என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 5 பேர் பலி
Byமாலை மலர்6 Feb 2020 1:43 PM GMT (Updated: 6 Feb 2020 1:43 PM GMT)
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சோதனைச்சாவடியில் இன்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தகார் மாகாணம் பஞ்வஹி மாவட்டம் டலொகன் பகுதியில் சோதனைச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அந்த சோதனைச்சாவடியில் இன்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த சோதனைச்சாவடியில் பணியில் இருந்த ஒரு போலீஸ் சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்ட போலீஸ் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாகவும், அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பஞ்வஹி மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் தூண்டுதலின் மூலம் பல போலீசார் தங்களுடன் பணி புரியும் சக வீரர்கள் மீதே தாக்குதல்களை அரங்கேற்றும் சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X