search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதல் நடந்த இடத்தில் போலீசார் விசாரணை
    X
    தாக்குதல் நடந்த இடத்தில் போலீசார் விசாரணை

    அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை

    அமெரிக்காவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள கிராண்ட்ஸ்வில்லே நகரத்தில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள ஒரு வீட்டில் 4 பேர் குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த குடும்பத்தினர் பற்றிய தகவலை போலீசார் வெளியிடவில்லை.

    இந்த கொடூர செயலில் ஈடுபட்டவரும் அந்த குடும்பத்துக்கு மிகவும் நெருங்கிய உறவுமுறை உடையவர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய நபரை கைது செய்துவிட்டதாகவும், இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்றும் போலீசார் தெரிவித் தனர்.
    Next Story
    ×