search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எகிப்து சாலை விபத்து
    X
    எகிப்து சாலை விபத்து

    எகிப்தில் சோகம் - அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் இந்தியர் உள்பட 28 பேர் பலி

    எகிப்து நாட்டில் அடுத்தடுத்து நடந்த இரு சாலை விபத்துகளில் இந்தியர் உள்பட 28 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கெய்ரோ:

    எகிப்து நாட்டில் செங்கடல் பகுதியில் அமைந்த அய்ன் சொக்னா என்ற சொகுசு விடுதியை நோக்கி 2 சுற்றுலா பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. அவை கெய்ரோ நகரில் லாரி ஒன்றின்மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

    இந்த விபத்தில் இந்தியர் ஒருவர், 2 மலேசிய பெண்கள் மற்றும் எகிப்து நாட்டை சேர்ந்த பேருந்து ஓட்டுனர், சுற்றுலா வழிகாட்டி மற்றும் பாதுகாவலர் ஒருவர் என மொத்தம் 6 பேர் பலியாகினர்.  மேலும் 24 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் சுற்றுலாவாசிகள் ஆவர்.  பலரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.

    இந்த விபத்தை தொடர்ந்து, சில மணிநேர இடைவேளையில், எகிப்தின் வட பகுதியில் போர்ட் செட் மற்றும் டேமியேட்டா ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்ட சாலையில் பேருந்து மற்றும் கார் மோதி விபத்திற்கு உள்ளானது.

    இதில் துணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 22 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக்குழுவினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    அடுத்தடுத்து நடைபெற்ற சாலை விபத்துக்களில் சிக்கி இந்தியர் உள்பட 28 பேர் உயிரிழந்தது எகிப்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×