search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் குண்டு வெடிப்பு நடந்த பகுதி
    X
    கார் குண்டு வெடிப்பு நடந்த பகுதி

    சிரியாவில் கார் குண்டு வெடிப்பு - 9 பேர் பலி

    சிரியாவில் இன்று நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் குர்திஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தல் அப்யாட் பகுதியை துருக்கி படையெடுத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.  

    துருக்கியின் எல்லையோரம் அமைந்துள்ள இப்பகுதியில் குர்திஷ் போராளிகள் , ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், தல் அப்யாட் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கார் இன்று திடீரென வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.

    இந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை .
    Next Story
    ×