என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியா மீது சைபர் தாக்குதல் : அரசின் முக்கிய தகவல்களை திருட முயற்சி
Byமாலை மலர்19 Jun 2020 12:32 AM GMT (Updated: 19 Jun 2020 12:32 AM GMT)
ஆஸ்திரேலிய அரசு மற்றும் தனியார் துறைகள் மீது மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கார்ட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. இது எப்போது தொடங்கியது என்ற தகவல் வெளியாகவில்லை.
அந்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியாரின் இணையதள பக்கங்களுக்குள் நுழைந்துள்ள ஹேக்கர்கள் முக்கியமான உள்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களை திருடி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போதுவரை சைபர் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளதாகவும், அதை சரிசெய்ய தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சைபர் தாக்குதலுக்கு ஒரு நாடு பின்னனியில் இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார்.
கொரோனா விவகாரத்தில் ஆஸ்திரேலியா - சீனா இடையே மோதல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X