search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    சாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவுகள் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    ஹோனியாரா:

    தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமன் தீவுகள் நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கீசோ நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது.

    இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    கீசோ மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குழுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, காயமோ அல்லது பெரிய அளவில் பொருள்சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
    Next Story
    ×