search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடற்கொள்ளையர்கள்"

    • சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.
    • கடற்கொள்ளையர்களிடம் இருந்து 23 பாகிஸ்தானியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஏடன்:

    ஏமன் நாட்டின் சோகோட்ரா தீவுக்கு அருகே அரேபியன் கடலில் சென்று கொண்டிருந்த ஈரான் நாட்டுக்குச் சொந்தமான அல் கம்பார் 786 என்ற மீன்பிடிக்கப்பலை நேற்று முன்தினம் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரையும் பணய கைதிகளாகப் பிடித்தனர்.

    கப்பல் கடத்தப்பட்டது குறித்த தகவல் கிடைத்ததும் அரபிக்கடலில் ரோந்து பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் உடனடியாக அங்கு விரைந்தன. கடத்தப்பட்ட ஈரான் கப்பலை இந்திய கடற்படையின் கப்பல் நேற்று சுற்றிவளைத்தன. ஈரான் கப்பலில் பயங்கர ஆயுதங்களுடன் 9 கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்தும் கப்பலையும், பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள மாலுமிகளையும் மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு கடற்கொள்ளையர்கள் சரண் அடைந்தனர். கப்பலில் இருந்த 23 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள்.

    இதுதொடர்பாக இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், கப்பல் கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அதிரடி நடவடிக்கை எடுத்து 23 பேரையும் பத்திரமாக மீட்டுள்ளோம் என தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    டாக்கா:

    சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வணிக கப்பல்களை கடத்தி செல்கிறார்கள். அரபிக் கடலில் செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகிறார்கள்.

    கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களை ஒடுக்க இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்திலும் சோமாலிய கடற்கொள்ளையர் கடத்திய கப்பலை இந்திய கடற்படை மீட்டது.

    இந்த நிலையில் இந்திய பெருங்கடல் அருகே வங்காளதேச நாட்டின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர்.


    அந்த கப்பலை மறித்து ஆயுதங்களுடன் 22 பேர் ஏறியுள்ளனர். கப்பலில் இருந்த ஊழியர்களை மிரட்டி சிறை பிடித்துள்ளனர். தற்போது கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு கூறும்போது, கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கப்பலில் ஆயுதங்களுடன் 22 பேர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    கப்பலில் எத்தனை ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்திய மாலுமிகள் உள்பட 21 ஊழியர்கள் இருந்தனர்.
    • கடற்கொள்ளையர்கள் இல்லாதது உறுதி செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    அரபிக் கடலில் சோமாலியா கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டு சரக்கு கப்பலை (எம்.வி.லிலா நார்போக்) கடற்கொள்ளையர்கள் கடத்தினர். 5 முதல் 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் கப்பலில் ஏறினர்.

    இந்த தகவலை கப்பலில் இருந்த ஊழியர்கள், இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பின் இணைய தளத்தில் வெளியிட்டனர். கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்திய மாலுமிகள் உள்பட 21 ஊழியர்கள் இருந்தனர்.

    அந்த கப்பலை மீட்கும் நடவடிக்கையில் இந்திய கடற்படை உடனடியாக களம் இறங்கியது. ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பல், கடத்தப்பட்ட கப்பலை மீட்கும் பணிக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் கடற்படை ரோந்து விமானம், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் அனுப்பப்பட்டன.

    கடற்படை கமாண்டோக்களும் கப்பலை மீட்க அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் கடற்படை கமாண்டோ வீரர்கள் அதிரடியாக சரக்கு கப்பலுக்குள் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    கப்பலில் இருந்த 21 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். அதன்பின் கப்பல் முழுவதும் சோதனை செய்த போது அங்கு கடற்கொள்ளையர்கள் இல்லை. அவர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் கடத்தப்பட்ட கப்பல் மீட்கப்பட்ட வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. அதில் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை இந்திய போர்க் கப்பல், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் சுற்றி வளைத்து கண்காணித்தது.

    அங்கு ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் கடற்படை கமாண்டோ வீரர்கள், படகில், சரக்கு கப்பல் அருகே சென்றனர். அங்கிருந்து கப்பலுக்குள் ஏறி சோதனையில் ஈடுபட்டு கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடற்கொள்ளையர்கள் இல்லாதது உறுதி செய்யப்பட்டது.

    இந்தியாவின் கடும் எச்சரிக்கையால் கப்பலை கடத்தும் முயற்சியை கடற்கொள்ளையர்கள் கை விட்டிருக்கலாம் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலின் உரிமையாளரான லீலா குளோபலின், தலைமை நிர்வாகி ஸ்டீவ் குன்சர், இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்தார்.




    • இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது.
    • போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சோமாலியா:

    அரபிக்கடல் பகுதியில் கடந்த 14-ந்தேதி மால்டா நாட்டு கொடியுடன் சென்ற எம்.வி. ரூன் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினார்கள்.

    அந்த கப்பலில் ஊழியர்கள் உள்பட 18 பேர் இருந்தனர். அதில் பயணம் செய்த மாலுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவருக்கு உதவி செய்வதற்காக இந்திய கடற்படை கப்பல் உதவி கோரப்பட்டது.


     இதையடுத்து இந்திய கடற்படையை சேர்ந்த விமானம் அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா நாட்டுக்கு செல்வது தெரிய வந்தது. உடனே இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் கொல்கத்தா அந்த பகுதிக்கு சென்று கடத்தப்பட்ட கப்பலை இடைமறித்தது. இதனால் கடற்கொள்ளையர்கள் உடல்நலம் சரியில்லாமல் இருந்த மாலுமியை விடுவித்தனர். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் கடற்கொள்ளையர்களை தடுக்கும் நடவடிக்கையில் இந்தியா தீவிரம் காட்டி உள்ளது. ஏடன் வளைகுடா பகுதியில் 2-வது போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சி கப்பல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன வசதிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விடுவிக்கப்பட்ட மாலுமியை இந்திய போர்க்கப்பல் மீட்டு, சிகிச்சைக்காக ஓமனுக்கு அனுப்பி வைத்தது.
    • கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிறது என்றும் கடற்படை தெரிவித்தது.

    அரேபியன் கடல் பகுதியில் மால்டா நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர். இதற்கிடையே கடத்தப்பட்ட கப்பலில் மாலுமி ஒருவர் காயம் அடைந்தார். அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டது. இதையடுத்து அந்த மாலுமியை கடற்கொள்ளையர்கள் விடுவித்தனர்.

    இதற்கு இந்திய கடற்படை போர்க்கப்பல் உதவியது. விடுவிக்கப்பட்ட மாலுமியை இந்திய போர்க்கப்பல் மீட்டு, சிகிச்சைக்காக ஓமனுக்கு அனுப்பி வைத்தது. கடத்தப்பட்ட கப்பல் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அந்த கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிறது என்றும் கடற்படை தெரிவித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீனவர்கள் செந்தில்குமார், மதன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.
    • வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், மதன், சிவகுமார், நித்தியகுமார். இவர்கள் 4 பேரும் நேற்று இரவு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இன்று அதிகாலை நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென மீனவர்கள் படகில் ஏறி 4 பேரையும் கத்தியை காட்டி பொருட்களை கொடுக்குமாறு மிரட்டினர். அதற்கு மீனவர்கள் கொடுக்க மறுத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் 4 பேரையும் மூங்கில் கட்டையால் சரமாரியாக தாக்கி மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புடைய மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் செந்தில்குமார், மதன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்களை சக மீனவர்கள் மீட்டு வேகவேகமாக கரைக்கு திரும்பினர். பின்னர் 2 பேரையும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் அடிக்கடி தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருவது மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
    • மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆகஸ்ட் 10-ந்தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி,பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

    ஆகஸ்ட் 20-ந் தேதி அதே வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    ஆறுகாட்டுத்துறைக்கு மிக அருகில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும், இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கியும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இந்திய மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை நடத்துவது 6-வது முறையாக நடந்திருக்கிறது.

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையினர் தொடர் தாக்குதல் நடத்துவதை இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல் படை வேடிக்கை பார்ப்பது வேதனை தருகிறது.

    இலங்கை கடற்கொள்ளையர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கண்இமைக்கும் நேரத்தில் மீனவர்கள் ஹரிகிருஷ்ணன் உள்பட 5 மீனவர்களையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினர்.
    • தொடர் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே உள்ள செருதூர் கிராமத்தில் இருந்து சக்திபாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 26), சூர்யா (25), கண்ணன் (23), சிரஞ்சீவி, சக்தி பாலன் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 5 பேரும் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் நாகை மீனவர்கள் பைபர் படகில் ஏறினர். கண்இமைக்கும் நேரத்தில் மீனவர்கள் ஹரிகிருஷ்ணன் உள்பட 5 மீனவர்களையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினர்.

    இந்த தாக்குதலில் மீனவர்கள் 5 பேரும் காயமடைந்து படகில் சரிந்து விழுந்தனர். இதனை தொடர்ந்து 550 கிலோ வலை, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிடித்து வைக்கப்பட்ட மீன்கள், வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ் கருவி, பேட்டரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பினர்.

    கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள் 5 பேரும் இன்று காலை கரைக்கு திரும்பி உறவினர்களுக்கு நடந்த விவரங்களை கூறினர்.

    இது குறித்து தகவல் அறிந்த நாகை கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த மீனவர்களை நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோடியக்கரையில் மீன்பிடித்து கொண்டிருந்த 4 நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பறித்து சென்றனர். தற்போது மீண்டும் கோடியக்கரையில் இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கீழையூர் கடலோர காவல் படை குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    • படுகாயம் அடைந்த மீனவர்கள் சிகிச்கைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகை மீனவர்கள் மற்றும் வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இதனால் அவர்களின் தொழில் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதைப்போன்ற சம்பவம் இன்று நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

    நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பகுதியை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமாக படகு உள்ளது.

    இந்நிலையில் கடந்த 21-ந்தேதி சபாபதிக்கு சொந்தமான படகில் பிரகாஷ், பிரவின், திருமுருகன், பிரதீப் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 அதிவேக விசை படகில் 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர்.

    அவர்கள் சபாபதிக்கு சொந்தமான படகில் ஏறி அதில் இருந்த 4 மீனவர்களை கடுமையாக தாக்கினர். பின்னர் படகில் இருந்த சுமார் 500 கிலோ மீன்பிடி வலைகள், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் வாக்கிடாக்கிகள், தொழில் நுட்ப உபகரணங்கள் ஆகியவற்றை கொள்ளை எடுத்து கொண்டு மீன்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    பின்னர் படுகாயத்துடன் 4 மீனவர்கள் கோடியக்கரை திரும்பினர். பின்னர் இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், கடலோர காவல் படை குழுமத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து கீழையூர் கடலோர காவல் படை குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    படுகாயம் அடைந்த மீனவர்கள் சிகிச்கைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் கோடியக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நைஜீரிய கடலில் பயணம் செய்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த சரக்கு கப்பலில் இருந்து 12 மாலுமிகளை கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சூரிச் :

    ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இருந்து துறைமுக நகரான ஹார்கோர்ட்டை நோக்கி சுவிர்சலாந்தை சேர்ந்த சரக்கு கப்பல் சென்றுகொண்டிருந்தது. கோதுமை ஏற்றிச்சென்ற அந்த கப்பல் நைஜீரிய கடலின் தென் கிழக்கில் உள்ள போனி தீவில் இருந்து 45 நாட்டிகல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர்களின் திடீர் தாக்குதலுக்கு உள்ளானது.  

    தாக்குதலுக்கு பின்னர் கப்பலில் ஏறிய கடற்கொள்ளையர்கள் அதில் இருந்த 19 மாலுமிகளில் 12 பேரை சிறைபிடித்து சென்றுள்ளனர். இந்த தகவலை கப்பலின் கேப்டன் க்லாரஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

    இந்த கடத்தல் சம்பவம் குறித்து சுவிட்சர்லாந்து வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடத்தப்பட்ட மாலுமிகள் 12 பேரும் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள் இல்லை என தெரிவித்துள்ளது. எனினும் அவர்களின் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் எனும் தகவலை வெளியிடவில்லை.

    மேலும், கடத்தப்பட்டவர்களை விரைவாகவும், பத்திரமாகவும் மீட்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக கப்பல் நிறுவனமும், இந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக நைஜீரிய கடற்படையும் தெரிவித்துள்ளது.
    ×