என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
ஜெர்மனி பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர் தற்கொலை
Byமாலை மலர்24 Jan 2022 5:26 PM GMT (Updated: 24 Jan 2022 5:26 PM GMT)
தாக்குதல் நடத்திய நபர் வெளியே சென்று சிறிது நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.
பெர்லின்:
ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு நபர் திடீரென துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்துள்ளார். ஒரு வகுப்பறையில் புகுந்த அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் மாணவர்கள் அலறியடித்து வெளியேறினர். இந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய நபர் வெளியே சென்று சிறிது நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார். தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர் ஒரு மாணவர் என்று நம்பப்படுகிறது. இந்த தாக்குதலில் அரசியல் அல்லது மத நோக்கங்கள் எதுவும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X