என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குறைவாக சாப்பிடுங்கள் என மக்களுக்கு உத்தரவு பிறப்பித்த கிம் ஜாங் அன்
Byமாலை மலர்29 Oct 2021 1:55 AM GMT (Updated: 29 Oct 2021 1:55 AM GMT)
1994-1998 ஆண்டுகளில் நிலவியது போன்று உணவு தட்டுப்பாடு வரும் என வடகொரிய அதிகாரிகள் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதமே எச்சரிக்கை விடுத்தனர்
பியாங்யாங் :
அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளால் ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளதால் வடகொரியா பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வந்தது.
இந்த நிலையில், உலகளாவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று தோன்றியது.
இதன்காரணமாக தனது எல்லைகளை வடகொரியா மூடி உள்ளது. மேலும் சீனாவில் இருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்வதை கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வடகொரியா நிறுத்தி விட்டது.
இதனால் அங்கு உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
1994-1998 ஆண்டுகளில் நிலவியது போன்று உணவு தட்டுப்பாடு வரும் என வடகொரிய அதிகாரிகள் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதமே எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில், நாட்டு மக்களை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ன.
இந்த உணவு தட்டுப்பாடு அங்கு 2025-ம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. 2025-ம் ஆண்டு வரை மூடிய எல்லைகளை திறக்க வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாக வடகொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது குறைவாக சாப்பிடுமாறு உத்தரவிட்டிருப்பது மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளால் ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார தடை விதித்துள்ளதால் வடகொரியா பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வந்தது.
இந்த நிலையில், உலகளாவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று தோன்றியது.
இதன்காரணமாக தனது எல்லைகளை வடகொரியா மூடி உள்ளது. மேலும் சீனாவில் இருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்வதை கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வடகொரியா நிறுத்தி விட்டது.
இதனால் அங்கு உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
1994-1998 ஆண்டுகளில் நிலவியது போன்று உணவு தட்டுப்பாடு வரும் என வடகொரிய அதிகாரிகள் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதமே எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில், நாட்டு மக்களை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ன.
இந்த உணவு தட்டுப்பாடு அங்கு 2025-ம் ஆண்டு வரை நீடிக்கும் எனவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. 2025-ம் ஆண்டு வரை மூடிய எல்லைகளை திறக்க வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாக வடகொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது குறைவாக சாப்பிடுமாறு உத்தரவிட்டிருப்பது மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.
இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, “தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. வர இருக்கும் குளிர்காலத்தில் எங்களால் வாழ முடியுமா என்பது தெரிய வில்லை. 2025-ம் ஆண்டு வரை கஷ்டங்ளை சகித்துக்கொள்ளுங்கள் என்று சொல்வது எங்களை பட்டினி கிடந்து சாகச்சொல்வதற்கு சமம்” என்கின்றனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிக்கலாம்....பேஸ்புக்கின் புதிய பெயர் மெட்டா - மார்க் ஜூக்கர்பர்க் அறிவிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X