என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : ஆட்சி அதிகார மாற்றத்தில் தாமதம் இருக்காது - ஜோ பைடன் நம்பிக்கை
Byமாலை மலர்25 Nov 2020 8:27 PM GMT (Updated: 25 Nov 2020 8:27 PM GMT)
அமெரிக்காவின் ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகள் தாமதமாக தொடங்கியிருந்தாலும், முடிவில் தாமதம் இருக்காது என ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறார். அவரின் பிடிவாதத்தால் ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் சிக்கல் இருந்தது.
ஆனால் ஒரு வழியாக டிரம்ப், ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இதையடுத்து ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகள் தாமதமாக தொடங்கியிருந்தாலும், முடிவில் தாமதம் இருக்காது என ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “ஆட்சி அதிகார மாற்றத்தில் வெள்ளை மாளிகையின் அணுகு முறை மிகவும் நேர்மையாக உள்ளது. இது ஒரு மெதுவான தொடக்கமாகும். ஆனாலும் இது கவலைக்குரியது அல்ல. இன்னும் 2 மாதங்கள் உள்ளன. வேகத்தை எட்டக்கூடிய திறனைப் பற்றி நான் நன்றாக உணர்கிறேன். எனவே ஆட்சி அதிகார மாற்றத்தில் தாமதம் இருக்காது” என கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறார். அவரின் பிடிவாதத்தால் ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதில் சிக்கல் இருந்தது.
ஆனால் ஒரு வழியாக டிரம்ப், ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இதையடுத்து ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஆட்சி அதிகார மாற்றத்துக்கான பணிகள் தாமதமாக தொடங்கியிருந்தாலும், முடிவில் தாமதம் இருக்காது என ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “ஆட்சி அதிகார மாற்றத்தில் வெள்ளை மாளிகையின் அணுகு முறை மிகவும் நேர்மையாக உள்ளது. இது ஒரு மெதுவான தொடக்கமாகும். ஆனாலும் இது கவலைக்குரியது அல்ல. இன்னும் 2 மாதங்கள் உள்ளன. வேகத்தை எட்டக்கூடிய திறனைப் பற்றி நான் நன்றாக உணர்கிறேன். எனவே ஆட்சி அதிகார மாற்றத்தில் தாமதம் இருக்காது” என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X