search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை
    X
    கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை

    ஈரானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது

    கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது.
    டெஹ்ரான்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 11-வது இடத்தில் உள்ளது. 

    இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. 

    ஒரே நாளில் 2,621 பேர் பாதிக்கப்பட்டதால், அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் 3 லட்சத்து ஆயிரத்து 530 ஆக உள்ளது. 226 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது.

    2.61 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×