search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெலிகாப்டர் விபத்து
    X
    ஹெலிகாப்டர் விபத்து

    மலேசியாவில் ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல் - 2 பேர் பலி

    மலேசியாவில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
    கோலாலம்பூர்:

    மலேசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சிலாங்கூர் மாகாணம் உலு கிளாங் நகரிலிருந்து தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் மலேசியா ஏர்லைன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் அஹ்மத் ஜவுஹாரி யஹ்யா உள்பட 2 பேர் பயணம் செய்தனர்.

    இந்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் எதிர்திசையில் வந்த மற்றொரு ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து நொறுங்கின. விபத்துக்குள்ளான மற்றொரு ஹெலிகாப்டரிலும் 2 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். எனினும் அஹ்மத் ஜவுஹாரி யஹ்யா உள்பட 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பதை உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×