search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கிச்சூடு நடந்த பள்ளி வளாகம்
    X
    துப்பாக்கிச்சூடு நடந்த பள்ளி வளாகம்

    டெக்சாஸ் உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் காயம்

    ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலைப் பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று காயம் அடைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அமெரிக்காவின் டெக்சாஸ் ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அமெரிக்க நேரப்படி காலை 9.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் மூன்று பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்துள்ள போலீசார், காயம் அடைந்தவர்களின் நிலை குறித்து தெளிவாக தெரிவிக்கவில்லை.

    துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டாரா? என்பது விவரம் வெளியாகவில்லை.
    Next Story
    ×