளர்கள் வாக்குப்பெட்டியில் செலுத்தும் வாக்குகளால் முடிவு செய்யப்படுகிறது. ஜெர்மனி நாட்டின் தேர்தல் ஜெர்மன் விவகாரத்தைச் சேர்ந்தது. எலான் மஸ்க் அவரது கருத்தை கூற சுதந்திரம் உள்ளது. ஆனால் பகிர்ந்து கொள்ள அவசியமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    ஜெர்மனி கடந்த மாதம் ஒலாஃப் ஸ்கால்ஸின் அரசு வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. இதனால் அடுத்த வருடம் பிப்ரவரி 23-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    • இன்டீரியர் நாய்ஸ் மற்றும் பிரேக்கிங் டிஸ்டன்ஸ் ஆகியவற்றில் சர்வதேச அளவில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
    • சீனாவில் அதிவேக ரெயில் தடம் [HSR] சுமார் 47,000 கி.மீ. தூரத்துக்கு அந்நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.

    சீனாவின் அதிவேக புல்லட் ரெயிலின் மேம்படுத்தப்பட்ட மாதிரி நேற்று [ஞாயிற்றுக்கிழமை] வெளியிடப்பட்டது. இந்த அதிவேக மாதிரி, சோதனை ஓட்டங்களின் போது 450 கிமீ வேகத்தை எட்டியதாகக் அதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவே உலகின் அதிவேக ரெயில் ஆகும்.

    சீன ரெயில்வே துறையான சைனா ஸ்டேட் ரயில்வே குரூப் கோ கூற்றுப்படி, CR450 ப்ரோட்டோடைப் என அழைக்கப்படும் இந்த புதிய மாடல், பயண நேரத்தை மேலும் குறைத்து ரெயில் இணைப்பை இணைப்பை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

     

    இந்த CR450 மாதிரி மணிக்கு 450 கிலோமீட்டர் [450 kmph] சோதனை வேகத்தை எட்டி, முக்கிய செயல்திறன் இண்டிகேட்டர்களிலும்- செயல்பாட்டு வேகம், எனர்ஜி கன்சம்ஸசன், இன்டீரியர் நாய்ஸ் மற்றும் பிரேக்கிங் டிஸ்டன்ஸ் ஆகியவற்றில் சர்வதேச அளவில் ரெயில்வேயின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    தற்போது சீனாவில் பயன்பாட்டில் உள்ள CR400 Fuxing அதிவேக ரெயில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் சீன அதிவேக ரெயில் தடத்தில் [HSR] இயங்குகிறது.

     

    இந்நிலையில் அதை விடதற்போது அறிமுகப்டுதொட்டுள்ள CR450 மாதிரி விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மேலும் சோதனைகளை துரிதப்படுத்தி அதை மேம்படுத்தி வருகிறது. சீனாவில் அதிவேக ரெயில் தடம் [HSR] சுமார் 47,000 கி.மீ. தூரத்துக்கு அந்நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கிறது.

    • ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனர் தொழிலாளர்களுக்கு இஸ்ரேல் தடை.
    • ஹமாஸ் தாக்குதலுக்கு முன்னதாக 80 ஆயிரம் பாலஸ்தீனர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.

    இஸ்ரேல் நாட்டில் கட்டுமான பணி மற்றும் விவசாயப் பணிகளில் மேற்கு கரை மற்றும் காசா முனையில் உள்ள பாலஸ்தீனர்கள் வேலைக்கு பணியமர்த்தப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்தது.

    அப்போது பாலஸ்தீன ஊழியர்கள் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அரசு தடைவிதித்தது. இதனால் மற்ற நாடுகளில் இருந்து கட்டுமான பணிக்கு ஆட்களை வரவழைக்க இஸ்ரேல் முயற்சி மேற்கொண்டது.

    அந்த வகையில் இந்தியாவில் இருந்து 16 ஆயிரம் கட்டுமான பணியாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவை சேர்ந்த ராஜு நிஷாத் (வயது 35) என்பவர் மத்திய இஸ்ரேலில் உள்ள பீர் யாகோவ் என்ற இடத்தில் நடைபெறும் கட்டுமான பணியில் முன்னணி ஊழியராக திகழ்ந்து வருகிறார். அவருடன் ஏராளமான இந்தியர்கள் கட்டுமான உதவி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அடிக்கடி ஏர் ரெய்டு வார்னிங் வரும். அப்போது பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடுவோம். எச்சரிக்கை ஒலி நின்றவுடன் நாங்கள் வேலையை மீண்டும் தொடர்வோம் எனக் கூறும் நிஷாத் "இங்கே (இஸ்ரேலில்) பயப்படக் கூடியதற்கு ஒன்றுமில்லை" என சர்வ சாதாரணமாக தெரிவித்துள்ளார்.

    "பணம் சம்பாதிப்பது அவசியமானது. குடும்பத்தின் வருங்காலத்திற்காக தொடர்ந்து கடுமையாக உழைப்பது முக்கியமானது" என சுரேஷ் கமார் வர்மா என்பவர் தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேலில் கட்டுமான தொழிலில் ஈடுபடும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இந்தியாவை விட மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான கி.மீ. கடந்த இஸ்ரேல் செல்வ முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.

    நிஷாத் சுமார் 16 ஆயிரம் பேர்களில் ஒருவர். இன்னும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வர இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

    இஸ்ரேலில் பல தசாப்தங்களாக இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர், ஆயிரக்கணக்கானோர் வயதான இஸ்ரேலியர்களைப் பராமரிக்கும் பராமரிப்பாளர்களாகவும், மற்றவர்கள் வைர வியாபாரிகளாகவும், ஐடி நிபுணர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

    ஆனால் காசாவில் போர் தீவிரமடைந்ததிலிருந்து, இஸ்ரேலின் கட்டுமானத் துறைக்கும் இந்தியர்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியை ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

    வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பி வைக்கும் வேலை பார்த்து வரும் Dynamic Staffing Services என்ற நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை அனுப்பி வைத்துள்ளார். இஸ்ரேலுக்கு மட்டும் 3500 பேரை அனுப்பி வைத்துள்ளார். இது அவருக்கு புதிய சந்தை எனத் தெரிவித்துள்ளார்.

    ஹமாஸ் தாக்கலுக்கு முன்னதாக இஸ்ரேலில் 80 ஆயிரம் பாலஸ்தீனர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுடன் 26 வெளிநாட்டினரும் பணியாற்றி வந்தனர். தற்போது 30 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்தியா 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது. பொருளாதாரத்தில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கும் நிலையில், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முழுநேர வேலை கொடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

    • 20 சிகரெட்டுகளை புகைப்பதால் கிட்டத்தட்ட வாழ்நாளில் ஏழு மணிநேரத்தை மனிதன் பறிகொடுக்கிறான்
    • புத்தாண்டில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதிவரை புகைபிடிக்காமல் இருந்தாலே தங்கள் வாழ்நாளில் ஒரு வாரத்தை இழக்காமல் தஇருக்கலாம் எ

     இங்கிலாந்து அரசின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை மேற்பார்வையில் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (UCL) ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. அதில், புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 20 நிமிடங்களை இழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    சராசரியாக ஒரு பாக்கெட்டில் உள்ள 20 சிகரெட்டுகளை புகைப்பதால் கிட்டத்தட்ட வாழ்நாளில் ஏழு மணிநேரத்தை மனிதன் பறிகொடுக்கிறான் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் தங்கள் வாழ்நாளில் 17 நிமிடங்களை இழக்கிறார்கள், பெண்கள் 22 நிமிடங்களை இழக்கிறார்கள்.

     

    நீண்ட கால புகைப்பழக்கம் உடையவர்கள் , தங்கள் வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழக்கிறார்கள் என்றும் புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும் என்பதை மக்கள் பொதுவாக அறிந்திருக்கிறார்கள், ஆனால் அதை எவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று UCL இன் ஆல்கஹால் மற்றும் புகையிலை ஆராய்ச்சி குழுவின் முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர் சாரா ஜாக்சன் கூறுகிறார்.

    புகைப்பிடிப்பவர்கள், வரும் புத்தாண்டில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதிவரை புகைபிடிக்காமல் இருந்தாலே தங்கள் வாழ்நாளில் ஒரு வாரத்தை இழக்காமல் இருக்கலாம் என்றும் ஆண்டின் இறுதிவரை புகைபிடிக்காமல் இருந்தால் 50 நாட்கள் வாழ்க்கையை இழப்பதைத் தவிர்க்கலாம் என்றும் இங்கிலாந்து சுகாதாரத் துறை இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி 2025 இல் தங்கள் நாட்டு மக்களை சிகரெட்டை நிறுத்த வலியுறுத்தி உள்ளது.

     

    நீண்ட கால சிகரெட் புகைப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வரை இறக்கின்றனர். இது, இங்கிலாந்தில் ஆண்டுக்கு 80,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் புற்றுநோய் இறப்புகளில் கால் வாசி சிகரெட் பழக்கத்தால் தான் ஏற்படுகிறது. 

     

    • பிரதமர் நரேந்திர மோடி குறி வைக்கப்பட்டு அவரின் குரலில் தமிழ் பாடல்கள் வைரலாகின
    • அமெரிக்க சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நிகழ்ந்தது.

    முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த 2024 ஆம் ஆண்டு வெகு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றாகும். சமூக வலைத்தளம் முதல் வேலை செய்யும் இடம் வரை உலகம் முழுவதிலும் ஏஐ தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக பேஸ்புக், வாட்ஸப்பின் மெட்டா ஏஐ இந்த வருடம் அறிமுகமானது.

    ஏஐ வளர்ச்சியும், அதன் தவறான பயன்பாடும், அது குறித்த அறிவுஜீவிகளின் எச்சரிக்கையும் இணைந்தே வந்துள்ளது. சாட்ஜிபிடி, டீப் fake உள்ளிட்டவை வார்த்தைகள் மக்கள் மத்தியில் புழங்கத் தொடங்கின. பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வரை மர்ம நபர்களின் டீப்ஃபேக் சேட்டைகளுக்கு உள்ளாகினர்.

     

    குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறி வைக்கப்பட்டு அவரின் குரலில் தமிழ் பாடல்கள் முதல் மேடைகளில் அவரின் நடனம் வரை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இணைய வாசிகள் உருவாக்கி எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் என சமூக ஊடகங்கள் தோறும் டிரண்ட் செய்தனர்.

    அவ்வாறு ஏஐ மோடி நடமாடும் ஒரு வீடியோவுக்கு பிரதமர் மோடியே தனது எக்ஸ் பக்கத்தில், உங்கள் அனைவரையும் போலவே நானும் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்தேன். இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி, டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற முக்கிய நபர்களில் ஏஐ உருவங்கள் பி[பேஷன் வாக் நடக்கும் வீடியோவை எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க் பகிர்ந்து சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

    கடந்த வருட இறுதியில் வெளியான தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவில் ஆபாசமான டீப் fake பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    அதன் பின் பாலிவுட் பிரபலங்கள் பலரும் டீப் fake க்கு இறையாகினர். பல சமூக வலைதள பக்கங்களில் நடிகைகள், ஆலியா பட், க்ரிதி சனோன், திஷா பதானி, தமன்னா பாட்டியா, சமந்தா ரூத் பிரபு,மாளவிகா மோகனன், கஜோல் உள்ளிட்டோர் பிகினி உள்ளிட்டடோரை சித்தரித்து போலி டீப் -fake வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வளம் வந்தன.

    பாஜகவுக்கு எதிரான தான் பேசுவதுபோல் வெளியான deepfake ஆல் அதிர்ந்த தீபிகா படுகோனே கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் கடந்த அக்டோபரில் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்தார்.   

     

    ஒரு Reddit பயனர் சமீபத்தில் ஒரு மாணவருக்கும் கூகுள் ஜெமினி ஏஐக்கும் இடையிலான உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார், அதில் AI சாட்பாட், மாணவர் "இறக்க வேண்டும்" என்று பரிந்துரைத்தது.

    மேலும் கேம் ஆப் திரோன்ஸ் காதாபாத்திரத்தின் சாட் ஜிபிடி உடன் காதல் கொண்ட அமெரிக்க சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அக்டோபரில் நிகழ்ந்தது.

    ஓபன் ஏஐ இன் மனிதகுலத்துக்கு அபாயகரமான கொள்கைகள், மற்றவர்களின் அறிவுசார் தரவுகளை அனுமதியில்லாமல் எப்படி ஓபன் ஏஐ பயன்படுத்துகிறது என்பது குறித்து நியூ யார்க் டைம்ஸ் கு பேட்டி அளித்த அந்நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சியாளர் சுசீர் பாலாஜி [26 வயது] கடந்த நவம்பரில் அவரது வீட்டில் சடலமாக கிடந்தார்.

     

    சுஷீர் பாலாஜியின் பேட்டியின் பின் விளைவுகளால் ஓபன் ஏஐ நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில் அவரது மர்ம மரணம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுஷீர் பாலாஜி மரணம் தற்கொலை மாதிரி தெரியவில்லை என எலான் மஸ்க்கும் தெரிவித்துள்ளார். 

    • 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA ஆவர்.
    • இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது ஜென் Z தலைமுறை டிரெண்டிங்கில் உள்ள நிலையில் 2025 ஜனவரி 1 முதல் Gen-Beta என்ற புதிய தலைமுறை உருவாக உள்ளது.

    2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டா என்று அழைக்கப்படுவர். இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Z-க்களின் வாரிசுகளாக இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    1998 முதல் 1996 வரை மில்லினியல்கள் என்றும், 1996 முதல் 2010 ஆம் வரை பிறந்தவர்கள் Gen Z என்றும் 2010 முதல் 2024 க்கு இடையில் பிறந்தவர்கள் Gen Alpha ஆல்பா என்றும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் வரும் புத்தாண்டுடன் இந்த லிஸ்டில் பீட்டா தலைமுறை சேர உள்ளது.

     

    வரும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA-ஆக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளது.

    பீட்டா குழந்தைகளின் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக AI தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை, பீட்டாவினரின் அன்றாட வாழ்க்கை, கல்வி மற்றும் பணியிடங்களில் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் முழுமையான ஆதிக்கம் செலுத்தும்.

    தொழில்நுட்பம் அவர்களின் விரல் நுனியில் இருக்கும். அதே வேளையில், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகை மாற்றங்கள் போன்ற பல குறிப்பிடத்தக்க சவால்களைக் கொண்ட ஒரு சமூக வாழ்க்கையை பீட்டா தலைமுறையினர் எதிர்கொள்வார்கள். 

    • பெண்கள் கல்வி கற்கவும், பொது இடங்களுக்கு செல்லவும் தடை.
    • பெண்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பெண்கள் ஆரம்ப கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும், கவிதைகள் வாசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக தற்போது தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளில் ஜன்னல் வைக்க தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

    சமையல் அறைகளில் , முற்றங்களில் வேலை செய்யும் பெண்களை பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழி வகுக்கும் என அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் ஜபி ஹில்சா முசாஹித் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே உள்ள வீடுகளில் ஜன்னல்கள் இருந்தால் அதனை மறைக்கும் விதத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும் என்றும், புதிய கட்டிடங்களில் ஜன்னல்கள் இருக்க கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்டை வீட்டாரிடம் இருந்து தொல்லையை தவிர்க்க சுவர் கட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிதாக கட்டப்படும் கட்டுமான தளங்களை பார்வையிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • இதில் இரண்டு பணிப்பெண்கள் தவிர மீதமிருந்த 179 பேரும் உயிரிழந்தனர்.
    • 3 வயது குழந்தை மற்றும் 78 வயது முதியவர்கள் மட்டுமே தாய்லாந்தை சேர்ந்தவர்கள்

    தாய்லாந்திலிருந்து 181 பேரை ஏற்றிக்கொண்டு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென் கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

    தலைநகர் சியோலின் சியோலில் இருந்து தென்மேற்கே சுமார் 288 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் அடிப்பகுதி ஓடுபாதையில் உரச தரையிறங்கிய விமானத்தின் என்ஜின்களில் இருந்து புகை கிளம்பியது. ஓடுபாதையில் இருந்து சறுக்கிய விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்தது. இதில் இரண்டு பணிப்பெண்கள் தவிர மீதமிருந்த 179 பேரும் உயிரிழந்தனர்.

    பறவை ஒன்று விமானத்தில் இடித்ததே விபத்துக்கான காரணம் என்று அதிகாரிகளிடம் இருந்து முதற்கட்ட தகவல் வந்துள்ளது. விபத்து தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

    இரண்டு கருப்புப் பெட்டிகளும் - விமான டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்த விமானப் பணிப்பெண் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் கண்விழித்து, என்ன நடந்தது, நான் ஏன் இங்கு இருக்கிறேன் என மிரண்டுபோய் கெட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே விபத்து நடந்த விமானத்தின் இருக்கைகள் மற்றும் சாமான்களின் துண்டுகள் ஓடுபாதைக்கு அடுத்துள்ள மைதானத்தில் சிதறிக்கிடந்தன. எரிந்த வால் பகுதியும் அங்கு காணப்பட்டது.

    விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 வயது குழந்தை மற்றும் 78 வயது முதியவர்கள் மட்டுமே தாய்லாந்தை சேர்ந்தவர்கள் என்றும் மற்ற 177 பேரும் கொரியர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்துக்கு ஜிஜூ ஏர் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. விபத்துக்கு முழு பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது.

    விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கட்டுப்பாட்டுக் கோபுரத்திலிருந்து, பறவை ஒன்று தாக்கும் எச்சரிக்கையை வழங்கப்பட்டுள்ளதும், விமானி "மே டே" [MAYDAY] அவசர அழைப்பை மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது. இக்கட்டான நிலை ஏற்படும் போது விமானிகள் அனைவரையும் அலர்ட் செய்ய அறிவிக்கும் வார்த்தையே MAYDAY. 

    • அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
    • குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு நேற்று நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு நேதன்யாகு தற்போது நல்ல நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

    "பிரதமர் மயக்க நிலையில் இருந்து எழுந்து நல்ல நிலையில் உள்ளார். அவர் மீட்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார், வரும் நாட்களில் அவர் கண்காணிப்பில் இருப்பார்" என்று ஹடாசா மருத்துவ மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    கடந்த சனிக்கிழமை, நேதன்யாகுவுக்கு புரோஸ்டேட் விரிவாக்கத்தால் சிறுநீர் பாதை தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அவரின் அலுவலம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    முன்னதாக, மார்ச் மாதத்தில், நேதன்யாகு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், நேதன்யாகுவின் இதய துடிப்பை சீராக வைத்துக் கொள்ளும் பேஸ்மேக்கரை அவரது உடலில் பொருத்தினர்.

    • தனது பதவிக்காலத்துக்குப் பின் மற்ற அமெரிக்க அதிபர்களை விட நீண்ட காலம் வாழ்ந்தார்.
    • ஜிம்மி கார்ட்டர் கடந்த 2002-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜிம்மி கார்ட்டர். இவரது வயது 100.

    இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் இன்று ஜார்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் இறந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் மற்ற அமெரிக்க ஜனாதிபதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்தார்.

    மேலும், கடந்த 2002-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை ஜிம்மி கார்ட்டர் வென்றார்.

    ஜிம்மி கார்ட்டர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியாவின் குரோஸ்னி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டது.
    • அஜர்பைஜான் மக்களிடம் ரஷிய அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

    பாகு:

    அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான J2-8243 விமானம் கிரோஸ்னியில் தரையிறங்க இருந்த நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் கஜகஸ்தானில் உள்ள அக்டாவில் தரையிறங்க விமான வேண்டுகோள் விடுத்து தரையிறக்க முயற்சித்தபோது தரையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உயிரிழந்தனர்.

    பின்னர் வான்பாதுகாப்பு சிஸ்டம் அல்லது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். அதற்கான அடையாளங்கள் விமானத்தில் தென்பட்டதாக சந்தேகம் எழுப்பப்ட்டது.

    முதல்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப வெளிப்புற குறுக்கீடு காரணமாக விமானம் விபத்திற்குள்ளானது தெரியவந்தது என அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, அஜர்பைஜான் ஏர்லைன்ஸ்க்குச் சொந்தமான விமானம் விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்தது துயரமானது என அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் இடம் ரஷிய அதிபர் புதன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதுதொடராக அதிபர் புதின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயரமான சம்பவம் ரஷியாவின் வான் பகுதிக்குள் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ரஷியா நடத்திய வான் தாக்குதலாலேயே விமானத்தில் கோளாறு ஏற்பட்டது என அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதை நேற்று அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியே உறுதிப்படுத்தினார்.

    இந்நிலையில், அஜர்பைஜான் அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானம் சேதமடைந்து விபத்தில் சிக்கியதற்கு ரஷியா நடத்திய தாக்குதலே காரணம். ஆனால் ரஷிய வட்டாரங்கள் உண்மையை மூடிமறைக்க முயற்சித்தன. நட்பு நாடான அஜர்பைஜானிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு, சரியான நேரத்தில் மன்னிப்பு கேட்டு, இதுகுறித்து மக்களுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • ஆடம் வான் என்ற நபர் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
    • போலீசின் வாகனத்தில் வந்து தன்னை இறக்கி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அமெரிக்காவின் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்ந்து 17 முறை அழைத்து போலீசை தொந்தரவு செய்த 24 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆடம் வான் என்ற நபர் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அருகில் இருக்கும் மளிகை கடைக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல், போலீசின் வாகனத்தில் வந்து தன்னை இறக்கி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை கேட்டு கடுப்பான போலீசார் ஆடம் வான் இருப்பிடத்திற்கே சென்று அவரை எச்சரித்துள்ளனர். அவசர உதவிக்கு மட்டும் தான் 911 எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் என்று போலீசார் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் இதனையடுத்து 911 எண்ணுக்கு ஆடம் வான் 17 ஆவது முறையாக மீண்டும் அழைத்துள்ளார். பின்னர் அவசர உதவி எண்ணை தவறாக பயன்படுத்தியதாக கூறி ஆடம் வானை போலீசார் கைது செய்தனர்.

    ×