என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே நின்ற பெண்ணுக்கு ஏற்பட்ட சோக முடிவு
Byமாலை மலர்27 Nov 2019 7:43 PM GMT (Updated: 27 Nov 2019 7:43 PM GMT)
அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே நின்ற பெண்ணை காட்டு பன்றிகள் கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
நியூயார்க்:
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டு பன்றிகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் இந்த காட்டு பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து, மக்களை அச்சுறுத்தி வருவது வழக்கம்.
அந்த வகையில் ஹூஸ்டன் நகரில் உள்ள அனாஹூவாக் என்ற இடத்தில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் உள்ளூர் அதிகாரிகள் கூண்டுகளை வைத்து காட்டு பன்றிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அனாஹூவாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கார பெண்ணாக இருந்த கிறிஸ்டின் ரோலின்ஸ் (வயது 59) நேற்று முன்தினம் மாலை தான் வேலை செய்யும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காட்டு பன்றிகள் கூட்டமாக வந்தன. இதை பார்த்து பயந்துபோன கிறிஸ்டின் ரோலின்ஸ் வீட்டுக்குள் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காட்டு பன்றிகள் அவரை சூழ்ந்து கொண்டு கடித்து குதறின. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டு பன்றிகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் இந்த காட்டு பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து, மக்களை அச்சுறுத்தி வருவது வழக்கம்.
அந்த வகையில் ஹூஸ்டன் நகரில் உள்ள அனாஹூவாக் என்ற இடத்தில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் உள்ளூர் அதிகாரிகள் கூண்டுகளை வைத்து காட்டு பன்றிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அனாஹூவாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கார பெண்ணாக இருந்த கிறிஸ்டின் ரோலின்ஸ் (வயது 59) நேற்று முன்தினம் மாலை தான் வேலை செய்யும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காட்டு பன்றிகள் கூட்டமாக வந்தன. இதை பார்த்து பயந்துபோன கிறிஸ்டின் ரோலின்ஸ் வீட்டுக்குள் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காட்டு பன்றிகள் அவரை சூழ்ந்து கொண்டு கடித்து குதறின. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X