என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நைஜீரியா அருகே 18 இந்தியர்களுடன் சென்ற கப்பல் கடத்தல்- கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
Byமாலை மலர்5 Dec 2019 3:42 AM GMT (Updated: 5 Dec 2019 3:42 AM GMT)
நைஜீரியா கடற்பகுதியில் இந்தியர்கள் 18 பேருடன் சென்ற எண்ணெய்க் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
புதுடெல்லி:
ஹாங்காங் நாட்டு எண்ணெய்க் கப்பல் ஒன்று நேற்று முன்தினம் ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டு கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. கச்சா எண்ணெய்யுடன் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை திடீரென கடற்கொள்ளையர்கள் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு அந்த கப்பலை கடத்தி சென்றனர்.
இந்த கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்தை சர்வதேச கடல் பாதுகாப்பு நிறுவனமான ஏ.ஆர்.எக்ஸ். வெளியிட்டு உள்ளது. இந்த கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 19 பேர் இருந்தனர். அவர்களது கதி என்ன என்று தெரியவில்லை.
கப்பல் கடத்தப்பட்ட தகவலை அறிந்ததும், நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்த நாட்டு அரசை தொடர்பு கொண்டு கப்பலில் இருந்த இந்தியர்களின் விவரங்களை அறியவும், அவர்களை மீட்கவும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் நைஜீரியா கடற்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X