search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cargo shipping"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    டாக்கா:

    சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வணிக கப்பல்களை கடத்தி செல்கிறார்கள். அரபிக் கடலில் செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகிறார்கள்.

    கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களை ஒடுக்க இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்திலும் சோமாலிய கடற்கொள்ளையர் கடத்திய கப்பலை இந்திய கடற்படை மீட்டது.

    இந்த நிலையில் இந்திய பெருங்கடல் அருகே வங்காளதேச நாட்டின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர்.


    அந்த கப்பலை மறித்து ஆயுதங்களுடன் 22 பேர் ஏறியுள்ளனர். கப்பலில் இருந்த ஊழியர்களை மிரட்டி சிறை பிடித்துள்ளனர். தற்போது கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கை அமைப்பு கூறும்போது, கடத்தப்பட்ட கப்பலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கப்பலில் ஆயுதங்களுடன் 22 பேர் உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    கப்பலில் எத்தனை ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் எந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்கள் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

    • தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஷ்பூ சுந்தருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • சென்னை -புதுவை இடையிலான கப்பல் போக்குவரத்துச் சேவையின் மூலமாக போக்குவரத்துச் செலவு குறைந்து கடல்வழி வர்த்தகம் அதிகரிக்கும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஷ்பூ சுந்தருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மகளிர் நலன் காக்க அகில இந்திய அளவில் தமிழகத்திற்கு மீண்டும் ஒரு அங்கீகாரம் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

    பிரதமரின்" சாகர் மாலா" திட்டத்தின்கீழ் சென்னை -புதுவை இடையேயான சரக்குக் கப்பல் போக்குவரத்துச் சேவையை தொடங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி சர்பானந்தா சோனுவாலுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை -புதுவை இடையிலான கப்பல் போக்குவரத்துச் சேவையின் மூலமாக போக்குவரத்துச் செலவு குறைந்து கடல்வழி வர்த்தகம் அதிகரிக்கும். மேலும், வருங்காலத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

    ×