என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்நாட்டு போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் உதவிகேட்டு ரஷிய அதிபர் புதினை சந்தித்தார் பெலாரஸ் அதிபர்
Byமாலை மலர்14 Sep 2020 9:51 PM GMT (Updated: 14 Sep 2020 9:52 PM GMT)
பெலாரஸ் நாட்டின் அதிபர் லூகாஷென்கோ ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மாஸ்கோ:
ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல்
நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்ஸ்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா கைது நடவடிக்கைக்கு அஞ்சி அண்டைநாடான லிதுவேனியாவுக்கு தப்பிச்சென்றுவிட்டார்.
அதேபோல் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான வெரோனிகா டிசிப்கலோவும் தனது குடும்பத்துடன் போலாந்து தப்பிச்சென்றுவிட்டார். ஆனால் மரியா கொலிஸ்னிகோவா என்ற ஒருங்கிணைப்பாளர் மட்டும் பெலாரஸ் நாட்டிலேயே இருந்து கொண்டு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தார். ஆனால், அவரை முகமூடி அணிந்த நபர்கள் கடத்திச்சென்று உக்ரைனுக்கு நாடுகடத்த முற்பட்டனர்.
ஆனால், மரியா நாடுகடத்தல் நடவடிக்கையில் இருந்து தப்பித்தார். இதனால், அவரை கைது செய்துள்ள பெலாரஸ் பாதுகாப்பு படையினர் சிறையில்
அடைத்து வைத்துள்ளனர்.
இதையடுத்து, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மரியாவை விடுதலை செய்யக்கோரியும், அதிபர் அலெக்ஸ்சாண்டர் பதவி விலக்கக்கோரியும் பெலாரஸ் நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.
போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் அனைத்தும் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சூழ்ச்சியே காரணம் என அதிபர் அலேக்ஸ்சான்டர் குற்றம் சுமத்தி வருகிறார்.
மேலும், தனது ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா தலைமையிலான நோட்டோ படைகள் பெலாரஸ் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறி சர்ச்சையை கிளப்பினார்.
இந்த சூழ்ச்சியில் இருந்து பெலாரசை பாதுகாக்க ரஷியா உதவ வேண்டும் எனவும் அலேக்ஸ்சாண்டர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, பெலாரசுக்கு தேவைப்படும்போது ராணுவ ரீதியிலான உதவிகளை செய்வதாக ரஷிய அதிபர் புதின் உறுதியளித்தார்.
இதனால், உள்நாட்டில் நடைபெற்று வந்த போராட்டங்கள் அமெரிக்கா, ரஷியா இடையேயான பனிப்போரை உருவாக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், உள்நாட்டில் தேர்தல் நிறைவடைந்து மீண்டும் அதிபாரக பொறுப்பேற்ற பினர், போராட்டங்கள் நடைபெறத்தொடங்கிய பின்னர் முதல் முறையாக பெலாரஸ் அதிபர் நேற்று வெளிநாடு பயணம் மேற்கொண்டார்.
உள்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் அதிபர் அலேக்ஸ்சாண்டர் நேற்று ரஷிய நாட்டிற்கு சென்றார். அந்நாட்டின் சோச்சி நகரில் உள்ள அதிபரின் தனி குடியிருப்பு பகுதிக்கு சென்ற அலேக்ஸ்சாண்டர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
4 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பொலாரசில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாகவும், பொருளாதார பிரச்சனைகள் தொடர்பாகவும் ரஷியா உதவவேண்டும் எனவும் அதிபர் புதினிடம் அலேக்ஸ்சாண்டர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, பெலாரசின் பொருளாதார பிரச்சனைகளை சரிகட்ட உடனடியாக 1.5 பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்குவதாக ரஷிய அதிபர் புதின் உறுதியளித்தார்.
மேலும், வெளிநாடுகளில் இருந்து அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க உள்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என அலேக்ஸ்சாண்டருக்கு ரஷிய அதிபர் புதின் ஆலோசனை வழங்கினார்.
அதிபர் பதவி விலகக்கோரி 1 மாதத்திற்கு மேலாக பெலாரசில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதிபர் அலேக்ஸ்சாண்டர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துள்ள சம்பவம் அந்நாட்டு அரசியல் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X