என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பான் மன்னருடன் போப் பிரான்சிஸ் சந்திப்பு
Byமாலை மலர்25 Nov 2019 12:26 PM GMT (Updated: 25 Nov 2019 12:26 PM GMT)
ஜப்பான் சென்றுள்ள போப் பிரான்சிஸ் அந்நாட்டு மன்னர் நருஹிட்டோவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டோக்கியோ:
உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதகுருவான போப் பிரான்சிஸ் தாய்லாந்து மற்றும் ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தாய்லாந்து பயணத்தை முடித்த போப் பிரான்சிஸ் ஜப்பான் சென்றார். அங்கு இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த ஹிரோஷிமா நாகசாகி மக்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய போப் அணு ஆயுதங்களை கைவிட்டு அமைதியை நிலைநாட்டுமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் ஜப்பான் மன்னர் நருஹிட்டோவை இன்று இம்பீரியல் அரண்மனையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவையும் மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார்.
ஜப்பான் மன்னர் நருஹிட்டோவின் தாய், அரசி மிச்சிகோ கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X