search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    பிரேசிலை துரத்தும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது

    பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.
    ரியோ டி ஜெனிரோ:

    கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

    அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

    அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,43,400-ஐ தாண்டியுள்ளது.

    மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 89.50 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 8.36 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×