என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘எச் 4’ விசாதாரர்களின் பணி அங்கீகாரத்தை நீட்டிக்க வேண்டும்- ஜோ பைடனுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்
Byமாலை மலர்19 Dec 2020 3:01 AM GMT (Updated: 19 Dec 2020 3:01 AM GMT)
‘எச் 4’ விசா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்து, பணி அங்கீகாரத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி அமெரிக்க எம்.பி.க்கள் 60 பேர் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு ‘எச்1 பி’ என்கிற பணியாளர் விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். அதேபோல் ‘எச்1 பி’ விசாதாரர்களின் மனைவி அல்லது கணவன் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு ‘எச் 4’ விசா வழங்கப்படுகிறது.
ஆனால் ‘எச்1 பி’ மற்றும் ‘எச் 4’ விசாக்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கூறி ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விசா நடைமுறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தது.
அந்த வகையில் ‘எச் 4’ விசாதாரர்களுக்கான பணி அங்கீகாரத்திற்கான காலக்கெடுவை டிரம்ப் நிர்வாகம் குறைத்தது. இதனால் ‘எச் 4’ விசாதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய பெண்கள் ஆவர்.
இந்த நிலையில் ‘எச் 4’ விசா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்து, அவர்களின் பணி அங்கீகாரத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி அமெரிக்க எம்.பி.க்கள் 60 பேர் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த கடிதத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்களான ராஜ கிருஷ்ணமூர்த்தி, பிரமீளா ஜெயபால், அமி பேரா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில் “டிரம்ப் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட செயலாக்க சிக்கல்களை நமது உள்நாட்டு பாதுகாப்பு துறையின் புதிய மந்திரி சரி செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்” என எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு ‘எச்1 பி’ என்கிற பணியாளர் விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். அதேபோல் ‘எச்1 பி’ விசாதாரர்களின் மனைவி அல்லது கணவன் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு ‘எச் 4’ விசா வழங்கப்படுகிறது.
ஆனால் ‘எச்1 பி’ மற்றும் ‘எச் 4’ விசாக்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கூறி ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விசா நடைமுறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தது.
அந்த வகையில் ‘எச் 4’ விசாதாரர்களுக்கான பணி அங்கீகாரத்திற்கான காலக்கெடுவை டிரம்ப் நிர்வாகம் குறைத்தது. இதனால் ‘எச் 4’ விசாதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய பெண்கள் ஆவர்.
இந்த நிலையில் ‘எச் 4’ விசா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்து, அவர்களின் பணி அங்கீகாரத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி அமெரிக்க எம்.பி.க்கள் 60 பேர் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்த கடிதத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்களான ராஜ கிருஷ்ணமூர்த்தி, பிரமீளா ஜெயபால், அமி பேரா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில் “டிரம்ப் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட செயலாக்க சிக்கல்களை நமது உள்நாட்டு பாதுகாப்பு துறையின் புதிய மந்திரி சரி செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்” என எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X