search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெளியேற்றப்பட்ட மக்கள்
    X
    வெளியேற்றப்பட்ட மக்கள்

    ஜப்பானை மிரட்டும் ஹாய்ஷென் சூறாவளி - 8.1 லட்சம் மக்கள் வெளியேற்றம்

    ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில் 8.1 லட்சம் மக்களை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதி மாகாணங்களை நோக்கி ஹாய்ஷென் என பெயரிடப்பட்ட சூறாவளி நெருங்கி வருகிறது.

    இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகருகிறது என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எனினும், இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 162 கி.மீ. இருக்க கூடும் என்றும் மணிக்கு 216 கி.மீ. வரை வேகமெடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. ஜப்பானின் கியூசூ தீவை சூறாவளி தாக்கும் என கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, அங்கிருந்து 8.1 லட்சம் மக்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது.  

    இதேபோல், ஜப்பானிலுள்ள பிற 10 மாகாணங்களிலும் உள்ள 55 லட்சம் மக்களையும் வேறு பகுதிகளுக்கு வெளியேறி செல்லும்படி அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×