என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெர்மனி: அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்பு
Byமாலை மலர்4 Sep 2020 12:38 AM GMT (Updated: 4 Sep 2020 12:40 AM GMT)
ஜெர்மனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
பெர்லின்:
ஜெர்மனி நாட்டின் சொலிங்கின் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 6 குழந்தைகளுடன் ஒரு பெண் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் தாய் சொலிங்கின் நகர போலீசாரை தொடர்பு கொண்டு தனது மகளின் வீட்டில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு விரைந்த போலீசார் அந்த பெண் தனது 6 குழந்தைகளுடம் வசித்துவந்த பிளாட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு 5 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கிடந்தன. ஒரே குழந்தை மட்டும் உயிருடன் இருந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் இந்த குழந்தைகளின் தாயை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், அந்த பெண் தனது குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள டுஸ்சில்டோர்ஃப் ரெயில் நிலையித்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த பெண் தனது குழந்தைகள் 5 பேரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்திருக்கலாம் என்பதால் சிகிச்சைக்கு பின் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதால் அல்லது எவ்வாறு குழந்தைகள் உயிரிழந்தன என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 3 பெண்குழந்தைகளும், 2 ஆண்குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த குழந்தைகளின் வயது முறையே 1,2 மற்றும் 3 ( 3 பெண் குழந்தைகள்) 6 மற்றும் 8 வயது (2 ஆண் குழந்தைகள்)
ஆகும்.
ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X