என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு டோஸ் போதுமானது: ‘ஸ்புட்னிக் லைட்’ என்ற தடுப்பூசிக்கு ரஷியா அங்கீகாரம்
Byமாலை மலர்7 May 2021 1:39 PM GMT (Updated: 7 May 2021 2:48 PM GMT)
ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்து வினியோகம் செய்து வரும் ரஷ்யா, தற்போது ஸ்புட்னிக் லைட் என்ற பெயரில் மற்றொரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
ரஷிய நாட்டின் தயாரிப்பான கொரோனா தொற்றுக்கு எதிராக 79.4 சதவீத செயல்திறனைக் கொண்ட 'ஸ்புட்னிக் லைட்' ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது.
தற்போது கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் இரண்டு டோஸ்கள் உடையவை. ஒரு டோஸ் மட்டுமே செலுத்தப்படும் தடுப்பூசி என்ற பெருமை ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு கிடைத்துள்ளது.
'ஸ்புட்னிக் லைட்' தடுப்பு மருந்து குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறுகையில், ‘‘கொரோனாவுக்கு எதிராகப் போராடக்கூடிய 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி, ஏகே-47 துப்பாக்கிகளைப் போலவே நம்பகமானவை. அனைத்து வகையான கொரோனா உருமாற்ற வகைகளுக்கும் எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக வேலை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்'' என்றார்.
ஏ.கே.47 துப்பாக்கிகள் ரஷிய நாட்டின் காப்புரிமை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X