என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரேசில் மந்திரி சபையில் அதிரடி மாற்றம் - 6 புதிய மந்திரிகள் நியமனம்
Byமாலை மலர்31 March 2021 2:38 AM GMT (Updated: 31 March 2021 2:38 AM GMT)
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோரை வைரஸ் தாக்கிய நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலியா:
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோரை வைரஸ் தாக்கிய நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிபர் ஜெயீர் போல்சனாரோ தலைமையிலான அரசு கொரோனா வைரசை முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை நிரூபிக்கும் விதமாக கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இப்போது வரை 4 முறை சுகாதாரத்துறை மந்திரி மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருந்து வந்த எர்னஸ்டோ அராஜுவோ இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை மோசமாக கையாண்டதால் அந்த நாடுகளிடம் இருந்து போதிய அளவு கொரோனா தடுப்பூசிகளை பெற முடியாமல் போனது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மந்திரிசபையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென கூட்டணி கட்சிகள் அதிபர் ஜெயீர் போல்சனாரோவுக்கு அழுத்தம் கொடுத்தன. அதன்பேரில் பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக அதிபர் ஜெயீர் போல்சனாரோ மிகப்பெரிய அளவில் தனது மந்திரி சபையை மாற்றியமைத்துள்ளார்.
வெளியுறவு, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நீதி உள்பட முக்கியமான 6 துறைகளுக்கு அவர் புதிய மந்திரிகளை நியமித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோரை வைரஸ் தாக்கிய நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிபர் ஜெயீர் போல்சனாரோ தலைமையிலான அரசு கொரோனா வைரசை முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை நிரூபிக்கும் விதமாக கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இப்போது வரை 4 முறை சுகாதாரத்துறை மந்திரி மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருந்து வந்த எர்னஸ்டோ அராஜுவோ இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளை மோசமாக கையாண்டதால் அந்த நாடுகளிடம் இருந்து போதிய அளவு கொரோனா தடுப்பூசிகளை பெற முடியாமல் போனது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மந்திரிசபையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென கூட்டணி கட்சிகள் அதிபர் ஜெயீர் போல்சனாரோவுக்கு அழுத்தம் கொடுத்தன. அதன்பேரில் பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக அதிபர் ஜெயீர் போல்சனாரோ மிகப்பெரிய அளவில் தனது மந்திரி சபையை மாற்றியமைத்துள்ளார்.
வெளியுறவு, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நீதி உள்பட முக்கியமான 6 துறைகளுக்கு அவர் புதிய மந்திரிகளை நியமித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X