என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலேசியாவில் ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல் - 2 பேர் பலி
Byமாலை மலர்8 Nov 2020 6:51 PM GMT (Updated: 8 Nov 2020 6:51 PM GMT)
மலேசியாவில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கோலாலம்பூர்:
மலேசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சிலாங்கூர் மாகாணம் உலு கிளாங் நகரிலிருந்து தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் மலேசியா ஏர்லைன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் அஹ்மத் ஜவுஹாரி யஹ்யா உள்பட 2 பேர் பயணம் செய்தனர்.
இந்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் எதிர்திசையில் வந்த மற்றொரு ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து நொறுங்கின. விபத்துக்குள்ளான மற்றொரு ஹெலிகாப்டரிலும் 2 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். எனினும் அஹ்மத் ஜவுஹாரி யஹ்யா உள்பட 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பதை உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மலேசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள சிலாங்கூர் மாகாணம் உலு கிளாங் நகரிலிருந்து தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் மலேசியா ஏர்லைன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் அஹ்மத் ஜவுஹாரி யஹ்யா உள்பட 2 பேர் பயணம் செய்தனர்.
இந்த ஹெலிகாப்டர் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் எதிர்திசையில் வந்த மற்றொரு ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் 2 ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து நொறுங்கின. விபத்துக்குள்ளான மற்றொரு ஹெலிகாப்டரிலும் 2 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. இந்த கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். எனினும் அஹ்மத் ஜவுஹாரி யஹ்யா உள்பட 2 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பதை உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X