என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான்: அரசுப்படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் - 12 பேர் பலி
Byமாலை மலர்27 April 2020 10:03 PM GMT (Updated: 27 April 2020 10:03 PM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுப்படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது.
இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே போடப்பட்ட அமைதி ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் நடைபெறத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் தஹர் மாகாணம் குவாஜா பஹூதின் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் அரசுப்படையினர் 7 உயிரிழந்தனர்.
அதேபோல், அந்நாட்டின் குண்டூஸ் மாகாணம் இமாம் ஷாகீப் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த மோதலில் 2 போலீசார் உள்பட 5 பேர் பலியாகினர்.
இதனால் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கும், அரசுப்படையினருக்கும் இடையே நேற்று நடந்த மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X