என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா
Byமாலை மலர்13 May 2020 6:29 AM GMT (Updated: 13 May 2020 6:29 AM GMT)
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் சீனா நேற்று 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
பீஜிங்:
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதே சமயம் சீனாவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
இதனால் அந்த நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எனினும் அந்த நாடு முழுமையாக கொரோனாவில் இருந்து மீண்டுவிடவில்லை. மீண்டும் கொரோனா பாதிப்பு தீவிரமாகலாம் என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.
இந்த நிலையில் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் சீனா நேற்று 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக இந்த செயற்கை கோள்களை சீனா அனுப்பி உள்ளது.
வடமேற்கு மாகாணம் கான்சுவில் உள்ள ஜியாகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து, ஜிங்யூன்-2 01, ஜிங்யூன்-2 02 ஆகிய 2 செயற்கைகோள் குய்சோ-1ஏ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த 2 செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதே சமயம் சீனாவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
இதனால் அந்த நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எனினும் அந்த நாடு முழுமையாக கொரோனாவில் இருந்து மீண்டுவிடவில்லை. மீண்டும் கொரோனா பாதிப்பு தீவிரமாகலாம் என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.
இந்த நிலையில் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் சீனா நேற்று 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக இந்த செயற்கை கோள்களை சீனா அனுப்பி உள்ளது.
வடமேற்கு மாகாணம் கான்சுவில் உள்ள ஜியாகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து, ஜிங்யூன்-2 01, ஜிங்யூன்-2 02 ஆகிய 2 செயற்கைகோள் குய்சோ-1ஏ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த 2 செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X