search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இத்தாலியில் கொரோனா பாதிப்பு 36.50 லட்சத்தை தாண்டியது

    இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.10 லட்சத்தை கடந்தது.
    ரோம்:

    கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
     
    அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 7-ம் இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 261 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்து 50 ஆயிரத்து 247 ஆக உள்ளது.

    ஒரே நாளில் 376 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 704 ஆக உள்ளது.

    மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29.74 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 5.63 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×