என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகொரியா தலைவர், ராணுவத்துடன் திடீர் ஆலோசனை
Byமாலை மலர்23 Dec 2019 1:05 AM GMT (Updated: 23 Dec 2019 1:05 AM GMT)
பரபரப்பான சூழ்நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், மூத்த ராணுவ அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.
பியாங்காங்:
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான சமரச பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே இருநாடுகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வலுக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், மூத்த ராணுவ அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். நாட்டின் ராணுவ திறனை மேம்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ திறனின் விரைவான வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த கூட்டத்தின் முடிவில் முக்கிய ராணுவ அதிகாரிகள் சிலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய நபர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான சமரச பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே இருநாடுகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வலுக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், மூத்த ராணுவ அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். நாட்டின் ராணுவ திறனை மேம்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக அந்த நாட்டு அரசு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ திறனின் விரைவான வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த கூட்டத்தின் முடிவில் முக்கிய ராணுவ அதிகாரிகள் சிலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய நபர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X