search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி
    X
    நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி

    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை

    பசிபிக் கடலில் 47 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்தது.
    டோக்கியோ:

    சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை நிலைகுலையச் செய்கின்றன. சில நேரங்களில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.

    இந்நிலையில், ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதியில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் கடலில் இஷினோமாகி அருகே 47 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்தது. 

    நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. தலைநகர் டோக்கியோவிலும் நில அதிர்வு உணரப்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவலும் வெளியாகவில்லை.

    நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சில புல்லட் ரெயில்கள் உள்பட உள்ளூர் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. 
    Next Story
    ×