என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- காவல்துறை அதிரடி
Byமாலை மலர்21 Oct 2021 9:53 AM GMT (Updated: 21 Oct 2021 9:53 AM GMT)
கைபர் பாக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
பெஷாவர்:
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் டிடிபி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். ஷாபூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்ததகவலின்படி அங்கு சுற்றி வளைத்த போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் ஹிஸ்புல்லா என அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெறுகிறது.
கைபர் பாக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. நேற்று கைபர் பாக்துன்க்வா மாகாணம் தியாரா பண்டகாய் பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல், சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை பணியில் ஈடுபட்டுள்ள சீனர்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X