search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடிகுண்டு தாக்குதல்
    X
    வெடிகுண்டு தாக்குதல்

    காபூலில் வெடிகுண்டு, துப்பாக்கி சூடு தாக்குதல்- 3 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வடக்கு பகுதியில் இன்று ஒரு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டு வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அதேபோல கிழக்கு காபூலில் அரசு வக்கீல் ஒருவர் அலுவலகத்துக்கு சென்றபோது மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

    நேற்று காபூலில் கையெறி குண்டுகள் வீசி தாக்கப்பட்டதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் தற்போது ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×