என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேசுவதற்கு எதுவும் இல்லாத தலைவர்... ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்தியா பதிலடி
Byமாலை மலர்26 Sep 2020 4:09 AM GMT (Updated: 26 Sep 2020 4:09 AM GMT)
ஐநா பொதுசபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதி என்று தெரிவித்தது.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 74-வது கூட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று பேசும்போது, காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் எழுப்பினார். போர் பதற்றத்தை தூண்டும் வகையில் இம்ரான்கான் பேசியதைக் கண்டித்து இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிடோ பொதுசபை மண்டபத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இம்ரான் கானின் உரையையும் புறக்கணித்தார்.
அதன்பின்னர் இம்ரான்கான் உரைக்கு பதிலுரை வழங்கும் வாய்ப்பில் இந்திய பிரதிநிதி மிஜிடோ வினிடோ பேசியதாவது:-
பாகிஸ்தான் தலைவர் இன்று வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டுபவர்களை சட்டவிரோதிகள் என்று அழைத்தார். ஆனால், அவர் தன்னைக் குறிப்பிடுகிறாரோ? என்று நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.
தன்னிடம் உள்ள சிறப்பு என்று காட்டுவதற்கு ஒன்றும் இல்லாத, பேசுவதற்கு எந்த சாதனைகளும் இல்லாத மற்றும் உலகிற்கு வழங்குவதற்கான நியாயமான ஆலோசனை எதுவும் இல்லாத ஒருவரின் இடைவிடாத கூச்சலை இந்த அவை கேட்டது. இந்த மன்றத்தின் மூலம் பொய்கள், தவறான தகவல்கள், போர்க்குணம் மற்றும் வன்மம் பரவுவதை நாங்கள் கண்டோம்.
இன்று விஷத்தைத் தூண்டிய அதே தலைவர், 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பேசும்போது, தனது நாட்டில் இன்னும் 30,000 முதல் 40,000 வரை பயங்கரவாதிகள் உள்ளனர் என்றும், அவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் மற்றும் இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் போராடியவர்கள் என்றும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதியாகும். காஷ்மீர் தொடர்பாக ஒரே ஒரு பிரச்சினைதான் எஞ்சியிருக்கிறது. அது, பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள காஷ்மீர் தொடர்பானது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X